என்னடா இந்த தடவை வெய்யில் இந்தக் கொதி கொதிக்கிது, இதுல போயி ஆடுங்கன்னு பனையேறி சொல்லுறாரே, எதுனா சதி இருக்கான்னு சொல்லுவீங்க. அதுக்காகத்தான் அருமையா நிழல் இருக்கிற ஒரு சோலைக்குள்ள நம்ம கோடை விழா ஏற்பாடாகி இருக்கு. வெய்யில் வேணும்னாலும் இருக்கு, நெழல் வேணும்னாலும் இருக்கு. உங்களுக்குப் புடிச்ச எடத்துல விளையாடலாம். மோரும், நீரும், பழரசங்களும் பருக இருக்கும். பழகத் தோழர்கள் இருப்பார்கள். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உற்சாகமளிக்கும் விளையாட்டுக்கள் இருக்கும். யாரோ கபடி, கைப்பந்து என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னும் என்னென்ன விளையாட்டெல்லாம் முளைக்குமோ யார் கண்டது! கூடவே வரும் ஆண்டு பேரவை நிகழ்ச்சியைக் குறித்த சிறு கலந்துரையாடலும் இருக்கும். அக்கம்பக்கத்து மாநிலங்களிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள். உங்கள் நண்பர்களுக்குச் சொல்லுங்கள். அனைவரையும் அழைத்து வாருங்கள்! சந்திப்போம் கோடை விழாவில்! உங்களுக்குப் பிடித்த விளையாட்டுக்களையும், உணவுகளையும் அனைவருடனும் பகிரலாம்!
எங்கே:
Palmetto Islands County Park, Big Oak Shelter
444 Needlerush Pkwy
Mount Pleasant, SC 29464
எப்போது: ஆகஸ்ட் 8, ஞாயிறு காலை 10:00 முதல் மாலை 5:00 வரை
தொடர்புக்கு: 843 737 1296
Sunday, July 25, 2010
Sunday, July 18, 2010
பேரவை விழாவில் முத்திரை பதித்த பனைநிலம்
கனெக்டிகட்டில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் விழாவில் நம் சங்கத்தின் சார்பில் சுமார் 15 பேர் கலந்துகொண்டோம். சுமார் 2000 பேர் வந்திருந்த விழாவில் இந்தப் பதினைந்து பேர் குழு பதித்த முத்திரை பலமானது, நம் சங்கத்துக்குப் பெயர் சேர்த்தது! முதல் நாள் நிகழ்ச்சியில் நம் சங்கம் நிகழ்த்திய "யார் தமிழர்" தெருக்கூத்து நடைபெற்றது. இதன் முழு வசனம் மற்றும் பாடல்களை வேண்டுவோர் பனைநிலத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம். நம் கலை இளவரசன் வருவதாக இருந்து பிறகு வரவியலாமல் போனது மாபெரும் வருத்தமென்றாலும், ஒருவாறு சமாளித்துவிட்டோம். ஹரியும், சந்தோஷும் ஒரு புறம் நின்று எடக்கு மடக்காகக் கேள்விகளைப் பாடியும், குத்தாட்டம் ஆடியும் கேட்டுக் கொண்டிருக்க அதற்குத் தக்க பதில்களை சூரியன், சுந்தரவடிவேல் மற்றும் அசத்தல் நடிகர் தாமரையாரும் பதில் சொல்ல, நடுவே வந்து இளங்கோ, சிபி, மாசிலன், நெல்லி மற்றும் ராஜசேகர் ஆகியோர் தம் பங்குக்குக் கலக்கிச் செல்ல, பிறகு பறை இசையும், பாடல்களுமாய்த் தெருக்கூத்து முடிந்தது. மேடையின் பின்னேயிருந்து எங்களை உற்சாகப்படுத்திய முனைவர் தண்டபானி மற்றும் ஜானகிக்கு எங்கள் நன்றிகள். இத் தெருக்கூத்தின் ஆக்கத்திலும், வெற்றியிலும், இதில் நடித்த