பேரவை விழான்னாலே எங்க ஊருலேருந்து ஒரு பதினஞ்சு, இருபது பேரு போறது வழக்கமுங்க. போன வருசம், அதுக்கு முந்தின வருசமெல்லாம் ஏதோ இந்தச் சின்னப் பிள்ளைகளைப் பாட வச்சு, ஆட வச்சு தமிழை வளத்தோமுங்க. சின்ன சங்கமுன்னாலும் எதையாச்சும் வித்தியாசமா செஞ்சுகிட்டே இருக்க கொணம் எங்க சங்கத்து ஆளுகளுக்கு இருக்குங்க. அதான் இந்த வருசம் எதையாச்சும் வித்தியாசமாச் செய்யணுமுன்னு நெனச்சமுங்க. அந்த நேரத்துலத்துலதான் ஒலகத் தமிழினத்துக்கு இடி விழுந்த மாதிரியான நேரம். ஈழத்துத் தாக்கத்தையே நடிக்கிறதுன்னு முடிவெடுத்தோம். ஒரு இருபது பேரு கூடுனோம். விழா மலர்ல 'தேவகி செல்வன், பரணி இடைக்காடர், பெரியண்ணன் சந்திரசேகரன்' எல்லாரும் தொகுத்திருந்த கேள்வி பதிலையே கதையோட கருவா வச்சிக்கிட்டோமுங்க. அதே வசனம் கூத்துல வருமுங்க. பாத்தீங்கன்னா தெரியும். வெளங்காத ஒருத்தரு கேள்வி கேப்பாரு, இன்னொருத்தரு பதில் குடுப்பாரு. பதில் சொல்லுறப்பவே அதப் பத்திப் பின்னாடி அந்தக் காட்சி விரியும். இதான் கூத்தோட வடிவமுங்க.
ரெண்டு வாரம் பயிற்சி எடுத்திருப்போம். அந்த ரெண்டு வாரமும் பாத்தீங்கன்னா, தினமும் கதையோட வசனம் மாறும். காட்சி மாறும். கடைசி நாள் வரைக்கும் மாறிக்கிட்டே இருந்துச்சுன்னா பாத்துக்கங்க. ஆனா சும்மா சொல்லக்கூடாது. நடிச்ச ஒவ்வொருத்தரும் தன் பங்குக்கு "யோசனை யோகராசா"வாக மாறி எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதுவும் நல்லதுக்குத்தான். எல்லாம் சேர்ந்துதான் கூத்தை நல்லா இருக்கும்படி வச்சிச்சு. தம்பி இளவரசன் அற்புதமாப் பேசுனதை நீங்களே பாத்துக்கங்க. அப்புறம் மணி ஐயாவோட குரலும் நடிப்பும் அருமை. யாருமே 'நடிக்கலை'ங்கறதுதான் இன்னொரு சிறப்பு. கூத்து முடிஞ்சு வெளியில வரும்போது மேக்கப் ரூமுல இருந்து அடுத்த நிகழ்ச்சிக்காகத் தயார் செஞ்சுக்கிட்டிருந்தவங்க கட்டிப் புடிச்சு அழ ஆரம்பிச்சுட்டாங்க. எத்தனை பேரு கலங்கின கண்ணோட எங்களைப் பாத்து நன்றி சொன்னாங்கன்னு நெனப்பில்ல. பேரவை விழா நடந்த அந்த மூன்று நாட்களும், யாராவது ஒருத்தர் எங்கக் குழு ஆள் யார்கிட்டயாச்சும் கூத்தைப் பத்திப் பேசிக்கிட்டே இருந்தாங்க.
இலங்கை இனப்பிரச்சினையின் அத்தனை அம்சங்களையும் சொல்லிவிட இருபது நிமிடங்கள் போதாது. ஆனால் ஓரளவுக்கு ஒரு அறிமுகத்தை, அறியாதவங்களுக்கு ஒரு செய்தியைச் சொன்னோம்ங்கற திருப்தி எங்களுக்கு இருந்திச்சு. தமிழங்களோட துக்கத்துல தமிழங்களே பங்கெடுக்கலைன்னா எப்படிங்க. நம்ம மேல திணிக்கப்பட்டிருக்க அடக்குமுறையை நாமளே மறைக்கலாமா? அதான் அந்தத் தெருக்கூத்து. ஏற்கெனவே பனைநிலத்தோட ஒளிப்படத்தைப் பார்த்திருப்பீங்க. அப்படி இல்லன்னா, பாத்துட்டுப் போங்க. பாத்துட்டு நண்பர்களுக்கும் அனுப்புங்க. யாரோ சொன்னாங்க, ஜூனியர் விகடன் பத்திரிகையில இதப் பத்தி வந்திருக்குன்னு. போயிப் பார்த்தா, படம் போட்டு "மகிந்தவைக் கிண்டலடித்து நாடகம்" அப்படின்னு படத்துக்குள்ள ஒரு வரி. பகீர்னு இருந்துச்சு. என்னடா அந்தப் பத்திரிகைக் காரங்க, நாடகத்தைப் பார்த்தபிறகுதான் எழுதினாங்களா, இல்ல நியூயார்க் அப்பார்ட்மெண்டு கதவைப் பூட்டிக்கிட்டு கனவு எதுனா கண்டு எழுதினாங்களான்னு தெரியல. ஏங்க, கிண்டலடிக்கப்படுறதுக்கும் ஒரு தகுதி வேணாமா? படத்தைப் பாத்த பிறகு நீங்களே சொல்லுங்க, இது மகிந்தவைக் கிண்டலடிக்கிற நாடகமா இல்ல, மக்களோட போராட்டத்தைப் பத்தின நாடகமான்னு. எந்த ஊடக தர்மத்தைக் கேள்வி கேட்டோமோ, அந்த ஊடக தர்மம் கேலிக்கூத்தானது ஜூனியர் விகடன் கட்டுரையில தெரியுமுங்க.
பெருமைக்காகச் சொல்லலீங்க. இதுல நடிச்ச அம்புட்டு பேரும் முனைவருங்க. அதான் டாக்டருங்க. இவுங்க ரெண்டு வாரம் பாடுபட்டாலே இப்படி ஒரு அருமையான கூத்தைக் கட்ட முடியுதுங்க. நீங்களும் ஏனுங்க முயற்சி செய்யக் கூடாது? எவ்வளவோ சொத்தை, கடி நாடகமெல்லாம் பார்க்கிறோமுங்க. அதை எல்லாம் பாத்துட்டு வயித்துலயும், வாயிலயும் அடிச்சுக்குறோம். ஏன் மாறமாட்டேங்குறாங்கன்னு கேக்குறோம். ஆனா, மாற்றம் அப்படிங்கறது நம்மகிட்டேயிருந்துதானுங்க பொறக்கணும். நீங்களே நாடகம் போடுங்க. கூத்து கட்டுங்க. கைதட்ட ஆளுங்க இருப்பாங்க. உணர்வு இருக்கவங்க இன்னும் உயிரோடதான் இருக்காங்க. உங்களுக்குப் பிடிச்ச கதையை, நீங்க மக்களுக்குச் சொல்ல நினைச்ச கதையை நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. முயற்சி செய்யுங்க. வாழ்த்துக்கள்!
கூத்துக் கட்டின அன்புக் கலைஞர்கள்: இன்பன், மணி ஐயா, இளவரசன், யசோதை, சுபத்திரை, இளையோன், அரிநாதர், பத்து, உதயன், பகலவன், சிபிச்சக்கரவர்த்தி, மாசிலாமணி, பனையேறி, திருமதி பனையேறி, நெல்லி, யாழிசை, பிரியம் மற்றும் உதவிய, ஆலோசனைகளை வழங்கிய வளர் அக்கா, தண்டபானி ஐயா ஆகியோர். இப்படத்தை எடுத்தவர் அன்பிற்குரிய நண்பர் அண்ணாதுரை.
ஒளிப்படம்:
எழுதியவர்: பனையேறி
Saturday, July 18, 2009
Wednesday, March 4, 2009
தமிழினப் படுகொலையைக் கண்டித்து சார்லஸ்டனில் போராட்டம் !
அன்புடையீர்,
வணக்கம்!
ஈழத்தில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்படும் தமிழினப் படுகொலை, உலகத் தமிழர்களை உலுக்கியெடுப்பதைப் போல, பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினரின் நெஞ்சங்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்துகிறது. நாகரீகமடைந்த உலகில் நிகழும் இவ்வன்கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், அமெரிக்க அரசினை விரைந்து தலையிட்டு, தமிழர்களுக்கு விடியலையும் விடுதலையையும் வழங்கிட ஆவன செய்யுமாறு வலியுறுத்தவும் எங்களது தமிழ்ச் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. இதனை முன்னிட்டு, வரும் மார்ச் 7ஆம் நாள் சனிக்கிழமை, மதியம் 2 முதல் 5 மணி வரை, சார்லஸ்டன் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள மரியன் சதுக்கத்தில் (Marion Square, Charleston, SC) யூத இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் அருகில் ஒரு அமைதிப் பேரணியை நடத்தவுள்ளோம். அனைவரும் வந்து கலந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம். நன்றி!
வணக்கம்!
ஈழத்தில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்படும் தமிழினப் படுகொலை, உலகத் தமிழர்களை உலுக்கியெடுப்பதைப் போல, பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினரின் நெஞ்சங்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்துகிறது. நாகரீகமடைந்த உலகில் நிகழும் இவ்வன்கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், அமெரிக்க அரசினை விரைந்து தலையிட்டு, தமிழர்களுக்கு விடியலையும் விடுதலையையும் வழங்கிட ஆவன செய்யுமாறு வலியுறுத்தவும் எங்களது தமிழ்ச் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. இதனை முன்னிட்டு, வரும் மார்ச் 7ஆம் நாள் சனிக்கிழமை, மதியம் 2 முதல் 5 மணி வரை, சார்லஸ்டன் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள மரியன் சதுக்கத்தில் (Marion Square, Charleston, SC) யூத இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் அருகில் ஒரு அமைதிப் பேரணியை நடத்தவுள்ளோம். அனைவரும் வந்து கலந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம். நன்றி!
Labels:
அமெரிக்கத் தமிழர்கள்,
அமெரிக்கா,
ஈழம்,
தமிழ்ச் சங்கம்,
போராட்டம்
Sunday, February 8, 2009
சார்லச்டன் தமிழ்ச் சங்கப் பொங்கல் விழா 2009
இந்த மண்ணுல நம்ம மனுசனோட வளர்ச்சியை நினைச்சு பார்த்தீங்கன்னா தெரியும் அவன் விலங்கிலிருந்து மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இன்னைக்கு உலகத்தில் அங்கிங்கெனாதபடி ஈரேழு திசைகளையும் தன் கட்டுக்குள் வசப்படுத்தியிருகிறான்னு. அதற்கான மூலகாரணமே கற்காலத்து மனிதன் ஆற்றுவெளி சமுதாயத்தை உருவாக்கியதிலிருந்து வந்த வாழ்க்கைமுறைதான். ஆற்றுவெளியின் அவன் ஆரம்பிச்ச உழவுத்தொழில் நாகரீக வளர்ச்சியின் வித்து, அது விருட்சமாகி, பல்கிப்பெருகி விண்ணையே வசப்படுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கு.
நம்ம பண்டைய தமிழர்கள் இந்த உழவுத்தொழிலின் முக்கியத்துவம் தெரிஞ்சு வந்ததனாலேயே, அதன் ஆதாரமான இயற்கையை வணங்கி அதோடு ஒன்றிணைந்து வாழ்ந்திருக்காங்கன்னு தெரியுது. அறிவியலே வளர்ச்சியடையா அக்காலத்தில் தங்களோட அறிவின் வளர்ச்சியினாலே வானிலை மற்றும் பருவகால மாற்றங்களை தெளிவாக தெரிஞ்சு காலங்களை இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர், முன்பனி, பின்பனி எனப்பகுத்து அதுப்படி உழவுத்தொழிலை செம்மைப்படுத்தி வந்திருக்காங்க. அதுல இளவேனிற் காலம் அவங்களுக்கு முக்கியமான காலம். ஏன்னு பார்த்தீங்கன்னா அப்பதான் அந்த உழவின் பயனை அனுபவிக்கிற, தம் வாழ்வின் வசந்தங்களை மகிழ்ச்சியாக தொடங்குகிற காலம் – அதனால தான் இளவேனிற் காலத்தை அவங்க தமிழ் புத்தாண்டின் தொடக்கமாக தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு தெரியுது. இந்த புத்தாண்டில, தமக்கு உணவுதந்த அந்த ஆதார சக்தியான ஆதவனை வழிபட்டு, பொங்கி வரும் பொங்கலை இயற்கைக்கு படையலிட்டு ஒரு பொங்கல் திருவிழாவாக கொண்டாட ஆரம்பிச்சு, அது தமிழ்சமுதாயத்தின் ஒரு பண்பாட்டு அடையாளமாக அமைஞ்சது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச சேதி.
அது சரி, பூலோகத்தின் இன்னொரு கோடியில், ஆசுலே மற்றும் கூப்பர் ஆத்துவெளியில, அன்றைய தமிழர்களின் இன்றைய சந்த்திகளான வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்ச் சமுதாயம் தைப்பொங்கல் திருநாளை அன்னிய மண்ணில் எப்படி கொண்டாடி மகிழ்கிறாங்கன்னு பார்க்கலாமா ?
இந்த மாதிரியான விழாக்கள்ல ஒரு சுவராசியமான விசயம் என்னன்னா - விழா அன்னைக்கு வந்து இரசிக்கிற பார்வையாளர்களுக்கு அந்த நாள் மட்டும்தான் திருநாள், ஆனா அன்றைய விழாக்கலைஞர்களுக்கு அன்னைக்கு மட்டுமில்ல கடந்த பல வாரங்களாகவே கொண்டாட்டமான நாட்கள். எப்பிடின்னு கேட்டீங்கன்னா, விழாவிற்காக ஆறேழு வாரங்களுக்கு முன்னாலே பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக கூடி, மத்தவங்க ஒத்திகையில பண்ற தப்ப பார்த்து சிரிச்சு, தாமே பண்ற தப்பை சமாளிச்சு, எல்லாரும் சமைச்சு கொண்டு வர்ற அத்தனை சாப்பாட்டு வகைகளையும் ஒரு கட்டு கட்டிட்டு, சுகமா கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சு, மத்தவங்கள கேலி பண்ணி், அதகளம் பண்ணி தூதுகலமாக பொஙகல் விழாவை எதிர்பார்த்துகிட்டு இருக்கிறது ஒரு சுகமான சுவராசியம்தான் - மொத்தத்தில பல வாரக்கடைசி நாட்கள் கலாட்டா கச்சேரியாத்தான் இருந்துச்சு.
பிரபல திரைநட்சத்திரங்களைக்கூட கூட்டமா வேலை வாங்கி சமாளிச்சிடலாம்., ஆனா நம்ம ஆட்கள் இருக்காங்க பாருங்க – அவங்கள சமாளிச்சு, ஆட்களையும் இழுத்துப் பிடிச்சு ஒத்திகைக்கு வரவழைக்கிறதே ஒரு தனி கதையாகவே எழுதலாம். ஒரு அஞ்சு பேரு வந்தா மிச்சம் பத்து பேரு வரமாட்டாங்க! மதியம் சாப்பாட்டு நேரத்துக்கு வரச்சொன்னா இரவுச்சாப்பாட்டு நேரம் வரைக்கும் வராம நம்ம பரபரப்ப கிளப்பி விடுவாங்க. ஒத்திகையை பாருங்கன்னா, அசராம உக்காந்து ஊர்க்கதைய பேசி கலகலக்கச் செய்வாங்க. இதையெல்லாம் சமாளிச்சு, சங்கத்தலைவர் சுந்தர்தான் அவரோட அயராத வேலைப்பளுவிற்கு மத்தியில் பல கலை நிகழ்ச்சிகள் உருவாகிற மாதிரி பார்த்துக்கிட்டார்.
இந்த தடவை டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம்…மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான் வசதி, ஒலி, ஒளி அமைப்பு, உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம்ன்னு நீங்க பார்த்தாலே தெரியும். வாங்க உள்ளே போகலாம்.