அத்தனை பேருக்கும், பார்த்துக் கருத்துக்களைக் கூறிய அத்தனை நண்பர்களுக்கும் பங்குண்டு. அவர்களுக்கு நம் சங்கத்தின் சார்பில் நன்றிகள் பல! இன்னும் சற்று நேரம் பறையடித்திருக்கலாம் என்ற ஒரு சிறு குறை கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இருந்தது. அக்குறையினை அடுத்து வந்த இரு நாட்களிலும் தீர்த்துவிட்டோம். எப்படி என்கிறீர்களா? Boycott Sri Lanka என்றொரு சிறு கடையை USTPAC அங்கே வைத்திருந்தது. அங்கே Boycott Sri Lanka என்று அச்சடித்த சட்டைகளை வாங்கி அணிந்துகொண்டோம். அக்கடையின் நண்பரைக் கொஞ்சம் சட்டைகளையும் காரொட்டிகளையும் (bumper stickers) எடுத்துவரச் சொன்னோம். நாங்கள் பறையடிக்க, அவர் தெருவில் கூவிக் கூவிச் சட்டைகளை விற்க மக்கள் அனைவரையும் அது கவர்ந்தது. கடையில் சென்று சட்டையை வாங்க முன்வராத பலரும் கேட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அப்படியே அடித்துக் கொண்டே உணவருந்துமிடத்தையும் ஒருமுறை சுற்றி வந்தோம். இறுதியில் USTPAC நண்பர் தழுவிக் கொண்டார். பறையொலியில் வாட்டர்பரியின் தெருக்கள் துள்ளின. கடந்து சென்றவர்கள் திரும்பிப் பார்த்தனர். நின்றவர்கள் சற்றே ஆடினர். ஆடியவர்களுக்கு மேலும் பரவசம். சிலர் பறையைத் தொட்டனர், சிலர் அடித்துப் பார்க்கலாமா என்றனர். தமிழர்களின் ஆதி இசையான பறை, தொல்காப்பியத்திலும் சொல்லப் படுவது. ஒரு சிறு கருவி இத்தனை உள்ளங்களையும் ஆட்டுவிப்பதால்தான் அது இத்தனைக் காலங்களையும் கடந்து வாழ்கிறது. முதல் நாளன்றே அமைப்பாளர்களில் ஒருவர் வந்து, நாளை மதுரைவீரன் தெருக்கூத்து நடக்கப் போகிறது, அதிலே மதுரைவீரனை ஊர்வலமாக அழைத்துவரும் ஒரு காட்சி வரும். அதிலே உங்கள் குழு பறையடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது ஒரு பெரும் அங்கீகாரமாக எமக்குப் பட்டது.
நம் சங்கத்தினர் பலரும் கலந்துகொண்ட மற்றொரு நிகழ்வு 'இலக்கிய வினாடி வினா'. இது பலருக்கும் புதிய இலக்கியச் செய்திகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்தப் பல்லூடக நிகழ்ச்சி அனைவரையும் ஆவலோடு அமர்ந்து பார்க்க வைக்கும் சுவை மிகுந்தது. இவ்வாண்டு வீ.ப.கா. சுந்தரம் அணி மற்றும் விபுலானந்தர் அணி என்ற இரு அணிகள் இருந்தன. கடுமையான போட்டியில் விபுலானந்தர் அணி வென்றது. இருப்பினும் நிகழ்ச்சியில் யாரோ குறிப்பிட்டது போல, யார் வென்றாலும் வெற்றி தமிழுக்கே என்பது பொருத்தமாகத் தோன்றியது. குழந்தைகள் திருக்குறள் போட்டி, தமிழ்த் தேனீ வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் கூட்டத்தினை முனைவர் தண்டபானி அவர்கள் நிகழ்த்தினார்கள். நிறைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களைப் பார்க்க முடிந்தது. அடுத்த ஆண்டு இன்னும் பலரும் வருவார்கள் எனத் தோன்றுகிறது.
அடுத்த நாள் மதுரைவீரன் தெருக்கூத்து! நாங்கள் பறையை எப்போது எப்படி அடிக்க வேண்டும் என ஒத்திகை பார்க்க ஒத்திகைக் கூடத்துக்குச் சென்றோம். அங்கே குழந்தைகள், ஆடவர், பெண்டிர் என ஒரு பெரும் குழு ஊர்வலத்தில் ஆடிக் கொண்டு செல்லத் தம்மைத் தயாரித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்குப் பறையிசையினைக் கேட்டவுடனேயே துள்ளல். அனைவரும் ஆடிக் களித்தனர். நியூஜெர்சியிலிருந்து செல்வன் என்றொரு நண்பர் வந்திருந்து பறையினை எங்களோடு இணைந்துகொண்டு அடித்தார். அவர் ஒரு அருமையான இசைஞர். ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு ஒத்திகைக் கூடத்துக்கு வந்த இளையோர் சங்கத்தினர் ஒரு பதினைந்து பேர் பறையிசைக்கச் சொல்லிக் கேட்டு ஆடி மகிழ்ந்தனர். அவர்களில் சிலர் இசைக்கவும் ஆர்வம் காட்டினர். இளையோர்களிடத்தில் இவ்விசைக்கு இருக்கும் பெருமதிப்பையும், ஆர்வத்தையும் உணர முடிந்தது. அடுத்த ஆண்டு அவர்களுக்காகத் தனியாக ஒரு நடனத்துக்கு இசைப்போம் என்று கூறிவந்திருக்கிறோம்.
மதுரைவீரன் தெருக்கூத்து அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. நடிகர்களின் வேடமும், துள்ளலும், சுழற்சியும், வசனங்களும், பாடல்களும் காண்பவரை இழுத்தன. சிலருக்குப் புதுமை. சிலருக்கு அந்தக் கால நினைவுகள். குழந்தையாக இருந்த மதுரைவீரன் பெரியவனாகி மேடையிலே தோன்றவேண்டும். அப்போது மேடையின் பின்புறத்தே இருந்து தோன்றாமல், பார்வையாளர்களின் கடைசி வரிசையிருக்கும் வாசல் வழியாக வருவதாக ஏற்பாடு. அங்குதான் நம் பறையும் காத்திருக்கிறது. 'இதோ வருகிறார் மதுரைவீரன்' என்று மேடையிலே வசனம் வந்ததும், அதிர ஆரம்பித்தது பறை. மேடையைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் மொத்தமும் பின்னே திரும்பியது. மதுரைவீரன் வேடத்தோடு நின்று ஆட, முன்னே பறையும், தவிலும் ஒலிக்க, கூட்டம் ஆட அது ஒரு பெரும் ஊர்வலத்தைக் கண் முன் நிறுத்தியது. பார்வையாளர்களில் பலரும் ஆடுவதற்கு ஓடி வந்தனர். அவர்களைப் பிடித்துக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கிடையில் மேடையிலே ஒரு அம்மாவுக்குச் சாமி வந்துவிட்டது (அல்லது அப்படி ஆடினார்!). ஒருவாறாகக் கூட்டத்தைக் கடந்து மதுரைவீரனை மேடையில் ஏற்றிவிட்டோம் நாங்கள் இறங்கிக் கொள்ளக் கூத்து தொடர்ந்தது.