ஆகா….இதென்ன தப்பித்தவறி தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்திட்டோமா ?....எங்க பார்த்தாலும் கண்ணைப்பறிக்கிற மாதிரி பட்டுப்புடவை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையில நம்ம மக்கள் – ஒரு கலக்கு கலக்கிட்டாங்க போங்க. விழா ஏற்பாடுகளை அரக்க பரக்க ஏற்பாடு பண்ற மக்கள் சில பேர், ஒத்திகைகளை மனசில பார்த்துகிட்டே வெளியே பரபரப்பு தெரியாம நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்கிற சில பேர், சுத்தி சுத்தி ஓடியாடி உற்சாகமா அரங்கத்தையே அதிர வைக்கிற சுட்டிப்பசங்க சில பேர், பல நாட்கள் கழிச்சு பார்க்கிற சில நண்பர்களோட அரட்டை அடிக்கிற மக்கள் சில பேர், உள்ள வர்ற நம்ம மக்களை வரவேற்கிற மாதிரி…அவங்க கொண்டு வர்ற உணவு பதார்த்தங்கள அப்பிடியே மோப்பம் பார்க்கிற இளவட்டங்கள் சில பேர், - இப்படி பல வித நண்பர்களை பார்க்கிறதே கண்கொள்ளா காட்சியா இருக்கு, இல்லையா.
குத்து விளக்கு ஏற்றிய பின்பு தமிழ்த்தாய் பாடப்பட்டது. கணேசு – சுந்தர் அவர்கள் வரவேற்புரை அளித்தனர். முனைவர் தண்டபாணி அவர்கள் சமூகவுரை அதற்கடுத்ததாக இருந்தது. இலங்கையில் போர்முனையில் இறந்த அப்பாவித்தமிழ் மக்களுக்கு சில நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.




விழாவை கீர்த்தி மற்றும் சண்முகம் அழகா தொகுத்து வழங்கினாங்க. பார்வையாளர்களுக்கு ஆரம்பத்திலேயே அருமையான நடன விருந்து காத்திருந்தது. சிறுமி இனியாவின் நாட்டியம் இருந்தது – பார்த்துகிட்டிருந்த சின்னப்பசங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க.

அடுத்ததா சார்லச்டன் தமிழ் சிறுவர் பள்ளி மாணவர்கள் அமிர்தா, ஆகாச், அசுரிதா, சிபி, மாசிலன் வழங்கிய திருக்குறள் பாடல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்றது. சிறுவர்கள் சிறுவரி தவறாமல் குறள் பாடி மகிழ்வித்தனர்.

குழந்தைகளுக்கான இணையத் தளங்களை முனைவர் ஹரிநாத் அருமையாக தொகுத்து விளக்கிக்காட்டினார்.

நிகழ்ச்சியில அடுத்தது தனித்துவமான ஏலோலோ நாட்டிய நாடகம். மீனவர்களின் வாழ்க்கையில் படும் அவதிகளை, அவ்வாழ்வின் அல்லல்களை அப்பிடியே படம் பிடிச்சுகாட்டுற மாதிரி நடிச்சிருந்தாங்க நம்ம சுந்தர், யுவராசு, கொளசிக் மற்றும் செந்தில் அவங்க. குறிப்பா, மீனவர்களின் ஒவ்வொரு காலகட்டங்களையும் நாட்டிய வடிவில் நடிச்சு காட்டிகிட்டிருந்தாங்க. படகோட்டி துடுப்பு போடுகிற மீனவ மக்களா நடிச்சது சந்தோசு, உதய், விக்னேசு, சிவா, குமரன் மற்றும் பத்மனாபன் நண்பர்கள். மீனவர்களின் கடின வாழ்க்கையை நாடக நடினமாக பார்த்து பார்வையாளர்கள் மனசு கலங்கிடுச்சு.


சென்னையிலிருந்து சார்லச்டன் வரை – இது நாடகத்தலைப்பு, நடிச்சவங்க சண்முகம், அமிர்தா, சந்தோசு, குமரன், மாரிமுத்து அய்யா மற்றும் லாவண்யா. புதிதா அமெரிக்கா வந்து கலாச்சார குழப்பத்திலிருக்கிற நபர்களைப் பற்றிய நாடகம் அருமையாக இருந்தது.


கும்மி நடனம் அடுத்து வருதுன்னு அறிவிப்பாளர் சொல்ல எங்களுக்கெல்லாம் ஒரே ஆர்வம் எப்படி இருக்கும்ன்றத பார்க்க, கீதா, சானகி, லட்சுமி, சந்தியா, வானதி, மற்றும் வினு கும்மியடிச்சு நடனம் ஆட வந்திருந்தாங்க. பட்டுப்புடவையில பகட்டா வந்திருந்து ஆடிறாங்க பாருங்க ஆட்டம் - நம்ம ஊரு கிராமப்பொண்ணுகளே வந்து ஆடி பட்டைய கிளப்பின மாதிரி இருந்த்து. ஒரு தப்பில்ல, தாளம் பிசகல்ல, அத்தனை நேர்த்தி, அத்தனை அசத்தல். இதப்பாத்து நம்ம மனசு ரெம்ப நேரமா கும்மியடிச்சுகிட்டே இருந்தது.


பொங்கல் விழாவில நடந்த ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி என்னன்னு கேட்டிங்கன்னா – அது திருக்குறள் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சிதான்.
சார்லச்டன் தமிழ்ச்சங்க நண்பர்கள் குழுவின் ஒரு கனவுத்திட்டம் தான் உலகப்பொதுமறையை இசைவடிவமாக ஓதி தமிழ்சமுதாயத்திடம் கொண்டு சேர்ப்பிக்கும் ஒரு அரிய முயற்சி. இதற்காக பலமாதங்களாக பாடுபட்டு இசைவடிவமாக கொண்டு வந்து சாதனை பண்ணி இருப்பது பெருமையான ஒரு விசயம். இதப்பத்தி எல்லா விபரங்களையும் தனியாகவே சுந்தர் ஒரு பதிவு எழுதியிருக்கார். இசைத்தட்டை முனைவர் தண்டபாணி, முனைவர் சீனிவாசனுடைய அப்பா திரு. சண்முகராசனிடமும், முனைவர் சிவக்குமார் திரு. மாரிமுத்துவிடமும் அளித்தனர்.


அடுத்து, இப்படி இருந்தா எப்படி ஒரு நாடகம். வாழ்க்கையில அதிகாரவர்க்கத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் சாமானியர்கள்கிட்ட அதிகாரம் சென்று சேர்ந்து, அதிகாரிகள் அவர்களுக்காக சேவை செய்யத்துடிக்கும் நிலமை இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை நாடகம். நம்ம நண்பர்கள் யுவராசு - செந்தில் எழுதி கவுசிக், விக்னெசு, சந்தோசு, பத்மனாபன், குமரன், சிவா மற்றும் உதய் நடித்திருந்தது அருமையான நாடகம். சாமானிய மக்களிடம் அதிகாரிகள் படும் விசித்திரமான கற்பனை உலகத்தை உருவாக்கிக் காட்டியிருந்தது சுவையாகவும் மற்றும் சுவராசியமாகவும் இருந்தது.


நவீன திருவிளையாடல் நாடகத்தில் அந்தக்கதாபாத்திரங்களை இக்காலத்தைய சூழலில் வைத்து கற்பனை கலந்த ஒரு சுவராசியமான நாடகமாக்கி நடித்திருந்தனர். தேவர்கள் மடிக்கணினிய்டன் நவீன சொரூபமாக காட்சியளித்தது பார்ப்போர் கவனத்தை கவர்வதாக அமைந்திருந்தது.


தமிழுணர்வுப்பாடல்களை திரு. அண்ணாமலையும், மாட்டுக்காரவேலா-ன்ற பாடலை சுபத்ராவோட அப்பா திரு. மாரிமுத்தும், முகுந்தா முகுந்தா பாடலை திருமதி. ஜோ-வும் அருமையாக பாடினாங்க.
அகா இது என்ன கலாட்டா?, யாரு சரோஜா தேவியா அது, அட இந்தப்பக்கம் யாரு எம்.ஜி.ஆரு – என்னா பண்றாங்க இங்க வந்து? “அன்று வந்ததும் அதே நிலா – இன்று வந்த்தும் அதே நிலா”. அப்படிப்போடு! உத்துப்பார்த்தாதான் தெரியுது - இது நம்ம லட்சுமி-கவுசிக்தான்னு. அவங்க போனபிறகு குங்குமப்பூவா கொஞ்சுப்புறாவா கொஞ்சி கொஞ்சி செந்தில் – வினு ஜோடி ஒரு கலக்கல் நடனம், அதுக்குப்பிறகு வந்தது அமிர்தா அவங்கப்பா சந்தோசோட வந்து அவரோட காதல்கதையை கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. பிறகு வர்றது வா வாத்தியாரே ஊட்டாண்டன்னு சென்னைத்தமிழ் வச்சு மனோரமா – சோ ஆடுன ஆட்டம் கலகலப்பா இருக்கு. ஒரு பெண்ணைப்பார்த்து நிலவை பார்த்தேன் – செந்தில் – வினு ஜோடி இந்தப்பாட்டுக்கு ஆட ஒரே அசத்தல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மொத்தத்தில இந்த அக்கால இளமை ததும்பும் இந்த நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கைத்தட்டல், தூதுகலம், உற்சாகம் - பார்க்கிறவங்க எல்லாம் அந்தக்காலத்துக்கே போயிட்டாங்க.



இப்போ வந்திருக்கிறது யுவராசு, செந்தில், குமரன், சந்தோசு உதய் மற்றும் பத்மனாபன் நண்பர்கள் சமய நல்லிணக்கத்தை ஒரு இசை நாடகமா அருமையா நடத்தியிருக்காங்க. மனுசங்க மதங்களால பிரிஞ்சு அடிச்சுகிட்டு மனிதத்தையே தன் புனிதத்தையே தொலைச்சுடறான் அப்பிடிங்கிறத அற்புதமாக நடிச்சு காட்டுனாங்க. மனம் நிறைய வைத்த ஒரு நெகிழ்வான நிகழ்வா இருந்தது.


தமிழ்மொழி வணக்கப் பாடல் பாடி நிகழ்ச்சி இனிதாக முடிந்தது. அடுத்து என்ன எல்லாரும் வீட்டுக்கும் கிளம்புவாங்கன்னு பார்க்கிறீங்களா. அதான் இல்ல.
கொஞ்சமா நஞ்சமா…பலப்பல விதங்கள், பலசுவை உணவுப்பதார்த்தங்கள். ஒவ்வொரு குடும்பமும் சரிக்கு சரியா அட்டகாசமா தயார் பண்ணி எடுத்து படையலிட்டு இருந்தாங்க. பந்திக்குள்ளே புகுந்து விளையாடலாம்னு முத வரிசையில நிக்கிறத என் வீட்டுக்காரம்மா பாத்துட்டு "சாப்பாடு எங்கயும் பறந்து போயிறாது! கொஞ்சம் பொறுமையாவே எனக்குப் பிறகு சாப்பிடுங்கன்னு 'பாசத்தோடு' சொல்லிட்டு அவங்க சாப்பாட்டு கச்சேரிய ஆரம்பிச்சுட்டாங்க. ஆகா சங்ககாலத் தமிழ் பொண்ணுகளும் இப்படித்தானா ? இல்ல இப்பத்தான் ஆம்பளைங்க கதி இப்பிடி ஆயிடுச்சா? இதைத்தான் பரிணாம வளர்ச்சியின் பக்க விளைவுன்னு சொல்லுறாங்களோ ? உணவுப்பந்தி முடிந்த பின்பும் பிரிய மனசில்லாம மக்கள் கொஞ்சம் கதையடிசுக்கிட்டு இருந்தாங்க. இன்னொரு பக்கம் திருக்குறள் இசைத்தட்டு பரபரப்பா விற்பனை ஆகிட்டு இருந்தது.

விழா முடிஞ்சு வீட்டுக்கு திரும்பி வந்து கிட்டிருக்கோம், வழியில ரெண்டு பக்கமும் கூப்பர் நதி பரவிக்கிடக்குது. நதியோரத்தில இருபக்கங்களிலும் இந்த அமெரிக்க சமுதாயத்தின் வளர்ச்சிகள், எழுச்சிகள் மற்றும் அதன் அடையாளங்களைப் பார்க்கிறப்ப மனுச சமுதாயத்தில ஆற்றுவெளி அள்ளித்தந்த அரிய பங்களிப்பு மனசில மெலிசா நிறையுது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே நம்ம தமிழ்ச்சமுதாயம் உலகத்திலிருக்கிற மற்ற சமுதாயங்களுக்கு முன்னரே பல பண்பாட்டு முறைகளை கலாச்சார நிகழ்வுகளை தொடங்கி பெருமை சேர்த்திருக்காங்கன்னு நினைக்கிறப்ப
எங்க மனசு நிறைஞ்சிறுச்சு.
இத்தனை அருமையான நிகழ்ச்சிகளை அள்ளித்தந்த சார்லச்டன் தமிழ்த்திருநாள் கண்டு களிச்ச எங்க மனசுக்குள்ளேயும் தூதுகலமாகப் வழிஞ்சது பொங்கி பொங்கலோ பொங்கல் !
வாழ்க தமிழ் ! வளமுடன் வளர்க தமிழ்ப் பண்பாடு!! நீடூடி வாழ்க தமிழ் சமுதாயம்!!
* செந்தில்-வினு *
--------------------
(இங்குள்ள அருமையான் படங்கள் அளித்து உதவியவர் – முனைவர் கண்ணன் )
--------------------
நம்ம பண்டைய தமிழர்கள் இந்த உழவுத்தொழிலின் முக்கியத்துவம் தெரிஞ்சு வந்ததனாலேயே, அதன் ஆதாரமான இயற்கையை வணங்கி அதோடு ஒன்றிணைந்து வாழ்ந்திருக்காங்கன்னு தெரியுது. அறிவியலே வளர்ச்சியடையா அக்காலத்தில் தங்களோட அறிவின் வளர்ச்சியினாலே வானிலை மற்றும் பருவகால மாற்றங்களை தெளிவாக தெரிஞ்சு காலங்களை இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர், முன்பனி, பின்பனி எனப்பகுத்து அதுப்படி உழவுத்தொழிலை செம்மைப்படுத்தி வந்திருக்காங்க. அதுல இளவேனிற் காலம் அவங்களுக்கு முக்கியமான காலம். ஏன்னு பார்த்தீங்கன்னா அப்பதான் அந்த உழவின் பயனை அனுபவிக்கிற, தம் வாழ்வின் வசந்தங்களை மகிழ்ச்சியாக தொடங்குகிற காலம் – அதனால தான் இளவேனிற் காலத்தை அவங்க தமிழ் புத்தாண்டின் தொடக்கமாக தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு தெரியுது. இந்த புத்தாண்டில, தமக்கு உணவுதந்த அந்த ஆதார சக்தியான ஆதவனை வழிபட்டு, பொங்கி வரும் பொங்கலை இயற்கைக்கு படையலிட்டு ஒரு பொங்கல் திருவிழாவாக கொண்டாட ஆரம்பிச்சு, அது தமிழ்சமுதாயத்தின் ஒரு பண்பாட்டு அடையாளமாக அமைஞ்சது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச சேதி.
அது சரி, பூலோகத்தின் இன்னொரு கோடியில், ஆசுலே மற்றும் கூப்பர் ஆத்துவெளியில, அன்றைய தமிழர்களின் இன்றைய சந்த்திகளான வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்ச் சமுதாயம் தைப்பொங்கல் திருநாளை அன்னிய மண்ணில் எப்படி கொண்டாடி மகிழ்கிறாங்கன்னு பார்க்கலாமா ?
இந்த மாதிரியான விழாக்கள்ல ஒரு சுவராசியமான விசயம் என்னன்னா - விழா அன்னைக்கு வந்து இரசிக்கிற பார்வையாளர்களுக்கு அந்த நாள் மட்டும்தான் திருநாள், ஆனா அன்றைய விழாக்கலைஞர்களுக்கு அன்னைக்கு மட்டுமில்ல கடந்த பல வாரங்களாகவே கொண்டாட்டமான நாட்கள். எப்பிடின்னு கேட்டீங்கன்னா, விழாவிற்காக ஆறேழு வாரங்களுக்கு முன்னாலே பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக கூடி, மத்தவங்க ஒத்திகையில பண்ற தப்ப பார்த்து சிரிச்சு, தாமே பண்ற தப்பை சமாளிச்சு, எல்லாரும் சமைச்சு கொண்டு வர்ற அத்தனை சாப்பாட்டு வகைகளையும் ஒரு கட்டு கட்டிட்டு, சுகமா கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சு, மத்தவங்கள கேலி பண்ணி், அதகளம் பண்ணி தூதுகலமாக பொஙகல் விழாவை எதிர்பார்த்துகிட்டு இருக்கிறது ஒரு சுகமான சுவராசியம்தான் - மொத்தத்தில பல வாரக்கடைசி நாட்கள் கலாட்டா கச்சேரியாத்தான் இருந்துச்சு.
பிரபல திரைநட்சத்திரங்களைக்கூட கூட்டமா வேலை வாங்கி சமாளிச்சிடலாம்., ஆனா நம்ம ஆட்கள் இருக்காங்க பாருங்க – அவங்கள சமாளிச்சு, ஆட்களையும் இழுத்துப் பிடிச்சு ஒத்திகைக்கு வரவழைக்கிறதே ஒரு தனி கதையாகவே எழுதலாம். ஒரு அஞ்சு பேரு வந்தா மிச்சம் பத்து பேரு வரமாட்டாங்க! மதியம் சாப்பாட்டு நேரத்துக்கு வரச்சொன்னா இரவுச்சாப்பாட்டு நேரம் வரைக்கும் வராம நம்ம பரபரப்ப கிளப்பி விடுவாங்க. ஒத்திகையை பாருங்கன்னா, அசராம உக்காந்து ஊர்க்கதைய பேசி கலகலக்கச் செய்வாங்க. இதையெல்லாம் சமாளிச்சு, சங்கத்தலைவர் சுந்தர்தான் அவரோட அயராத வேலைப்பளுவிற்கு மத்தியில் பல கலை நிகழ்ச்சிகள் உருவாகிற மாதிரி பார்த்துக்கிட்டார்.
இந்த தடவை டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம்…மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான் வசதி, ஒலி, ஒளி அமைப்பு, உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம்ன்னு நீங்க பார்த்தாலே தெரியும். வாங்க உள்ளே போகலாம்.

ஆகா….இதென்ன தப்பித்தவறி தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்திட்டோமா ?....எங்க பார்த்தாலும் கண்ணைப்பறிக்கிற மாதிரி பட்டுப்புடவை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையில நம்ம மக்கள் – ஒரு கலக்கு கலக்கிட்டாங்க போங்க. விழா ஏற்பாடுகளை அரக்க பரக்க ஏற்பாடு பண்ற மக்கள் சில பேர், ஒத்திகைகளை மனசில பார்த்துகிட்டே வெளியே பரபரப்பு தெரியாம நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்கிற சில பேர், சுத்தி சுத்தி ஓடியாடி உற்சாகமா அரங்கத்தையே அதிர வைக்கிற சுட்டிப்பசங்க சில பேர், பல நாட்கள் கழிச்சு பார்க்கிற சில நண்பர்களோட அரட்டை அடிக்கிற மக்கள் சில பேர், உள்ள வர்ற நம்ம மக்களை வரவேற்கிற மாதிரி…அவங்க கொண்டு வர்ற உணவு பதார்த்தங்கள அப்பிடியே மோப்பம் பார்க்கிற இளவட்டங்கள் சில பேர், - இப்படி பல வித நண்பர்களை பார்க்கிறதே கண்கொள்ளா காட்சியா இருக்கு, இல்லையா.
குத்து விளக்கு ஏற்றிய பின்பு தமிழ்த்தாய் பாடப்பட்டது. கணேசு – சுந்தர் அவர்கள் வரவேற்புரை அளித்தனர். முனைவர் தண்டபாணி அவர்கள் சமூகவுரை அதற்கடுத்ததாக இருந்தது. இலங்கையில் போர்முனையில் இறந்த அப்பாவித்தமிழ் மக்களுக்கு சில நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.




விழாவை கீர்த்தி மற்றும் சண்முகம் அழகா தொகுத்து வழங்கினாங்க. பார்வையாளர்களுக்கு ஆரம்பத்திலேயே அருமையான நடன விருந்து காத்திருந்தது. சிறுமி இனியாவின் நாட்டியம் இருந்தது – பார்த்துகிட்டிருந்த சின்னப்பசங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க.

அடுத்ததா சார்லச்டன் தமிழ் சிறுவர் பள்ளி மாணவர்கள் அமிர்தா, ஆகாச், அசுரிதா, சிபி, மாசிலன் வழங்கிய திருக்குறள் பாடல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்றது. சிறுவர்கள் சிறுவரி தவறாமல் குறள் பாடி மகிழ்வித்தனர்.

குழந்தைகளுக்கான இணையத் தளங்களை முனைவர் ஹரிநாத் அருமையாக தொகுத்து விளக்கிக்காட்டினார்.

நிகழ்ச்சியில அடுத்தது தனித்துவமான ஏலோலோ நாட்டிய நாடகம். மீனவர்களின் வாழ்க்கையில் படும் அவதிகளை, அவ்வாழ்வின் அல்லல்களை அப்பிடியே படம் பிடிச்சுகாட்டுற மாதிரி நடிச்சிருந்தாங்க நம்ம சுந்தர், யுவராசு, கொளசிக் மற்றும் செந்தில் அவங்க. குறிப்பா, மீனவர்களின் ஒவ்வொரு காலகட்டங்களையும் நாட்டிய வடிவில் நடிச்சு காட்டிகிட்டிருந்தாங்க. படகோட்டி துடுப்பு போடுகிற மீனவ மக்களா நடிச்சது சந்தோசு, உதய், விக்னேசு, சிவா, குமரன் மற்றும் பத்மனாபன் நண்பர்கள். மீனவர்களின் கடின வாழ்க்கையை நாடக நடினமாக பார்த்து பார்வையாளர்கள் மனசு கலங்கிடுச்சு.


சென்னையிலிருந்து சார்லச்டன் வரை – இது நாடகத்தலைப்பு, நடிச்சவங்க சண்முகம், அமிர்தா, சந்தோசு, குமரன், மாரிமுத்து அய்யா மற்றும் லாவண்யா. புதிதா அமெரிக்கா வந்து கலாச்சார குழப்பத்திலிருக்கிற நபர்களைப் பற்றிய நாடகம் அருமையாக இருந்தது.


கும்மி நடனம் அடுத்து வருதுன்னு அறிவிப்பாளர் சொல்ல எங்களுக்கெல்லாம் ஒரே ஆர்வம் எப்படி இருக்கும்ன்றத பார்க்க, கீதா, சானகி, லட்சுமி, சந்தியா, வானதி, மற்றும் வினு கும்மியடிச்சு நடனம் ஆட வந்திருந்தாங்க. பட்டுப்புடவையில பகட்டா வந்திருந்து ஆடிறாங்க பாருங்க ஆட்டம் - நம்ம ஊரு கிராமப்பொண்ணுகளே வந்து ஆடி பட்டைய கிளப்பின மாதிரி இருந்த்து. ஒரு தப்பில்ல, தாளம் பிசகல்ல, அத்தனை நேர்த்தி, அத்தனை அசத்தல். இதப்பாத்து நம்ம மனசு ரெம்ப நேரமா கும்மியடிச்சுகிட்டே இருந்தது.


பொங்கல் விழாவில நடந்த ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி என்னன்னு கேட்டிங்கன்னா – அது திருக்குறள் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சிதான்.
சார்லச்டன் தமிழ்ச்சங்க நண்பர்கள் குழுவின் ஒரு கனவுத்திட்டம் தான் உலகப்பொதுமறையை இசைவடிவமாக ஓதி தமிழ்சமுதாயத்திடம் கொண்டு சேர்ப்பிக்கும் ஒரு அரிய முயற்சி. இதற்காக பலமாதங்களாக பாடுபட்டு இசைவடிவமாக கொண்டு வந்து சாதனை பண்ணி இருப்பது பெருமையான ஒரு விசயம். இதப்பத்தி எல்லா விபரங்களையும் தனியாகவே சுந்தர் ஒரு பதிவு எழுதியிருக்கார். இசைத்தட்டை முனைவர் தண்டபாணி, முனைவர் சீனிவாசனுடைய அப்பா திரு. சண்முகராசனிடமும், முனைவர் சிவக்குமார் திரு. மாரிமுத்துவிடமும் அளித்தனர்.


அடுத்து, இப்படி இருந்தா எப்படி ஒரு நாடகம். வாழ்க்கையில அதிகாரவர்க்கத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் சாமானியர்கள்கிட்ட அதிகாரம் சென்று சேர்ந்து, அதிகாரிகள் அவர்களுக்காக சேவை செய்யத்துடிக்கும் நிலமை இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை நாடகம். நம்ம நண்பர்கள் யுவராசு - செந்தில் எழுதி கவுசிக், விக்னெசு, சந்தோசு, பத்மனாபன், குமரன், சிவா மற்றும் உதய் நடித்திருந்தது அருமையான நாடகம். சாமானிய மக்களிடம் அதிகாரிகள் படும் விசித்திரமான கற்பனை உலகத்தை உருவாக்கிக் காட்டியிருந்தது சுவையாகவும் மற்றும் சுவராசியமாகவும் இருந்தது.


நவீன திருவிளையாடல் நாடகத்தில் அந்தக்கதாபாத்திரங்களை இக்காலத்தைய சூழலில் வைத்து கற்பனை கலந்த ஒரு சுவராசியமான நாடகமாக்கி நடித்திருந்தனர். தேவர்கள் மடிக்கணினிய்டன் நவீன சொரூபமாக காட்சியளித்தது பார்ப்போர் கவனத்தை கவர்வதாக அமைந்திருந்தது.


தமிழுணர்வுப்பாடல்களை திரு. அண்ணாமலையும், மாட்டுக்காரவேலா-ன்ற பாடலை சுபத்ராவோட அப்பா திரு. மாரிமுத்தும், முகுந்தா முகுந்தா பாடலை திருமதி. ஜோ-வும் அருமையாக பாடினாங்க.
அகா இது என்ன கலாட்டா?, யாரு சரோஜா தேவியா அது, அட இந்தப்பக்கம் யாரு எம்.ஜி.ஆரு – என்னா பண்றாங்க இங்க வந்து? “அன்று வந்ததும் அதே நிலா – இன்று வந்த்தும் அதே நிலா”. அப்படிப்போடு! உத்துப்பார்த்தாதான் தெரியுது - இது நம்ம லட்சுமி-கவுசிக்தான்னு. அவங்க போனபிறகு குங்குமப்பூவா கொஞ்சுப்புறாவா கொஞ்சி கொஞ்சி செந்தில் – வினு ஜோடி ஒரு கலக்கல் நடனம், அதுக்குப்பிறகு வந்தது அமிர்தா அவங்கப்பா சந்தோசோட வந்து அவரோட காதல்கதையை கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. பிறகு வர்றது வா வாத்தியாரே ஊட்டாண்டன்னு சென்னைத்தமிழ் வச்சு மனோரமா – சோ ஆடுன ஆட்டம் கலகலப்பா இருக்கு. ஒரு பெண்ணைப்பார்த்து நிலவை பார்த்தேன் – செந்தில் – வினு ஜோடி இந்தப்பாட்டுக்கு ஆட ஒரே அசத்தல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மொத்தத்தில இந்த அக்கால இளமை ததும்பும் இந்த நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கைத்தட்டல், தூதுகலம், உற்சாகம் - பார்க்கிறவங்க எல்லாம் அந்தக்காலத்துக்கே போயிட்டாங்க.



இப்போ வந்திருக்கிறது யுவராசு, செந்தில், குமரன், சந்தோசு உதய் மற்றும் பத்மனாபன் நண்பர்கள் சமய நல்லிணக்கத்தை ஒரு இசை நாடகமா அருமையா நடத்தியிருக்காங்க. மனுசங்க மதங்களால பிரிஞ்சு அடிச்சுகிட்டு மனிதத்தையே தன் புனிதத்தையே தொலைச்சுடறான் அப்பிடிங்கிறத அற்புதமாக நடிச்சு காட்டுனாங்க. மனம் நிறைய வைத்த ஒரு நெகிழ்வான நிகழ்வா இருந்தது.


தமிழ்மொழி வணக்கப் பாடல் பாடி நிகழ்ச்சி இனிதாக முடிந்தது. அடுத்து என்ன எல்லாரும் வீட்டுக்கும் கிளம்புவாங்கன்னு பார்க்கிறீங்களா. அதான் இல்ல.
கொஞ்சமா நஞ்சமா…பலப்பல விதங்கள், பலசுவை உணவுப்பதார்த்தங்கள். ஒவ்வொரு குடும்பமும் சரிக்கு சரியா அட்டகாசமா தயார் பண்ணி எடுத்து படையலிட்டு இருந்தாங்க. பந்திக்குள்ளே புகுந்து விளையாடலாம்னு முத வரிசையில நிக்கிறத என் வீட்டுக்காரம்மா பாத்துட்டு "சாப்பாடு எங்கயும் பறந்து போயிறாது! கொஞ்சம் பொறுமையாவே எனக்குப் பிறகு சாப்பிடுங்கன்னு 'பாசத்தோடு' சொல்லிட்டு அவங்க சாப்பாட்டு கச்சேரிய ஆரம்பிச்சுட்டாங்க. ஆகா சங்ககாலத் தமிழ் பொண்ணுகளும் இப்படித்தானா ? இல்ல இப்பத்தான் ஆம்பளைங்க கதி இப்பிடி ஆயிடுச்சா? இதைத்தான் பரிணாம வளர்ச்சியின் பக்க விளைவுன்னு சொல்லுறாங்களோ ? உணவுப்பந்தி முடிந்த பின்பும் பிரிய மனசில்லாம மக்கள் கொஞ்சம் கதையடிசுக்கிட்டு இருந்தாங்க. இன்னொரு பக்கம் திருக்குறள் இசைத்தட்டு பரபரப்பா விற்பனை ஆகிட்டு இருந்தது.

விழா முடிஞ்சு வீட்டுக்கு திரும்பி வந்து கிட்டிருக்கோம், வழியில ரெண்டு பக்கமும் கூப்பர் நதி பரவிக்கிடக்குது. நதியோரத்தில இருபக்கங்களிலும் இந்த அமெரிக்க சமுதாயத்தின் வளர்ச்சிகள், எழுச்சிகள் மற்றும் அதன் அடையாளங்களைப் பார்க்கிறப்ப மனுச சமுதாயத்தில ஆற்றுவெளி அள்ளித்தந்த அரிய பங்களிப்பு மனசில மெலிசா நிறையுது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே நம்ம தமிழ்ச்சமுதாயம் உலகத்திலிருக்கிற மற்ற சமுதாயங்களுக்கு முன்னரே பல பண்பாட்டு முறைகளை கலாச்சார நிகழ்வுகளை தொடங்கி பெருமை சேர்த்திருக்காங்கன்னு நினைக்கிறப்ப
எங்க மனசு நிறைஞ்சிறுச்சு.
இத்தனை அருமையான நிகழ்ச்சிகளை அள்ளித்தந்த சார்லச்டன் தமிழ்த்திருநாள் கண்டு களிச்ச எங்க மனசுக்குள்ளேயும் தூதுகலமாகப் வழிஞ்சது பொங்கி பொங்கலோ பொங்கல் !
வாழ்க தமிழ் ! வளமுடன் வளர்க தமிழ்ப் பண்பாடு!! நீடூடி வாழ்க தமிழ் சமுதாயம்!!
* செந்தில்-வினு *
--------------------
(இங்குள்ள அருமையான் படங்கள் அளித்து உதவியவர் – முனைவர் கண்ணன் )
--------------------
Wednesday, February 4, 2009
திருக்குறள் - முதன்முறையாக 1330 குறட்பாக்களும் இசை வடிவில் !

திருக்குறளுக்கு விளக்கவுரைகள் எழுதியோர் பலர். ஆனால் எத்தனை பேருக்குக் குறளை முழுமையாகப் படிக்க முடிந்திருக்கிறது? நாம் திரைப்படப் பாடல்களை எவ்வாறு மனப்பாடம் செய்கிறோம்? பாட்டுப் புத்தகத்தை வாங்கியா படிக்கிறோம்? இல்லையே, கேட்பதனாலேயே பாடல்கள் நமக்கு மனதில் பதிகின்றன. அதனைப் போலவே பலவிதமான பாடல்களும் நாம் கேட்பதன்மூலமாகவே நன்கு மனதில் பதிகின்றது. படிக்கும் வரிகளை மனதில் பதிப்பதும், மீண்டும் நினைவுபடுத்தி எடுப்பதும் சற்றே கடினம். ஆனால் கேட்கின்ற வரிகளைச் சுலபமாக நினைவில் ஏற்றிக் கொள்ளலாம், அதே போல மீண்டும் ஞாபகப்படுத்துவதும் சுலபம். குழந்தைகள் கற்பதற்கு வெகு முன்னமேயே கேட்கத் தொடங்கி விடுகின்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதனாலேயே கற்றலின் கேட்டல் நன்று என்றார்கள். திருவள்ளுவரும் "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்றார்.
அப்படிப் பார்க்கும்போது, எத்தனைத் தமிழ் நூல்களை நாம் இசை வடிவில் பதிவு செய்திருக்கிறோம்? தமிழ் நூல்களையும், இலக்கியங்களையும் பரப்ப முன்வரும் பலரும் அதனை ஏட்டிலும், எழுத்திலுமே பதிய முற்படுவதைக் காண்கிறோம். பத்திரிகையாக இருக்கட்டும், மின் பக்கங்களாக இருக்கட்டும் அவை பெரும்பாலும் எழுத்திலேயே முன்வைக்கப்படுகின்றன. மதுரைத் திட்டம் போன்றவை அரும்பெரும் முயற்சிகள். ஆனாலும் அவை இன்று எத்தனைத் தமிழர்களைச் சென்றடைந்திருக்கின்றன? கணினி இருந்தாலுமே அத்தகைய பக்கங்களை அடிக்கடி எடுத்துப் பார்க்கின்றோமா? அதே நேரத்தில்,திரைப்பாடல்களைப் பாருங்கள். அவை இசை வடிவில் வந்ததனாலேயே புகழ்பெறுகின்றன. இசையின் மூலமே நல்ல பல இலக்கியங்களை மக்கள் மத்தியில் பரப்ப இயலும். இந்த நோக்கில் தொடங்கப்பட்டதுதான் எங்களது பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் திருக்குறளை இசைவடிவில் பதியும் திட்டம்.

இத்திட்டத்துக்கான தொகைகளை அளித்து ஊக்குவித்த புரவலர்கள் அகஸ்டாவிலிருக்கும் முனைவர் சிவக்குமார் ஜெயபாலன்-மருத்துவர் ஜானகி நடராஜா மற்றும் சார்லஸ்டனிலிருக்கும் முனைவர் தண்டபானி குப்புசாமி-வளர்மதி குப்புசாமி ஆகியோர். இதில் பங்குகொண்ட அனைவரும் அமெரிக்காவின் தென்கரோலின மாநிலத்தில் இருக்கும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள். இளைய தலைமுறையினர்!

ஏழு பெண்களும், ஏழு ஆண்களும் அடங்கிய இரு குழுக்கள், ஒவ்வொன்றும் மாறி மாறி அவ்வைந்து அதிகாரங்களாகப் பாடியிருக்கிறோம். எளிமையான இசையோடு மறைமொழியின் (மந்திரம் என்ற சொல்லுக்குத் தமிழில் மறைமொழி) மெட்டில் 1330 குறட்பாக்களும் பாடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் சுமார் ஒன்றரை நிமிடங்கள் இசைக்கின்றன. மொத்த குறட்பாக்களைக் கேட்க ஆகும் நேரம் சுமார் மூன்று மணி நேரம். இதற்கான ஒலிப்பதிவு Island Sounds என்ற ஒலிப்பதிவகத்தில் Steve Green என்பவரால் செய்யப்பட்டது. ஒலிப்பதிய நாங்கள் எடுத்துக்கொண்ட நேரம் சுமார் ஆறு மணி நேரம். குறுந்தகட்டுக்கான முன்னுரையை அன்புகூர்ந்து வழங்கியிருப்பவர் திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையைச் சார்ந்த தமிழ்த்திரு அய்யா இளங்குமரனார் அவர்கள். இத்திட்டத்தில் பங்குகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பனைநிலத் தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. திருக்குறள் மறைமொழியின் முதல் அதிகாரத்தைக் கேட்க இங்கே அழுத்தவும்.
"திருக்குறள் மறைமொழி" என்ற இந்த MP3 குறுந்தகட்டினைக் கடந்த ஜனவரி 24ம் தேதி நிகழ்ந்த எங்களது தமிழ்ச்சங்கப் பொங்கல் விழாவில் வெளியிட்டோம். இக்குறுந்தகடு விற்பனைக்குத் தயாராக உள்ளது. எங்கள் வலைப்பதிவின் இடப்புறம் இருக்கும் "Buy Now! Thirukkural Maraimozhi MP3 CD" என்ற பொத்தானை அழுத்தி, Google Checkout மூலம் இதனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் விற்பனை முகவர்கள் தேவை! திருக்குறளை இந்தப் புதிய இசை வடிவில் பரப்ப முன் வாருங்கள்! ஒவ்வொரு குறுந்தகடும் 5 அமெரிக்க டாலர்கள். இதிலிருந்து வரும் தொகை முழுவதும், எங்களது அடுத்த இசைத் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படும்.

இக்குறுந்தகடு இலாப நோக்கில் தயாரிக்கப்பட்டதன்று. இதனை வாங்கிக் கேட்பதும், பரப்புவதும் தமிழரிடையே திருக்குறள் பரவ உதவும். திருக்குறளில் இருக்கின்ற எண்ணற்ற அரிய கருத்துக்களை இத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவராலும் பாட்டுப் பயிற்சிகளின்போதும், ஒலிப்பதிந்து திருத்தும்போதும் உணர்ந்துகொள்ள முடிந்தது. எங்கள் தமிழ்ச் சங்கத்தினரின் குடும்ப விழாக்களிலும், தமிழ்ப் பள்ளியிலும், சங்க விழாக்களிலும், கார்ப் பயணங்களிலும் திருக்குறள் ஒரு இனிய இசையாக ஒலிக்கப்படுகிறது, ஓதப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் தமிழர் கூடும் இடங்களிலெல்லாம் திருக்குறள் ஒலிக்க வேண்டும் என்பது எம் அவா. அது வாழ்க்கைக்கான அத்தனைப் பாடங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கின்றது. அய்யா இளங்குமரனார் கூறியிருப்பதுபோல், திருக்குறளைப் படிப்போம், கேட்போம், சிந்திப்போம், சீர்த்தி பெறுவோம், பிறவிப் பயனை அடைவோம்! வாழிய நலனே, வாழிய நிலனே!
Tuesday, October 21, 2008
எதை எழுத
நண்பர் பனையேறி என்னிடம் ஒரு நாள் எதாவது எழுது என்றார், சரி எதைப் பற்றி எனக் கேட்டேன், உனக்குத் தெரிந்த சுவையான சம்பவங்கள் அல்லது கற்பனை எது வேண்டுமானாலும் எழுது என்றார்.
உங்களுக்கே தெரியும், நாமெல்லாம் இருக்கின்ற வேலைகளுக்கே நேரமில்லாமல் தவிக்கின்றோம்.அதிலும் நான் ரொம்ப பிசி..காலையில் ஆரம்பித்து ஆராய்ச்சி,கருத்தரங்கம், விளையட்டு, சமையல், வாரக் கடைசியில் வரும், பிறந்த நாள் விழாக்கள், அதிர்ஷ்ட்டப் பானை விருந்து, கடைகளுக்குச் சென்று வருதல் என ஒரே வேலை மயம் இருந்தாலும் நான் யோசித்துக்கொண்டேதான் இருந்தேன் எதை எழுத என்று.
இவ்வளவு வேலைகளுக்கிடையில், என்னால் ஒரு நாள் கூட "பியானோ" வாசிக்காமல் இருக்கவே முடியாது, இல்லையெனில் தூக்கமே வராது. ஒரு நாள் அப்படித்தான், லேசான மழை, கதவைத் திறந்தால் சிலீரென்று காற்று முகத்தில் அறைந்தது, மகிழ்ச்சியான மாலைப் பொழுது. என்ன செய்யலாம் என் யோசித்தேன்..ஒருகையில் சூடான தேனீரும் மறுகையால் பியானோவும் வாசிக்கத் தொடங்கினேன்..ரம்யமான இனிமையான இந்த இசை அப்படியே தென்றலில் கலந்து என்னை மெய்மறக்கச் செய்தது..
வெளியில் லேசான சலசலப்பு...என்னடா இது நம் இசைக்கு இடைஞ்சலாக இருக்கிறதே என்று நினைத்தவாறு வெளியே எட்டிப் பார்த்தேன்..ஒரு பெரிய கூட்டம், நம் இசைக்கு இவ்வளவு ரசிகர்களா என வியந்து, அவர்களை உள்ளே வந்து ரசிக்குமாறு சொன்னேன்.. அதில் ஒருவர் என்னை நன்றாக முறைத்துப் பார்த்துவிட்டு, நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா...என்ன இது..எங்களை எல்லாம் நிம்மதியாக இருக்கவிடமாட்டாயா..என்றார்..
ஒரு இசைக் கலைஞனுக்கு இப்படியெல்லாம் சோதனை வரத்தான் செய்யும்..நாம் மனம் தளரக்கூடாது என்று கதவை தாழிட்டு வாசிக்க ஆரம்பித்து விட்டேன்...சில நொடிகள்தான் வாசித்திருப்பேன்..என் அறை நண்பன் என்னிடம் வந்து நான் வேறு அறை பார்த்துக்கொள்ளவா அல்லது நீங்கள் பார்த்துக்கொள்கிறீர்களா என்றான்.. அப்போது நான் இளையராஜாவை நினைத்துக் கொண்டேன்..நீங்கள் முதன் முதலில் பாடல் பதிவு செய்யும் போது 13 முறை மின்சாரம் நின்று போனது..ஆனாலும் மனம் தளரவில்லை நீங்கள்.. சரி மனம் இருந்தால் மார்க்கம் உண்டல்லவா..
என் அறை நண்பன் ஆய்வகத்திற்கு சென்று இரவில் தாமதமாகத்தான் வருவான்..அவன் இல்லாத சமயங்களில் வாசிக்க ஆரம்பித்துவிடுவேன்..ஆனால் இம்முறை கதவை நன்றாக தாழிட்டுவிட்டு வாசிப்பேன்.. சில சமயம் என் விரல்கள் என்னையும் அறியாமல் ஆட ஆரம்பித்துவிடும்..அப்போது என் அறை நண்பனை ஆய்வகத்துக்கு செல்லவில்லையா..நீ என்பேன்..அவன் என்னை முறைத்துவிட்டு இப்போதுதானே அங்கிருந்து வந்தேன் என்பான்..நானும் அவனை எப்படியாவது எங்காவது வெளியே அனுப்ப முயற்சி செய்ய..நானெல்லாம் ஆராய்ச்சி செய்யும் போது ஆய்வகத்தை தவிர என்னை வெறெங்கும்…. என்று ஆரம்பிப்பேன்.. அவன் உடனே எனக்கு தூக்கம் வருகிறது என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று போய் படுத்துக்கொள்வான்... ஒரு கலைஞனுக்கு எப்படியெல்லாம் இடர் பாருங்கள்...ஒருமுறை, இதைக்கூட எழுதலாமா என யோசித்தேன், ஆனால் எப்படி எழுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
"யானி" இந்தியாவிற்கு வந்தபோது பார்க்க விருப்பபட்டது இரண்டே இரண்டுதான், ஒன்று தாஜ்மகால், அவர் "பியானோ "வாசித்த இடம், இன்னொன்று நான், நான் பியானோ வாசித்தவிதம்.. லண்டன் ட்ரினிட்டி அகாதமியில், நானும், யானியும் ஒரே நேரதித்தில் இசை பயின்றோம். மேலும் ராயல் ஃபில்ஹார்மோனிக் அகாதமியில் பீத்தோவானின் "கோப்ரா" சிம்பொனி இசைக்குப் பின், நாங்கள் அங்கே சிம்பொனி இசைத்தோம் என்றால் நீங்கள் நம்ப வாய்ப்பில்லை...எனவே என்னால் இதையும் எழுத முடியவில்லை..
கல்லூரிப் பருவம் என்பது அனேகமாக அனைவருக்குமே வாழ்க்கையின் மிக இனிமையான நாட்களாக இருந்திருக்கும். அப்போது நடந்த சில சம்பவங்கள், நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். நம்மால் ஏதாவது தமிழுக்கு, அதன் வளர்ச்சிக்கு செய்யவேண்டுமே என்று தனியாத ஆசை எனக்கு, சரி என்று நேராக கடைக்குச் சென்றேன், நிறைய காகிதங்கள், எழுது கோல், என பை நிறைய வாங்கி வந்தேன். விடுதிக்குள் நுழைந்தவுடன் சோ ....வென மழை, மின்னல், இடி என மாறி மாறி அடித்தது. நண்பர்களிடம் சொல்லிவிட்டேன் என்னை யாரும் இரண்டு மூன்று நாட்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாதென்று. கதவை தாழிட்டேன், சன்னல்களை இழுத்து மூடினேன், பின் நாற்காலியில் உட்கார்ந்து ஆரம்பிதேன் எழுத..ஒரு காவியத்தை படைத்துவிட்டுத்தான் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வெண்டும் என ஆரம்பித்து எழுத ஆரம்பித்துவிட்டேன்...இடையில் நாம் வாங்கி வந்த காகிதங்கள் போதாதோ என்று எண்ணியபடியே விடாமல் எழுதித்தள்ளினேன்..
திடீரென எனக்கு ஒரு இடைஞ்சல், யாரோ என் அறைக் கதவை நாகரிகமாகத் தட்டுகிறார்கள்...நம் நண்பர்களுக்கு நாம் தான் ஏற்கனவே தொந்தரவு செய்யாதீர்கள் என சொல்லிவிட்டேனே ..மறுபடியும் யார் இது என்ற சிந்தனையுடனே எழுந்து வந்து கதவை மெல்ல திறந்தேன்...ஆ..என்ன ஆச்சரியம் என் கண்களை என்னாலே நம்பமுடியவில்லை..வெளியில் கம்பன், பாரதி, வள்ளுவன், ஒளவையார், மற்றும் இளங்கோவன் எல்லோரும் வாசலில் நின்றிருந்தனர். மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களை உள்ளே அழைத்து அமரவைத்தேன். முன்னெச்சரிக்கையாக ஒளவையாரின் ஊன்றுகோலை முதலில் வாங்கி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அவரை கைத்தாங்கலாக அமரவைத்தேன்..
யார் முதலில் பேச்சை துவங்குவது .... சிறிய மெளன இடைவெளி...எனக்கு இவர்களைப் பார்த்த பரவசத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை, ஆனால் பாரதி மட்டும் முகத்தை மிக கோபமாக வைத்துக்கொண்டிருந்தார்..வள்ளுவரோ தாடியை லேசாக நீவியபடி "என்ன இதெல்லாம்" என்பது போல் பார்த்தார்.
சரி எதுவானாலும் வந்தவர்களை முதலில் உபசரிப்போம், பிறகு பேசிக்கொள்வோம்,என நினைத்து விடுதியிலிருந்து கொஞ்சம் மோர் வாங்கி வந்து அனைவருக்கும் தந்தேன்.. மோரைக் குடித்த பாரதி என்னை பார்த்தார், பார்வையில் கோபம் சற்று தணிந்திருந்தது..நானும் ஒருவழியாக தைரியத்தை வரவைத்துக்கொண்டு இன்னும் மோர் வேண்டுமா என்றேன்.. உடனே பாரதி..
"யாம் பருகிய மோரினிலே இது போல் இனிதாவது எங்கும் காணேன்"
என்றார். நான் இன்னும் சிறிது மோர் கொடுத்தேன் அதையும் குடித்துவிட்டு..
"பாருக்குள்ளே நல்ல மோரு நீ தந்த இந்த மோரு என்றார்"...
அப்பாடா நிம்மதி. வள்ளுவர் மோர் குடித்துக்கொன்டிருக்கும் போது வாயில் எதும் சிக்கியிருக்க வேண்டும் போல்..அதை உடனே கீழே துப்பி விட்டு...
"துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு.
துப்பாய தூவும் மழை" என்றார்...
சரி தாங்கள் வந்ததின் நோக்கம் என்ன என்றேன்... பாரதி கோபம் கொண்டு நீ எதோ எழுதுகிறாயாமே...கேள்விப்பட்டு வந்தோம் என்றார்..ஆம் என்றேன்...முதலில் அதை நிறுத்து என்றார்.
கம்பனோ..ஏன் எங்கள் புகழ் இந்த பூமியில் நிலைத்திருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா எனக்கேட்டார்.
என் பெயர், புகழ் இந்த உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்திருக்கிறது ஆனால் அதை நீ இரண்டே நாளில் அழித்து விடுவாய் போலிருக்கிறதே.. எங்கள் புகழ் நிலைதிருக்க வேண்டுமென்றால், தமிழும், தமிழ் மக்களும் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமென்றால் இப்போதே நிறுத்து என்றார் வள்ளுவர்..... சரி நம்மை இவ்வளவு தூரம் கேட்கிறார்களே என எண்ணி தமிழில் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி, அவர்களை வழி அனுப்பி வைத்தேன்..
இதை எனக்கு வந்த சோதனையாகக் கருதாமல் தமிழுக்கு வந்ததாக நினைத்து வருந்தினேன்.. ஆங்கிலத்திலும் நல்ல புலமை எனக்கு எடுத்தேன்...எழுதினேன் ..எழுதிக்கொண்டே இருந்தேன்...வெளியே "பூட்ஸ்" காலணிகளின் சத்தம்...என்.சி.சி.மாணவர்கள்தான் நடைப் பயிற்சி செய்கிறார்கள் என்று நினைத்து கவனத்தை சிதறவிடாமல் தொடர்ந்தேன்...
ஆங்கிலத்தில்" உள்ளே வரலாமா" என்றொரு குரல்...நானும் எழுதிக்கொண்டே திரும்பிக்கூட பார்க்காமல்..ஆம்" என்றேன் அதே ஆங்கிலத்தில். பார்த்தால் ஷேக்ஸ்பியர், லியோ டால்ஸ்ட்டாய், ஷெல்லி, சர்ச்சில் மேலும் பலரும் "கோட்- சூட்" அணிந்து கம்பீரமாக நின்றனர்..அவர்களை அமர வைத்து தேனீரும் ரொட்டியும் கொடுத்தேன்...
அவர்களின் நோக்கம் என்னை எப்படியாவது எழுதாமல் தடுப்பதுதான் என்று எனக்குத் தெரிந்தாலும்...தங்களின் வருகைக்கான காரணம் என்ன என்றேன்....
தம்பி தயவுசெய்து எழுதுவதை நிறுத்து என்றார்கள் ஒரே குரலில்....கெஞ்சினார்கள்....நான் விடுவதாக இல்லை..."எழுதுவது எனது பிறப்புரிமை..அதை எழுதியேதீருவேன்" என நானும் என் பங்குக்கு வாதடினேன்..கடைசியில் என்னை ஒருவழியாக சமாதானம் செய்து என் கைகளை கட்டிப் போட்டுவிட்டனர்...சரி என் போன்ற எழுத்தாளனுக்கு மொழி ஒரு தடையே இல்லை, கிரேக்க, லத்தீன் மொழிகளில் எழுதலாமா என தீவிரமாக யோசிக்கத்தொடங்கினேன்...மறுபடியும் என் அறைக் கதவு பலமாகத் தட்டப்படுகிறது.....
எழுந்தேன்.... என்னை உலுக்கி என்னடா 10 மணி வரைக்கும் தூங்குகிறாய் என்றான் நண்பன்.. ஓ....அதுவா.. இது என்று தூக்கம் கலைத்தேன்....
ஒரு முறை இதைக் கூட எழுதலாமா என யோசித்தேன்....ஆனாலும் எதாவது எழுத வேண்டுமே.... எதை எழுத...
"நீ எதுவுமே எழுத வேண்டாம்" எழுதாமல் இருந்தாலே தமிழ் வாழும் என்று நீங்கள் சொல்வது என் காதுகளுக்கு கேட்கிறது...
-எழுதியவர் - சிவபாரதி
உங்களுக்கே தெரியும், நாமெல்லாம் இருக்கின்ற வேலைகளுக்கே நேரமில்லாமல் தவிக்கின்றோம்.அதிலும் நான் ரொம்ப பிசி..காலையில் ஆரம்பித்து ஆராய்ச்சி,கருத்தரங்கம், விளையட்டு, சமையல், வாரக் கடைசியில் வரும், பிறந்த நாள் விழாக்கள், அதிர்ஷ்ட்டப் பானை விருந்து, கடைகளுக்குச் சென்று வருதல் என ஒரே வேலை மயம் இருந்தாலும் நான் யோசித்துக்கொண்டேதான் இருந்தேன் எதை எழுத என்று.
இவ்வளவு வேலைகளுக்கிடையில், என்னால் ஒரு நாள் கூட "பியானோ" வாசிக்காமல் இருக்கவே முடியாது, இல்லையெனில் தூக்கமே வராது. ஒரு நாள் அப்படித்தான், லேசான மழை, கதவைத் திறந்தால் சிலீரென்று காற்று முகத்தில் அறைந்தது, மகிழ்ச்சியான மாலைப் பொழுது. என்ன செய்யலாம் என் யோசித்தேன்..ஒருகையில் சூடான தேனீரும் மறுகையால் பியானோவும் வாசிக்கத் தொடங்கினேன்..ரம்யமான இனிமையான இந்த இசை அப்படியே தென்றலில் கலந்து என்னை மெய்மறக்கச் செய்தது..
வெளியில் லேசான சலசலப்பு...என்னடா இது நம் இசைக்கு இடைஞ்சலாக இருக்கிறதே என்று நினைத்தவாறு வெளியே எட்டிப் பார்த்தேன்..ஒரு பெரிய கூட்டம், நம் இசைக்கு இவ்வளவு ரசிகர்களா என வியந்து, அவர்களை உள்ளே வந்து ரசிக்குமாறு சொன்னேன்.. அதில் ஒருவர் என்னை நன்றாக முறைத்துப் பார்த்துவிட்டு, நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா...என்ன இது..எங்களை எல்லாம் நிம்மதியாக இருக்கவிடமாட்டாயா..என்றார்..
ஒரு இசைக் கலைஞனுக்கு இப்படியெல்லாம் சோதனை வரத்தான் செய்யும்..நாம் மனம் தளரக்கூடாது என்று கதவை தாழிட்டு வாசிக்க ஆரம்பித்து விட்டேன்...சில நொடிகள்தான் வாசித்திருப்பேன்..என் அறை நண்பன் என்னிடம் வந்து நான் வேறு அறை பார்த்துக்கொள்ளவா அல்லது நீங்கள் பார்த்துக்கொள்கிறீர்களா என்றான்.. அப்போது நான் இளையராஜாவை நினைத்துக் கொண்டேன்..நீங்கள் முதன் முதலில் பாடல் பதிவு செய்யும் போது 13 முறை மின்சாரம் நின்று போனது..ஆனாலும் மனம் தளரவில்லை நீங்கள்.. சரி மனம் இருந்தால் மார்க்கம் உண்டல்லவா..
என் அறை நண்பன் ஆய்வகத்திற்கு சென்று இரவில் தாமதமாகத்தான் வருவான்..அவன் இல்லாத சமயங்களில் வாசிக்க ஆரம்பித்துவிடுவேன்..ஆனால் இம்முறை கதவை நன்றாக தாழிட்டுவிட்டு வாசிப்பேன்.. சில சமயம் என் விரல்கள் என்னையும் அறியாமல் ஆட ஆரம்பித்துவிடும்..அப்போது என் அறை நண்பனை ஆய்வகத்துக்கு செல்லவில்லையா..நீ என்பேன்..அவன் என்னை முறைத்துவிட்டு இப்போதுதானே அங்கிருந்து வந்தேன் என்பான்..நானும் அவனை எப்படியாவது எங்காவது வெளியே அனுப்ப முயற்சி செய்ய..நானெல்லாம் ஆராய்ச்சி செய்யும் போது ஆய்வகத்தை தவிர என்னை வெறெங்கும்…. என்று ஆரம்பிப்பேன்.. அவன் உடனே எனக்கு தூக்கம் வருகிறது என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று போய் படுத்துக்கொள்வான்... ஒரு கலைஞனுக்கு எப்படியெல்லாம் இடர் பாருங்கள்...ஒருமுறை, இதைக்கூட எழுதலாமா என யோசித்தேன், ஆனால் எப்படி எழுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
"யானி" இந்தியாவிற்கு வந்தபோது பார்க்க விருப்பபட்டது இரண்டே இரண்டுதான், ஒன்று தாஜ்மகால், அவர் "பியானோ "வாசித்த இடம், இன்னொன்று நான், நான் பியானோ வாசித்தவிதம்.. லண்டன் ட்ரினிட்டி அகாதமியில், நானும், யானியும் ஒரே நேரதித்தில் இசை பயின்றோம். மேலும் ராயல் ஃபில்ஹார்மோனிக் அகாதமியில் பீத்தோவானின் "கோப்ரா" சிம்பொனி இசைக்குப் பின், நாங்கள் அங்கே சிம்பொனி இசைத்தோம் என்றால் நீங்கள் நம்ப வாய்ப்பில்லை...எனவே என்னால் இதையும் எழுத முடியவில்லை..
கல்லூரிப் பருவம் என்பது அனேகமாக அனைவருக்குமே வாழ்க்கையின் மிக இனிமையான நாட்களாக இருந்திருக்கும். அப்போது நடந்த சில சம்பவங்கள், நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். நம்மால் ஏதாவது தமிழுக்கு, அதன் வளர்ச்சிக்கு செய்யவேண்டுமே என்று தனியாத ஆசை எனக்கு, சரி என்று நேராக கடைக்குச் சென்றேன், நிறைய காகிதங்கள், எழுது கோல், என பை நிறைய வாங்கி வந்தேன். விடுதிக்குள் நுழைந்தவுடன் சோ ....வென மழை, மின்னல், இடி என மாறி மாறி அடித்தது. நண்பர்களிடம் சொல்லிவிட்டேன் என்னை யாரும் இரண்டு மூன்று நாட்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாதென்று. கதவை தாழிட்டேன், சன்னல்களை இழுத்து மூடினேன், பின் நாற்காலியில் உட்கார்ந்து ஆரம்பிதேன் எழுத..ஒரு காவியத்தை படைத்துவிட்டுத்தான் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வெண்டும் என ஆரம்பித்து எழுத ஆரம்பித்துவிட்டேன்...இடையில் நாம் வாங்கி வந்த காகிதங்கள் போதாதோ என்று எண்ணியபடியே விடாமல் எழுதித்தள்ளினேன்..
திடீரென எனக்கு ஒரு இடைஞ்சல், யாரோ என் அறைக் கதவை நாகரிகமாகத் தட்டுகிறார்கள்...நம் நண்பர்களுக்கு நாம் தான் ஏற்கனவே தொந்தரவு செய்யாதீர்கள் என சொல்லிவிட்டேனே ..மறுபடியும் யார் இது என்ற சிந்தனையுடனே எழுந்து வந்து கதவை மெல்ல திறந்தேன்...ஆ..என்ன ஆச்சரியம் என் கண்களை என்னாலே நம்பமுடியவில்லை..வெளியில் கம்பன், பாரதி, வள்ளுவன், ஒளவையார், மற்றும் இளங்கோவன் எல்லோரும் வாசலில் நின்றிருந்தனர். மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களை உள்ளே அழைத்து அமரவைத்தேன். முன்னெச்சரிக்கையாக ஒளவையாரின் ஊன்றுகோலை முதலில் வாங்கி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அவரை கைத்தாங்கலாக அமரவைத்தேன்..
யார் முதலில் பேச்சை துவங்குவது .... சிறிய மெளன இடைவெளி...எனக்கு இவர்களைப் பார்த்த பரவசத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை, ஆனால் பாரதி மட்டும் முகத்தை மிக கோபமாக வைத்துக்கொண்டிருந்தார்..வள்ளுவரோ தாடியை லேசாக நீவியபடி "என்ன இதெல்லாம்" என்பது போல் பார்த்தார்.
சரி எதுவானாலும் வந்தவர்களை முதலில் உபசரிப்போம், பிறகு பேசிக்கொள்வோம்,என நினைத்து விடுதியிலிருந்து கொஞ்சம் மோர் வாங்கி வந்து அனைவருக்கும் தந்தேன்.. மோரைக் குடித்த பாரதி என்னை பார்த்தார், பார்வையில் கோபம் சற்று தணிந்திருந்தது..நானும் ஒருவழியாக தைரியத்தை வரவைத்துக்கொண்டு இன்னும் மோர் வேண்டுமா என்றேன்.. உடனே பாரதி..
"யாம் பருகிய மோரினிலே இது போல் இனிதாவது எங்கும் காணேன்"
என்றார். நான் இன்னும் சிறிது மோர் கொடுத்தேன் அதையும் குடித்துவிட்டு..
"பாருக்குள்ளே நல்ல மோரு நீ தந்த இந்த மோரு என்றார்"...
அப்பாடா நிம்மதி. வள்ளுவர் மோர் குடித்துக்கொன்டிருக்கும் போது வாயில் எதும் சிக்கியிருக்க வேண்டும் போல்..அதை உடனே கீழே துப்பி விட்டு...
"துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு.
துப்பாய தூவும் மழை" என்றார்...
சரி தாங்கள் வந்ததின் நோக்கம் என்ன என்றேன்... பாரதி கோபம் கொண்டு நீ எதோ எழுதுகிறாயாமே...கேள்விப்பட்டு வந்தோம் என்றார்..ஆம் என்றேன்...முதலில் அதை நிறுத்து என்றார்.
கம்பனோ..ஏன் எங்கள் புகழ் இந்த பூமியில் நிலைத்திருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா எனக்கேட்டார்.
என் பெயர், புகழ் இந்த உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்திருக்கிறது ஆனால் அதை நீ இரண்டே நாளில் அழித்து விடுவாய் போலிருக்கிறதே.. எங்கள் புகழ் நிலைதிருக்க வேண்டுமென்றால், தமிழும், தமிழ் மக்களும் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமென்றால் இப்போதே நிறுத்து என்றார் வள்ளுவர்..... சரி நம்மை இவ்வளவு தூரம் கேட்கிறார்களே என எண்ணி தமிழில் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி, அவர்களை வழி அனுப்பி வைத்தேன்..
இதை எனக்கு வந்த சோதனையாகக் கருதாமல் தமிழுக்கு வந்ததாக நினைத்து வருந்தினேன்.. ஆங்கிலத்திலும் நல்ல புலமை எனக்கு எடுத்தேன்...எழுதினேன் ..எழுதிக்கொண்டே இருந்தேன்...வெளியே "பூட்ஸ்" காலணிகளின் சத்தம்...என்.சி.சி.மாணவர்கள்தான் நடைப் பயிற்சி செய்கிறார்கள் என்று நினைத்து கவனத்தை சிதறவிடாமல் தொடர்ந்தேன்...
ஆங்கிலத்தில்" உள்ளே வரலாமா" என்றொரு குரல்...நானும் எழுதிக்கொண்டே திரும்பிக்கூட பார்க்காமல்..ஆம்" என்றேன் அதே ஆங்கிலத்தில். பார்த்தால் ஷேக்ஸ்பியர், லியோ டால்ஸ்ட்டாய், ஷெல்லி, சர்ச்சில் மேலும் பலரும் "கோட்- சூட்" அணிந்து கம்பீரமாக நின்றனர்..அவர்களை அமர வைத்து தேனீரும் ரொட்டியும் கொடுத்தேன்...
அவர்களின் நோக்கம் என்னை எப்படியாவது எழுதாமல் தடுப்பதுதான் என்று எனக்குத் தெரிந்தாலும்...தங்களின் வருகைக்கான காரணம் என்ன என்றேன்....
தம்பி தயவுசெய்து எழுதுவதை நிறுத்து என்றார்கள் ஒரே குரலில்....கெஞ்சினார்கள்....நான் விடுவதாக இல்லை..."எழுதுவது எனது பிறப்புரிமை..அதை எழுதியேதீருவேன்" என நானும் என் பங்குக்கு வாதடினேன்..கடைசியில் என்னை ஒருவழியாக சமாதானம் செய்து என் கைகளை கட்டிப் போட்டுவிட்டனர்...சரி என் போன்ற எழுத்தாளனுக்கு மொழி ஒரு தடையே இல்லை, கிரேக்க, லத்தீன் மொழிகளில் எழுதலாமா என தீவிரமாக யோசிக்கத்தொடங்கினேன்...மறுபடியும் என் அறைக் கதவு பலமாகத் தட்டப்படுகிறது.....
எழுந்தேன்.... என்னை உலுக்கி என்னடா 10 மணி வரைக்கும் தூங்குகிறாய் என்றான் நண்பன்.. ஓ....அதுவா.. இது என்று தூக்கம் கலைத்தேன்....
ஒரு முறை இதைக் கூட எழுதலாமா என யோசித்தேன்....ஆனாலும் எதாவது எழுத வேண்டுமே.... எதை எழுத...
"நீ எதுவுமே எழுத வேண்டாம்" எழுதாமல் இருந்தாலே தமிழ் வாழும் என்று நீங்கள் சொல்வது என் காதுகளுக்கு கேட்கிறது...
-எழுதியவர் - சிவபாரதி
Sunday, October 12, 2008
வெள்ளியும், விண்வெளி ஓட ஆட்டமும்.
திங்கள் முதல் வெள்ளி வரை ஆய்வகத்தில் அரிய பணிகள் பல முடித்துவிட்டு!!!! எப்போது வெள்ளி மாலை வரும் என்று என் நண்பர்கள் காத்திருப்பர், மாலை நாலரை மணியிலிருந்தே கைபேசி கதற ஆரம்பித்து விடும். தயாரா.. நான் தயார்.. நீங்கள் தயாரா.. சரி வந்துவிடுங்கள்.. இதற்குத்தனே ஒரு வாரமாய் காத்திருக்கிறேன் இதை விட வேறென்ன முக்கியமான வேலை... கிளம்புங்கள் உடனே என்று ஆர்பரித்து கிளம்பும் நண்பர்கள் கூட்டம். ஏன் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். மாலை ஆய்வக வேலையை முடித்தும் முடிக்காமலும் அவசரமாக இல்லம் வந்து ஆடுகள ஆடையை மாற்றி இனியன், கந்தன், வள்ளி (ஒரு முறை முதல் எழுத்தை மாற்றி வந்தன், கள்ளி என அழைத்துவிட்டேன்), வேலுடையான், அவரின் அண்ணன் விக்ன வினாயகன், கணபதி, மயோன், திருமலையான் மற்றும் பலரும் நாற்பது தேனி தெருவிலிருந்து மாலை சுமார் ஐந்தரை மணிக்கு சார்லஸ்டன் கல்லூரி கதவுள் மைதானம் நோக்கி பறந்து செல்வர். சில நாட்களில் பனையேரியும் வருவார்,
மகிழ்வுந்தே இதற்கென்றே உருவாக்கப் பட்டது போல் மிக மகிழ்ச்சியாய் சார்லஸ்டன் கல்கூன் சாலையில் பயணிக்கும் போது, வரும் காட்சிகளை விவரிக்க நான் ஒருவன் மட்டும் போதாது. வாரக் கடைசி என்பதால் சார்லஸ்டன் கல்லூரி மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் மற்றும் இளம் யுவதிகள் தட்பவெப்ப நிலைக்கு சற்றும் பொருந்தாத உடைகளை அணிந்து செல்வதைக் கண்டு மனம் வருந்தி, நண்பன் அழ ஆரம்பித்து விடுவான்.. மணிரத்தினம் படதிதில் வருவது போல் ஒரே வார்த்தையில் "ஏன்" என்பது போல் பார்ப்பான், நானும் "இங்க அப்படித்தான்" என்பது போல் சொல்லி ஒரு வழியாய் தேற்றி கூட்டிச்செல்வோம். மற்ற மகிழ்வுந்திகளுக்கு நடுவில் நம்முடயதை "இணை நிறுத்தும்" போதே... என்னால் இங்கே வெகு நேரம் நிற்க முடியாது சீக்கிரம் வந்து விடுங்கள் என்று சொல்வது போல் இருக்கும் அது எங்களுக்கு.. மனதிற்குள்ளே ....நீயுமா....என்று கேட்டுக் கொண்டே ஒருவழியாக மகிழ்வுந்துலிருந்து இறங்கியதும் அவரவர்தம் விண்வெளி ஓடத்தை தோளிலே சுமந்து இறகுப்பந்தை அடிக்க, ஒரு சிறிய ஓட்டப்பயிற்சி செய்து கதவுள் மைதானத்தை அடைவோம். இல்லையெனில் ஆடுகளம் கிடைப்பது அரிதாகி விடுமே.
இவ்வுலகம் போட்டிகள் நிறைந்தது என்பது நாம் தெரிந்ததே...நம் பக்கத்து நாட்டுக்காரனுக்கும் மைதானத்தை திறப்பவனுக்கும் வெள்ளி தோரும் சண்டை நடக்குமாம்.. மெதுவாக ஒருவனைக் கூப்பிட்டு என்ன சண்டை என்று கேட்டேன்... ஐயா... இவங்க ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..காலையில ஆறறை மணிக்கே கதவ திறக்கச் சொல்றாங்க....இவங்க தொல்லை தாங்க முடியலயா..என்றார்..
ஆடுகளம் நம்மூர் அளவிற்கு தரமில்லை என்பதையெல்லாம் சகித்துகொண்டு, வீரனுக்கு மைதானம் முக்கியமில்லை, வெற்றிதான் என்றெண்ணிக் கொண்டு ஒருவழியாக ஆடுகளத்தை பிடித்துவிட்டால் ஆட்சியை பிடித்தது போல் மனம் மகிழும். எனக்கு இளகிய மனது, இந்த இறகுப் பந்து படப் போகும் பாட்டை நினைத்தால் கண்ணீர் வரும், ஆனால் என் செய்வது விளையாட்டு என்று வந்தபின் எதையும் இலகுவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எங்கள் ஊரில் ஐந்து நட்ச்சத்திர விடுதியில் கீத் சேதியுடன் பில்லியர்சும், மரப் புலியுடன் (Tiger wood) கால்ஃப் விளையாட்டும் விளையாடி அவர்களையெல்லாம் விரட்டி அடித்தவன் என்றெல்லாம் நானே என்னைப் பற்றி சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை....
விளையாட்டின் மூலம் நல்ல கருத்துகளை, பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ளலாம், இந்த ஆட்டத்தின் ஆரம்பம் எனக்கு பிடிக்கும் ஏனென்றால் தொடக்கமே "எல்லோரையும் காதல் செய்" என சொல்லியபடி முதல் பந்தை வீசுவோம்...ஆனால் பிறகு, ஒருவரை காதல் செய், இருவரை செய் என் சொல்லும்... இதில் எனக்கு உடன்படில்லை.... நான் கனியன் பூங்குன்றனாரின் பக்கம்...அனைவரும் உறவே, எனவே அனவரையும் அன்பு செய் என்பதே.....
போட்டி என்று வந்தபின் ஒருகுழுவிற்கு வெற்றியும், மற்றொன்றுக்கு தோல்வியும் என்பது உலக நியதி..ஆனால் நாங்கள் விளையாடும் போட்டியில் வெற்றி தோல்வியை கணக்கில் வைப்பதில்லை..இதன் மூலம் விட்டுக்கொடுத்தலும், நட்பும் மட்டுமே விளைகிறது... போட்டி என்பது ஆரோக்கியமான போட்டியாக இருக்கவேண்டும், அதே சமயம் ஆரோகியத்தை வளர்ப்பதாகவும், காப்பதுவுமாக இருக்க வேண்டும் என நினைத்தே நாங்கள் இதை விளையாடுகின்றோம்..
பொதுவாக விளையட்டு தொடங்கும் முன், வீரர்கள் விளையாடுவதற்கேற்ப தங்கள் உடலை " மேலே மித சூடு" செய்து தயார்ப்படுதிக் கொள்வது வழக்கம், நாங்களும் அவ்வாறு செய்வதுண்டு, சில சமயம் ஆட்டம் தொடங்கியபின், ஒரு அணியினர் சரியாக விளையாட வில்லையெனில்,அவர்கள் இது "மெலே சூடு" என்று சமாளித்துவிடுவர், விளையாட்டுதானே என் கவனமில்லாமலிருந்தால், சில சமயம் புள்ளிகளை மாற்றிக் கூறி குழப்பிவிடுவர், உதாரணமாக எட்டு/பத்து என்பதை மாற்றி, குறைந்த புள்ளியை நமதாக்கி அதிக புள்ளிகளை அவர்கள் எடுத்தது போல் தோற்றத்தை ஏற்படுத்துவர்....எனவே விளையாட்டுதானே என விளையாட்டுத்தனமாக இருந்து ஏமாந்து விடக் கூடாது.... என்ன செய்வது உலகில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர்...வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் பாடலான ...ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே....பாடலை அடிக்கடி பாடி நினைவில் வைதுக்கொள்ளுங்கள்...
மாயோனுக்கு இந்த ஆட்டம் மிகவும் பிடிக்கும், ஒருவேளை "எல்லொரையும் காதல் செய்" என்று துவங்குவதாலோ என்னவோ...
ஆரம்பத்தில் கன ரக விண்வெளி ஓடத்தில் விளையாட கடினமாக இருந்தது,பின் மயோன் இலகுரகத்தின் சிறப்புகளைக் கூறினார், மேலும் மட்டமான மட்டையால் தான் நாங்கலெல்லாம் சரியாக ஆடவில்லை என நினைத்து மயோனிடம் நல்ல மட்டை வாங்கித்தருமாரு கேட்டோம், அவரும் கோட்டின் மேல் (on line) வர்த்தகம் மூலமாக இரண்டயிரம் ரூபாய் அளவிற்கு, நம்மூர் மதிப்ப்பில்....வாங்கிக் கொடுத்தார்..அதிலிருந்து சுமாராக ஆடிக்கொண்டிருந்த நான் மோசமாக ஆட ஆரம்பித்துவிட்டேன்....இதிலுருந்து நான் கற்றது உள்ளதும் போச்சுடா.... கண்ணா என்ற பழமொழி....பிறகு காலணிதான் சரியில்லை, அதனால்தான் சரியாக விளையாடவில்லை என்றார்..... அதுவும் சரிபட்டுவரவில்லை என்றால் ஆடுகளத்தை மாற்றலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்..
நாம் நன்றாக விளையட வேண்டுமென்பதற்காக நமக்கெல்லாம் விண் ஓடம் வாங்கிக் கொடுத்தாரே என்று அவரிடம் உடனே, மூன்று மாதம் கழித்து, காசோலையை கொடுத்தேன்..அவர் வாங்கவில்லயே...நானும் நட்பு வேறு, பணம் வேறு என்று அவரிடம் வாதாடினேன்...அந்த கசோலையை கடைசிவரை வாங்கவில்லை அவர், இந்த காலத்திலும் இப்படி ஒருவரா என எண்ணி மகிழ்ந்தேன்.... சரியென்று அதற்கு அடுத்த நாள், சிற்றுண்டி சலையில் இருக்கும் தனியங்கி இயந்திரத்தில் பணமாக எடுதுக் கொடுத்ததும் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்....
நம் இனியன் பேருக்கு ஏற்றபடி அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவதிலேயே வேலையாயிருப்பார், இனியாளிடம் விளையடி விட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு, பக்கத்தில் நடக்கும் பெண்கள் கைப்பந்து போட்டியை பார்க்க கிளம்பிவிடுவார். இளவரசரும் இவருக்குத்துணையாக கிளம்பிவிடுவார்....கேட்டால்..ஆளை பார்க்கவில்லை.. ஆட்டத்தைத்தான் பார்க்கின்றேன் என்பார்....
எங்கள் குழுவில் இருக்கும், வேலுடையானின் ஆர்வம் அளப்பிடதற்கரியது,ஒரு நாள் காலில் சிறிய காயம் பட்டுவிட்டது,ஆனால் அதன் வலியை காலணியோடு இருகக் கட்டிப் போட்டுவிட்டு, ஓடத்தை தோளில் சுமந்து நடந்து சென்று அன்று ஆடிய ஆட்டம், அப்பப்பா... இன்றெல்லாம் பார்த்துகொண்டே இருக்கலாம்..இது அவனின் தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்...
கந்தனும் வள்ளியும் ஒரே அணியில் இருந்தாலும் சரி அல்லது அவர்கள் தனியே இருந்தாலும் சரி, அவர்களை வெல்லவே முடியது.
ஆட்டத்தில் இறங்கிவிட்டால், உலகமே தெரியாது, சில சமயம் கைபேசி ஒலிக்கும், இடி இடிக்கும்,மழை பொழியும், நிலம் அதிரும் அப்போதுகூட ஆட்டம் தொடரும். ஒரு வழியாய் மைதானத்துக்காரன் கம்பை பிடுங்குவான்...அப்போதுதான் லேசாக நேரத்தை பார்ப்போம்..ஏதோ பூமிப் பந்தையே வெற்றிகொண்டது போல் மிடுக்கு நடைபோட்டு வேளியே மகிழ்வுந்தை நோக்கி வரும்வோம்...
சாலையில் சரியாக சிவப்பு விளக்கு எரிந்தவுடன் எங்களையெல்லாம் கை பிடித்து அழைதுச்செல்வார் இனியன், சாலையின் பக்கவட்டு வாகனங்கள் நாம் தான் தவறாக வந்து விட்டோமா என எங்களைக் கண்டு குழம்பிப்போய் நின்று வழிவிடும், மறுபடியும் சாலையில் வரும் போது கண்ட காட்சிகள்...அதே கண்ணீர், அதே ஆறுதல்..சிலவற்றை எத்தனை முறை பார்த்தாலும், முறைத்தாலும் சலிப்பதில்லை.
வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு வந்து, நீராடி, கணவன்மார்கள் கணினி முன் மீண்டும் அரிய பணி ஆற்றுவது போல், காய்கறி, குறிப்பாக வெஙகாயம் நறுக்க,பயந்து, பாவலா செய்து கொண்டு அமர்த்திருப்பர், மனைவியிடம் ஆராய்ச்சி பேப்பர் படிக்கிறேன் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் "கோட்டின் மேல்" மூலம் வரும் நாளிதழை பதினெட்டாவது முறை படித்துகொண்டிருப்பர்.. அடுத்து வெள்ளி உடனே வர வேண்டுமென்றெண்ணியபடியே
ஏறத்தாழ ஒன்றறை ஆண்டுகளாக ஆடியும், எதோ இன்றுதான் புதிதாய் விளையடுவதை போன்றே எஙகளுக்கு வெள்ளியன்று மாலையில் கிடைக்கும் ஆர்வதிற்க்காகவே பல வெள்ளிகள் தோன்ற வேண்டுகிறேன்..
விண்வெளி ஓட ஆட்டம் வெள்ளியில் மட்டும்தானா...
சிவ பாரதி...
மகிழ்வுந்தே இதற்கென்றே உருவாக்கப் பட்டது போல் மிக மகிழ்ச்சியாய் சார்லஸ்டன் கல்கூன் சாலையில் பயணிக்கும் போது, வரும் காட்சிகளை விவரிக்க நான் ஒருவன் மட்டும் போதாது. வாரக் கடைசி என்பதால் சார்லஸ்டன் கல்லூரி மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் மற்றும் இளம் யுவதிகள் தட்பவெப்ப நிலைக்கு சற்றும் பொருந்தாத உடைகளை அணிந்து செல்வதைக் கண்டு மனம் வருந்தி, நண்பன் அழ ஆரம்பித்து விடுவான்.. மணிரத்தினம் படதிதில் வருவது போல் ஒரே வார்த்தையில் "ஏன்" என்பது போல் பார்ப்பான், நானும் "இங்க அப்படித்தான்" என்பது போல் சொல்லி ஒரு வழியாய் தேற்றி கூட்டிச்செல்வோம். மற்ற மகிழ்வுந்திகளுக்கு நடுவில் நம்முடயதை "இணை நிறுத்தும்" போதே... என்னால் இங்கே வெகு நேரம் நிற்க முடியாது சீக்கிரம் வந்து விடுங்கள் என்று சொல்வது போல் இருக்கும் அது எங்களுக்கு.. மனதிற்குள்ளே ....நீயுமா....என்று கேட்டுக் கொண்டே ஒருவழியாக மகிழ்வுந்துலிருந்து இறங்கியதும் அவரவர்தம் விண்வெளி ஓடத்தை தோளிலே சுமந்து இறகுப்பந்தை அடிக்க, ஒரு சிறிய ஓட்டப்பயிற்சி செய்து கதவுள் மைதானத்தை அடைவோம். இல்லையெனில் ஆடுகளம் கிடைப்பது அரிதாகி விடுமே.
இவ்வுலகம் போட்டிகள் நிறைந்தது என்பது நாம் தெரிந்ததே...நம் பக்கத்து நாட்டுக்காரனுக்கும் மைதானத்தை திறப்பவனுக்கும் வெள்ளி தோரும் சண்டை நடக்குமாம்.. மெதுவாக ஒருவனைக் கூப்பிட்டு என்ன சண்டை என்று கேட்டேன்... ஐயா... இவங்க ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..காலையில ஆறறை மணிக்கே கதவ திறக்கச் சொல்றாங்க....இவங்க தொல்லை தாங்க முடியலயா..என்றார்..
ஆடுகளம் நம்மூர் அளவிற்கு தரமில்லை என்பதையெல்லாம் சகித்துகொண்டு, வீரனுக்கு மைதானம் முக்கியமில்லை, வெற்றிதான் என்றெண்ணிக் கொண்டு ஒருவழியாக ஆடுகளத்தை பிடித்துவிட்டால் ஆட்சியை பிடித்தது போல் மனம் மகிழும். எனக்கு இளகிய மனது, இந்த இறகுப் பந்து படப் போகும் பாட்டை நினைத்தால் கண்ணீர் வரும், ஆனால் என் செய்வது விளையாட்டு என்று வந்தபின் எதையும் இலகுவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எங்கள் ஊரில் ஐந்து நட்ச்சத்திர விடுதியில் கீத் சேதியுடன் பில்லியர்சும், மரப் புலியுடன் (Tiger wood) கால்ஃப் விளையாட்டும் விளையாடி அவர்களையெல்லாம் விரட்டி அடித்தவன் என்றெல்லாம் நானே என்னைப் பற்றி சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை....
விளையாட்டின் மூலம் நல்ல கருத்துகளை, பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ளலாம், இந்த ஆட்டத்தின் ஆரம்பம் எனக்கு பிடிக்கும் ஏனென்றால் தொடக்கமே "எல்லோரையும் காதல் செய்" என சொல்லியபடி முதல் பந்தை வீசுவோம்...ஆனால் பிறகு, ஒருவரை காதல் செய், இருவரை செய் என் சொல்லும்... இதில் எனக்கு உடன்படில்லை.... நான் கனியன் பூங்குன்றனாரின் பக்கம்...அனைவரும் உறவே, எனவே அனவரையும் அன்பு செய் என்பதே.....
போட்டி என்று வந்தபின் ஒருகுழுவிற்கு வெற்றியும், மற்றொன்றுக்கு தோல்வியும் என்பது உலக நியதி..ஆனால் நாங்கள் விளையாடும் போட்டியில் வெற்றி தோல்வியை கணக்கில் வைப்பதில்லை..இதன் மூலம் விட்டுக்கொடுத்தலும், நட்பும் மட்டுமே விளைகிறது... போட்டி என்பது ஆரோக்கியமான போட்டியாக இருக்கவேண்டும், அதே சமயம் ஆரோகியத்தை வளர்ப்பதாகவும், காப்பதுவுமாக இருக்க வேண்டும் என நினைத்தே நாங்கள் இதை விளையாடுகின்றோம்..
பொதுவாக விளையட்டு தொடங்கும் முன், வீரர்கள் விளையாடுவதற்கேற்ப தங்கள் உடலை " மேலே மித சூடு" செய்து தயார்ப்படுதிக் கொள்வது வழக்கம், நாங்களும் அவ்வாறு செய்வதுண்டு, சில சமயம் ஆட்டம் தொடங்கியபின், ஒரு அணியினர் சரியாக விளையாட வில்லையெனில்,அவர்கள் இது "மெலே சூடு" என்று சமாளித்துவிடுவர், விளையாட்டுதானே என் கவனமில்லாமலிருந்தால், சில சமயம் புள்ளிகளை மாற்றிக் கூறி குழப்பிவிடுவர், உதாரணமாக எட்டு/பத்து என்பதை மாற்றி, குறைந்த புள்ளியை நமதாக்கி அதிக புள்ளிகளை அவர்கள் எடுத்தது போல் தோற்றத்தை ஏற்படுத்துவர்....எனவே விளையாட்டுதானே என விளையாட்டுத்தனமாக இருந்து ஏமாந்து விடக் கூடாது.... என்ன செய்வது உலகில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர்...வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் பாடலான ...ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே....பாடலை அடிக்கடி பாடி நினைவில் வைதுக்கொள்ளுங்கள்...
மாயோனுக்கு இந்த ஆட்டம் மிகவும் பிடிக்கும், ஒருவேளை "எல்லொரையும் காதல் செய்" என்று துவங்குவதாலோ என்னவோ...
ஆரம்பத்தில் கன ரக விண்வெளி ஓடத்தில் விளையாட கடினமாக இருந்தது,பின் மயோன் இலகுரகத்தின் சிறப்புகளைக் கூறினார், மேலும் மட்டமான மட்டையால் தான் நாங்கலெல்லாம் சரியாக ஆடவில்லை என நினைத்து மயோனிடம் நல்ல மட்டை வாங்கித்தருமாரு கேட்டோம், அவரும் கோட்டின் மேல் (on line) வர்த்தகம் மூலமாக இரண்டயிரம் ரூபாய் அளவிற்கு, நம்மூர் மதிப்ப்பில்....வாங்கிக் கொடுத்தார்..அதிலிருந்து சுமாராக ஆடிக்கொண்டிருந்த நான் மோசமாக ஆட ஆரம்பித்துவிட்டேன்....இதிலுருந்து நான் கற்றது உள்ளதும் போச்சுடா.... கண்ணா என்ற பழமொழி....பிறகு காலணிதான் சரியில்லை, அதனால்தான் சரியாக விளையாடவில்லை என்றார்..... அதுவும் சரிபட்டுவரவில்லை என்றால் ஆடுகளத்தை மாற்றலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்..
நாம் நன்றாக விளையட வேண்டுமென்பதற்காக நமக்கெல்லாம் விண் ஓடம் வாங்கிக் கொடுத்தாரே என்று அவரிடம் உடனே, மூன்று மாதம் கழித்து, காசோலையை கொடுத்தேன்..அவர் வாங்கவில்லயே...நானும் நட்பு வேறு, பணம் வேறு என்று அவரிடம் வாதாடினேன்...அந்த கசோலையை கடைசிவரை வாங்கவில்லை அவர், இந்த காலத்திலும் இப்படி ஒருவரா என எண்ணி மகிழ்ந்தேன்.... சரியென்று அதற்கு அடுத்த நாள், சிற்றுண்டி சலையில் இருக்கும் தனியங்கி இயந்திரத்தில் பணமாக எடுதுக் கொடுத்ததும் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்....
நம் இனியன் பேருக்கு ஏற்றபடி அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவதிலேயே வேலையாயிருப்பார், இனியாளிடம் விளையடி விட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு, பக்கத்தில் நடக்கும் பெண்கள் கைப்பந்து போட்டியை பார்க்க கிளம்பிவிடுவார். இளவரசரும் இவருக்குத்துணையாக கிளம்பிவிடுவார்....கேட்டால்..ஆளை பார்க்கவில்லை.. ஆட்டத்தைத்தான் பார்க்கின்றேன் என்பார்....
எங்கள் குழுவில் இருக்கும், வேலுடையானின் ஆர்வம் அளப்பிடதற்கரியது,ஒரு நாள் காலில் சிறிய காயம் பட்டுவிட்டது,ஆனால் அதன் வலியை காலணியோடு இருகக் கட்டிப் போட்டுவிட்டு, ஓடத்தை தோளில் சுமந்து நடந்து சென்று அன்று ஆடிய ஆட்டம், அப்பப்பா... இன்றெல்லாம் பார்த்துகொண்டே இருக்கலாம்..இது அவனின் தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்...
கந்தனும் வள்ளியும் ஒரே அணியில் இருந்தாலும் சரி அல்லது அவர்கள் தனியே இருந்தாலும் சரி, அவர்களை வெல்லவே முடியது.
ஆட்டத்தில் இறங்கிவிட்டால், உலகமே தெரியாது, சில சமயம் கைபேசி ஒலிக்கும், இடி இடிக்கும்,மழை பொழியும், நிலம் அதிரும் அப்போதுகூட ஆட்டம் தொடரும். ஒரு வழியாய் மைதானத்துக்காரன் கம்பை பிடுங்குவான்...அப்போதுதான் லேசாக நேரத்தை பார்ப்போம்..ஏதோ பூமிப் பந்தையே வெற்றிகொண்டது போல் மிடுக்கு நடைபோட்டு வேளியே மகிழ்வுந்தை நோக்கி வரும்வோம்...
சாலையில் சரியாக சிவப்பு விளக்கு எரிந்தவுடன் எங்களையெல்லாம் கை பிடித்து அழைதுச்செல்வார் இனியன், சாலையின் பக்கவட்டு வாகனங்கள் நாம் தான் தவறாக வந்து விட்டோமா என எங்களைக் கண்டு குழம்பிப்போய் நின்று வழிவிடும், மறுபடியும் சாலையில் வரும் போது கண்ட காட்சிகள்...அதே கண்ணீர், அதே ஆறுதல்..சிலவற்றை எத்தனை முறை பார்த்தாலும், முறைத்தாலும் சலிப்பதில்லை.
வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு வந்து, நீராடி, கணவன்மார்கள் கணினி முன் மீண்டும் அரிய பணி ஆற்றுவது போல், காய்கறி, குறிப்பாக வெஙகாயம் நறுக்க,பயந்து, பாவலா செய்து கொண்டு அமர்த்திருப்பர், மனைவியிடம் ஆராய்ச்சி பேப்பர் படிக்கிறேன் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் "கோட்டின் மேல்" மூலம் வரும் நாளிதழை பதினெட்டாவது முறை படித்துகொண்டிருப்பர்.. அடுத்து வெள்ளி உடனே வர வேண்டுமென்றெண்ணியபடியே
ஏறத்தாழ ஒன்றறை ஆண்டுகளாக ஆடியும், எதோ இன்றுதான் புதிதாய் விளையடுவதை போன்றே எஙகளுக்கு வெள்ளியன்று மாலையில் கிடைக்கும் ஆர்வதிற்க்காகவே பல வெள்ளிகள் தோன்ற வேண்டுகிறேன்..
விண்வெளி ஓட ஆட்டம் வெள்ளியில் மட்டும்தானா...
சிவ பாரதி...
பனை நிலத்தில் ஒரு பழமொழி மாலை
நேற்று மாலை ஒரு பிறந்த நாள் விழாவில் கூடியிருந்தோம். உணவுக்குப் பின் எங்கள் பேச்சு பழமொழிகளுக்குச் சென்றது. ஒரு இருபது பேரும் மாறி மாறி எடுத்து விட அணியணியாய் வந்தன பழமொழிகள். ஒரு இருநூறு வந்திருக்கும். எல்லாத்தையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். யாரும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை. நிறைய பேர் கேள்விப் படாதவற்றை மட்டும் இங்கே சொல்லப் போகிறோம்.ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வித்தைக்கு ஒவ்வொரு ஆளிருப்பார். திருவிளையாடலில் ஒரு வசனம் வருமே, வில்லுக்கு - விஜயன், வீணைக்கு - நாரதன், சொல்லுக்கு - அகத்தியன், அழகுக்கு - முருகன் அப்படி இப்படி என்று. அதுபோல எங்கள் ஊரில் பழமொழிக்கென்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் வெங்கடேச பாபா எனும் வெண்பா. மனிதரோடு பேசிக் கொண்டிருந்தால் போதும், மூச்சுக்கு முந்நூறு பழமொழிகள் வந்து விழும். இந்த இடுகையில் இருக்கும் பழமொழிகளில் பல அவருடையவை. இவற்றைப் போல இன்னும் பல இடுகைகளுக்கான சரக்கு அவரிடம் இருக்கிறது. வெண்பாவின் நினைவிடுக்குகளுக்குள் ஒளிந்திருக்கும் மற்ற பழமொழிகளையும் எடுத்து ரசிக்க வேண்டுமென்றால் அவரோடு உணர்வுபூர்வமாகப் பேசிப் பாருங்கள்! இந்த இடுகையை அவருடைய ஆவர்த்தனம் என்றுதான் சொல்லவேண்டும். கூட இருந்த மக்களெல்லாம், ஒவ்வொரு பழமொழியைச் சொல்லிவிட்டு ஓரமாக நிற்கும் பக்க வாத்தியக்காரர்கள் போல!
உங்களுக்குத் தெரிந்தவற்றையும் சொல்லலாம்:
ஆழாக்கு மிளகு குடுத்துட்டு ஒதுங்கி நின்னு ரசம் கேட்டாளாம்.
முக்கி முக்கிக் குத்துனவளுக்கு மூனாம். எட்டி எட்டிப் பாத்தவளுக்கு எட்டாம்.
பாடிப் பாடிக் குத்துனாலும் பதறு நெல்லாகாது.
நாட்டுக்கு நல்ல தொரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லு சுமக்குற வேலதான்.
தான் போக வழியைக் காணோம், மூஞ்சுறு விளக்கமாத்தையும் காவிக்கிட்டுப் போச்சாம்.
அடியேன்றதுக்குப் பொண்டாட்டி இல்லையாம், புள்ளைக்குப் பேர் வைக்கப் போனானாம்.
ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்.
கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்.
ஆனா அச்சுல வாரு, ஆவலைன்னா அண்டாவுல வாரு.
எள்ளுருண்டை வேண்டாம்னுட்டு உரலுக்குள்ள தலையை விட்டானாம்.
குலுக்கி மொளகாய் அறச்சா; கொதிக்காம எறக்கி வச்சா.
காலைப் புடிக்கிற கணக்கப்புள்ளைக்கு மாசம் பத்து ரூவா.
கறக்குறது காப்படி; உதைக்கிறது பல்லுப் போக.
(நடுவுல ஒருத்தரு வந்து பாதிப் பாதி பழமொழியா சொல்லிட்டுப் போனாரு. ஏன்னா மீதிப் பாதியைக் கூட்டத்துல சொல்ல முடியாதுன்னுட்டாரு!)
கிடக்குறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில வையி.
புள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளிக் குதிச்சானாம்.
ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.
நாய்க்கு வேலை இல்ல, நிக்க நேரமில்லை.
நாயை எங்க அடிச்சாலும் காலைத்தான் தூக்குமாம்.
மார்காழிக்குப் பின்னாடி மழையும் கிடையாது; மச்சானை மிஞ்சின உறவும் கிடையாது.
சுண்டைக்கா கால்பணம்; சொமை கூலி முக்காப்பணம்.
கத்தரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்துதானாகணும்.
நடுநடுவுல தெலுங்குலயும் பழமொழிகள் வந்து விழுந்தன.
ஆசபாசம் அக்கட அன்னவஸ்த்ரம் இக்கட
பேரு பெத்த பேரு தாக நீலு லேது
பழமொழிகள் நம் முன்னோர்களின் அனுபவச் சூத்திரங்கள். எள்ளலும், சுவையும், சொற்சுருக்கமும் இவற்றின் தனிச் சிறப்புகள். பழமொழிகளைத் தொகுக்கும் முயற்சிகள் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனாலும் ஏட்டளவில் இல்லாமல் அன்றாட வாழ்வில் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், இவற்றை நெடிது வாழச் செய்யலாம்.
இவ்விடுகையின் முதன்மைப் பழமொழியாளர்: வெண்பா
கோரஸ்: பனைநிலத்து மக்கள் (எல்லாப் பேரையும் சொல்ல முடியலீங்கோ, மன்ச்சுக்கங்கோ!)
உங்களுக்குத் தெரிந்தவற்றையும் சொல்லலாம்:
ஆழாக்கு மிளகு குடுத்துட்டு ஒதுங்கி நின்னு ரசம் கேட்டாளாம்.
முக்கி முக்கிக் குத்துனவளுக்கு மூனாம். எட்டி எட்டிப் பாத்தவளுக்கு எட்டாம்.
பாடிப் பாடிக் குத்துனாலும் பதறு நெல்லாகாது.
நாட்டுக்கு நல்ல தொரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லு சுமக்குற வேலதான்.
தான் போக வழியைக் காணோம், மூஞ்சுறு விளக்கமாத்தையும் காவிக்கிட்டுப் போச்சாம்.
அடியேன்றதுக்குப் பொண்டாட்டி இல்லையாம், புள்ளைக்குப் பேர் வைக்கப் போனானாம்.
ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்.
கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்.
ஆனா அச்சுல வாரு, ஆவலைன்னா அண்டாவுல வாரு.
எள்ளுருண்டை வேண்டாம்னுட்டு உரலுக்குள்ள தலையை விட்டானாம்.
குலுக்கி மொளகாய் அறச்சா; கொதிக்காம எறக்கி வச்சா.
காலைப் புடிக்கிற கணக்கப்புள்ளைக்கு மாசம் பத்து ரூவா.
கறக்குறது காப்படி; உதைக்கிறது பல்லுப் போக.
(நடுவுல ஒருத்தரு வந்து பாதிப் பாதி பழமொழியா சொல்லிட்டுப் போனாரு. ஏன்னா மீதிப் பாதியைக் கூட்டத்துல சொல்ல முடியாதுன்னுட்டாரு!)
கிடக்குறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில வையி.
புள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளிக் குதிச்சானாம்.
ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.
நாய்க்கு வேலை இல்ல, நிக்க நேரமில்லை.
நாயை எங்க அடிச்சாலும் காலைத்தான் தூக்குமாம்.
மார்காழிக்குப் பின்னாடி மழையும் கிடையாது; மச்சானை மிஞ்சின உறவும் கிடையாது.
சுண்டைக்கா கால்பணம்; சொமை கூலி முக்காப்பணம்.
கத்தரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்துதானாகணும்.
நடுநடுவுல தெலுங்குலயும் பழமொழிகள் வந்து விழுந்தன.
ஆசபாசம் அக்கட அன்னவஸ்த்ரம் இக்கட
பேரு பெத்த பேரு தாக நீலு லேது
பழமொழிகள் நம் முன்னோர்களின் அனுபவச் சூத்திரங்கள். எள்ளலும், சுவையும், சொற்சுருக்கமும் இவற்றின் தனிச் சிறப்புகள். பழமொழிகளைத் தொகுக்கும் முயற்சிகள் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனாலும் ஏட்டளவில் இல்லாமல் அன்றாட வாழ்வில் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், இவற்றை நெடிது வாழச் செய்யலாம்.
இவ்விடுகையின் முதன்மைப் பழமொழியாளர்: வெண்பா
கோரஸ்: பனைநிலத்து மக்கள் (எல்லாப் பேரையும் சொல்ல முடியலீங்கோ, மன்ச்சுக்கங்கோ!)
Saturday, October 11, 2008
சார்ல்ஸ்டனில் வானசாகசம்
சென்றமுறை ஊருக்கு (அதாங்க, இந்தியா) போகுமுன், 2 ஆம் வகுப்பு படிக்கும் என் அண்ணன் மகனிடம் என்ன வேண்டுமென்று கேட்டதற்கு, ஆகாய விமானம் வேண்டுமென்றான். சரிதான் என்று நல்ல அழகான விமானம் (விளையாட்டு பொம்மை) ஒன்று வாங்கிச் சென்றேன். அங்கு சென்றவுடன் முதல் வேலையாக அதை அவனிடம் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு அவன் "ஓ"வென்று ஒரே அழுகை. என்ன ஏது என்று கேட்டதற்கு, அவன் என்னிடம் நிலத்தில் நிற்கும் விமானம் கேட்கவில்லையாம். பறக்கும் விமானம் கேட்டானாம். எனக்கு எப்படி அவனை சமாளிப்பதென்றே தெரியவில்லை. பிறகு அண்ணி அவனை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. என்ன செய்வது. எப்போதும் கீழே நிற்கும் விமானங்களை விட பறக்கும் விமானங்களின் மேல்தான் எல்லாருக்கும் ஒரு ஈர்ப்பு. அதுவும் வான சாகசம் செய்யும் விமானங்களைப் பார்த்தால், கேட்கவே வேண்டாம், அவ்வளவு தான். சார்ஸ்டனில் வான சாகசம் நடக்கப் போகிறது இன்னும் சில நாட்களில் என்று இனியன் என்னிடம் சொன்னவுடன் எனக்கு மிகவும் ஆனந்தம். இதுவரைப் பார்த்ததில்லை. தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் தான் பார்த்திருக்கிறேன். நேரில் பார்ப்பதென்றால் சும்மாவா?
இரவு தூக்கம் வர மறுத்தது. அப்படியே வந்தாலும், கனவுகளில் விமானங்களாக வந்தது. ஒருவழியாக அந்த நாளும் வந்தது. காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வர இருக்கும் என்றும், 9 மணிக்கு முன்னால் சென்றால் மட்டுமே கூட்டத்தில் சிக்கி வழியில் மாட்டிகொள்ளாமல், சாகசங்களை முழுமையாக பார்க்கமுடியும் என்றும் இனியன் முதலிலேயே சொல்லிவிட்டார். என் 3 வயது பையனையும், ஊரிலிருந்து எங்களைப் பார்க்க வந்துள்ள அப்பா அம்மாவையும் அழைத்துக் கொண்டு காலை 8 மணிக்கெல்லாம் கட்டுசோறு கட்டிக்கொண்டு புறப்பட்டோம். வேறென்ன அங்கு விற்கும் காய்ந்த பிஸாவையும், ஹாட் டாக்கையுமா சாப்பிட முடியும்?
பாதி வழிவரை போக்குவரத்து நன்றாகத்தான் இருந்தது. சார்ல்ஸ்டன் இராணுவ விமானதளத்தை (இதப் பத்தி நம்ம கந்தன் விவரமா எழுதியிருக்காரு) நெருங்கும் முன் போக்குவரத்து நெரிசல். அம்மாடி? அம்புட்டு கூட்டம். போற வழியிலேயே இவ்வளவு கூட்டம் என்றால், அங்கு?.... அப்படி இப்படி என்று தளத்தை நெருங்கினோம். நுழைவாயிலில் இராணுவ வீரர்கள் எல்லா கார்களையும் சோதனை செய்து உள்ளே விட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது புரிந்தது போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்.
நடுவில் கைதொலைபேசி கூப்பிட்டது. “எங்கு இருக்கிறீர்கள்?” என்று இனியன் கேட்கிறார். இன்னும் பிற நண்பர்களும் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதோ வந்துகொண்டே இருக்குறோம் என்று சொல்லிக்கொண்டே மெதுவாக நெரிசலில் ஊர்ந்து காரை நிறுத்துவதற்குள் வான சாகசங்களை ஆரம்பித்துவிட்டார்கள். 'ஆ' வென்று அப்போது பிளந்த வாய் தான். கடைசிவரை மூடவேயில்லை. அவ்வளவு அருமை. நான் மட்டுமல்ல. என் பையனும் தான். எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு பதிலே காணோம். திறந்த வாய் அங்கும் மூடவில்லை.
அப்படி இப்படி என்று சரியான இடம் பார்த்து கொண்டுவந்த மடக்கு நாற்காலிகளை பிரித்து பெற்றோர்களும், தள்ளுவண்டியில் மகனும் உட்கார, நான் நின்றுகொண்டே பார்க்க ஆரம்பித்தேன். கூட்டமோ கூட்டம். அவ்வளவு கூட்டம். வான சாகசம் பார்க்க இவ்வளவு பேரா? குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள், நிருபர்கள் என மக்கள் கூட்டம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தவில்லை யாரும். விமான ஓடுபாதைக்கு அருகில் போகவே முடியவில்லை. அவ்வளவு கூட்டம். பொதுமக்கள் பார்வைக்கென இரண்டாம் உலகப்போர் முதல் தற்போது உபயோகத்தில் உள்ள விமானங்கள் வரை நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே சிறிய ரக விமானங்களையே நிற்கவைக்கலாம் போல் பெரிதான “டிரீம் லைனர்” என்னும் மிகப்பெரிய விமானம் எல்லோரையும் கவர்ந்தது.. விமான சாகசங்கள் இல்லாதபோது மக்கள் அவற்றின் உள்ளே சென்று பார்வையிட்டனர்.
இச்சாகசங்கள் பற்றி விளக்கிச் சொல்வது அவ்வளவு சுலபமில்லை. பறவைகள் தோற்றது போங்கள். நான்கு ஐந்து விமானங்கள் அணிவகுத்து சாகசங்கள், தனியாக சாகசங்கள், ஒன்றை ஒன்று இடிப்பது போல் சென்று அனைவரையும் 'ஆ' போட வைத்த சாகசங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை நான் சொல்வதை விட, படங்களில் பாருங்கள். உங்களுக்கே தெரியும். தன்டர் பேர்ட், புளு ஏஞ்சல் f15, f16 என ஏதோ A B C D 1 2 3 சொல்வது போல ஒவ்வொரு விமானத்தைப் பற்றியும் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வேறு. நமக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை. கட்டுசோறும், கடையில் வாங்கிய குளிர் பானமும் களைப்பு வராமல் பார்த்துக்கொண்டன.
இடையில் நண்பர்கள் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள். அவ்வளவு கூட்டத்தில் கண்டுபிடிப்பதற்கு கடினம் தான். இனியன், இனியாள், கந்தன், வள்ளி மற்றும் வேலுடையான், இளமை அரசன் ஆகியோர் துணைவியருடன் வந்து சேர்ந்தனர். நண்பர்களுடன் கதை பேசிக்கொண்டே வேடிக்கை பார்த்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. இது தான் கடைசி நிகழ்ச்சி என்று அறிவிப்பாளர் அறிவித்ததும் தான் மாலையாகிவிட்டதை உணர்ந்தேன். வீடு திரும்பிய பிறகும் சில நாட்களுக்கு மனது அதையே அசைபோட்டுக் கொண்டிருந்தது. வருடத்திற்கு ஒருமுறை இந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என நினைக்கும் போது மனதுக்கு மகிழ்சியாக இருக்கிறது.





இரவு தூக்கம் வர மறுத்தது. அப்படியே வந்தாலும், கனவுகளில் விமானங்களாக வந்தது. ஒருவழியாக அந்த நாளும் வந்தது. காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வர இருக்கும் என்றும், 9 மணிக்கு முன்னால் சென்றால் மட்டுமே கூட்டத்தில் சிக்கி வழியில் மாட்டிகொள்ளாமல், சாகசங்களை முழுமையாக பார்க்கமுடியும் என்றும் இனியன் முதலிலேயே சொல்லிவிட்டார். என் 3 வயது பையனையும், ஊரிலிருந்து எங்களைப் பார்க்க வந்துள்ள அப்பா அம்மாவையும் அழைத்துக் கொண்டு காலை 8 மணிக்கெல்லாம் கட்டுசோறு கட்டிக்கொண்டு புறப்பட்டோம். வேறென்ன அங்கு விற்கும் காய்ந்த பிஸாவையும், ஹாட் டாக்கையுமா சாப்பிட முடியும்?
பாதி வழிவரை போக்குவரத்து நன்றாகத்தான் இருந்தது. சார்ல்ஸ்டன் இராணுவ விமானதளத்தை (இதப் பத்தி நம்ம கந்தன் விவரமா எழுதியிருக்காரு) நெருங்கும் முன் போக்குவரத்து நெரிசல். அம்மாடி? அம்புட்டு கூட்டம். போற வழியிலேயே இவ்வளவு கூட்டம் என்றால், அங்கு?.... அப்படி இப்படி என்று தளத்தை நெருங்கினோம். நுழைவாயிலில் இராணுவ வீரர்கள் எல்லா கார்களையும் சோதனை செய்து உள்ளே விட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது புரிந்தது போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்.
நடுவில் கைதொலைபேசி கூப்பிட்டது. “எங்கு இருக்கிறீர்கள்?” என்று இனியன் கேட்கிறார். இன்னும் பிற நண்பர்களும் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதோ வந்துகொண்டே இருக்குறோம் என்று சொல்லிக்கொண்டே மெதுவாக நெரிசலில் ஊர்ந்து காரை நிறுத்துவதற்குள் வான சாகசங்களை ஆரம்பித்துவிட்டார்கள். 'ஆ' வென்று அப்போது பிளந்த வாய் தான். கடைசிவரை மூடவேயில்லை. அவ்வளவு அருமை. நான் மட்டுமல்ல. என் பையனும் தான். எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு பதிலே காணோம். திறந்த வாய் அங்கும் மூடவில்லை.
அப்படி இப்படி என்று சரியான இடம் பார்த்து கொண்டுவந்த மடக்கு நாற்காலிகளை பிரித்து பெற்றோர்களும், தள்ளுவண்டியில் மகனும் உட்கார, நான் நின்றுகொண்டே பார்க்க ஆரம்பித்தேன். கூட்டமோ கூட்டம். அவ்வளவு கூட்டம். வான சாகசம் பார்க்க இவ்வளவு பேரா? குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள், நிருபர்கள் என மக்கள் கூட்டம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தவில்லை யாரும். விமான ஓடுபாதைக்கு அருகில் போகவே முடியவில்லை. அவ்வளவு கூட்டம். பொதுமக்கள் பார்வைக்கென இரண்டாம் உலகப்போர் முதல் தற்போது உபயோகத்தில் உள்ள விமானங்கள் வரை நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே சிறிய ரக விமானங்களையே நிற்கவைக்கலாம் போல் பெரிதான “டிரீம் லைனர்” என்னும் மிகப்பெரிய விமானம் எல்லோரையும் கவர்ந்தது.. விமான சாகசங்கள் இல்லாதபோது மக்கள் அவற்றின் உள்ளே சென்று பார்வையிட்டனர்.
இச்சாகசங்கள் பற்றி விளக்கிச் சொல்வது அவ்வளவு சுலபமில்லை. பறவைகள் தோற்றது போங்கள். நான்கு ஐந்து விமானங்கள் அணிவகுத்து சாகசங்கள், தனியாக சாகசங்கள், ஒன்றை ஒன்று இடிப்பது போல் சென்று அனைவரையும் 'ஆ' போட வைத்த சாகசங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை நான் சொல்வதை விட, படங்களில் பாருங்கள். உங்களுக்கே தெரியும். தன்டர் பேர்ட், புளு ஏஞ்சல் f15, f16 என ஏதோ A B C D 1 2 3 சொல்வது போல ஒவ்வொரு விமானத்தைப் பற்றியும் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வேறு. நமக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை. கட்டுசோறும், கடையில் வாங்கிய குளிர் பானமும் களைப்பு வராமல் பார்த்துக்கொண்டன.
இடையில் நண்பர்கள் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள். அவ்வளவு கூட்டத்தில் கண்டுபிடிப்பதற்கு கடினம் தான். இனியன், இனியாள், கந்தன், வள்ளி மற்றும் வேலுடையான், இளமை அரசன் ஆகியோர் துணைவியருடன் வந்து சேர்ந்தனர். நண்பர்களுடன் கதை பேசிக்கொண்டே வேடிக்கை பார்த்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. இது தான் கடைசி நிகழ்ச்சி என்று அறிவிப்பாளர் அறிவித்ததும் தான் மாலையாகிவிட்டதை உணர்ந்தேன். வீடு திரும்பிய பிறகும் சில நாட்களுக்கு மனது அதையே அசைபோட்டுக் கொண்டிருந்தது. வருடத்திற்கு ஒருமுறை இந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என நினைக்கும் போது மனதுக்கு மகிழ்சியாக இருக்கிறது.





Subscribe to:
Posts (Atom)
