அதன் பிறகு இன்னிசை நிகழ்ச்சிக்கு நடுவே அடுத்த ஆண்டு பேரவை விழாவுக்கு நம் பனைநிலம் தமிழ்ச் சங்கத்துக்கு அனைவரையும் வரவேற்பதற்காக நம் சங்கத்தின் சார்பாகச் சென்றிருந்தவர்கள் மேடையேறினோம். பறையோடுதான். அடுத்த ஆண்டு பேரவை விழாவின் ஒருங்கிணைப்பாளரும், பேரவையின் புதிய துணைத்தலைவருமான முனைவர் தண்டபானி அவர்கள் சுருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் நமது அழைப்பிதழை விடுத்தார். வணக்கம் கூறி மேடையிலிருந்து அகல முயன்றோம். கூட்டம் விடவில்லை, மேளம், பறை என்று குரலெழுப்ப மறுபடியும் ஒரு முழக்குப் போட்டுவிட்டுத்தான் இறங்கினோம்!
பல சங்கங்களிலிருந்து வந்திருந்த நண்பர்களும், புதிதாய்க் கிடைத்த நண்பர்களும் நம்மூர்த் திருவிழாவுக்கு வரவும், நம்முடன் சேர்ந்து இவ்விழாவை ஒழுங்கு செய்யவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஒரு சிறந்த விழாவைக் கண்டு களித்த மனநிறைவோடும், நம் பனைநிலத்தின் முத்திரையை அவ்விழாவில் பதித்த பெருமிதத்தோடும், சீரும் சிறப்புமாக நம்மூர் விழா நடந்தேறும் என்ற உறுதியோடும் கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்துக்கும், பேரவைக்கும் நன்றி சொல்லிக் கிளம்பினோம்!
முக்கியமான பின் குறிப்பு: வரும் ஆகஸ்டு 8ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை பனைநிலத்தின் கோடை விழா நிகழ இருக்கிறது. அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். இவ்விழாவின்போது வரும் பேரவை விழாவினைச் சிறப்பாக நடத்துதற்குரிய திட்டக் கூட்டமும் நிகழும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். ========================================================================எழுதியவர்: பனையேறி (கண்ணன் வராததால் படங்கள் இல்லை :))
அப்படியே அடித்துக் கொண்டே உணவருந்துமிடத்தையும் ஒருமுறை சுற்றி வந்தோம். இறுதியில் USTPAC நண்பர் தழுவிக் கொண்டார். பறையொலியில் வாட்டர்பரியின் தெருக்கள் துள்ளின. கடந்து சென்றவர்கள் திரும்பிப் பார்த்தனர். நின்றவர்கள் சற்றே ஆடினர். ஆடியவர்களுக்கு மேலும் பரவசம். சிலர் பறையைத் தொட்டனர், சிலர் அடித்துப் பார்க்கலாமா என்றனர். தமிழர்களின் ஆதி இசையான பறை, தொல்காப்பியத்திலும் சொல்லப் படுவது. ஒரு சிறு கருவி இத்தனை உள்ளங்களையும் ஆட்டுவிப்பதால்தான் அது இத்தனைக் காலங்களையும் கடந்து வாழ்கிறது. முதல் நாளன்றே அமைப்பாளர்களில் ஒருவர் வந்து, நாளை மதுரைவீரன் தெருக்கூத்து நடக்கப் போகிறது, அதிலே மதுரைவீரனை ஊர்வலமாக அழைத்துவரும் ஒரு காட்சி வரும். அதிலே உங்கள் குழு பறையடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது ஒரு பெரும் அங்கீகாரமாக எமக்குப் பட்டது.
நம் சங்கத்தினர் பலரும் கலந்துகொண்ட மற்றொரு நிகழ்வு 'இலக்கிய வினாடி வினா'. இது பலருக்கும் புதிய இலக்கியச் செய்திகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்தப் பல்லூடக நிகழ்ச்சி அனைவரையும் ஆவலோடு அமர்ந்து பார்க்க வைக்கும் சுவை மிகுந்தது. இவ்வாண்டு வீ.ப.கா. சுந்தரம் அணி மற்றும் விபுலானந்தர் அணி என்ற இரு அணிகள் இருந்தன. கடுமையான போட்டியில் விபுலானந்தர் அணி வென்றது. இருப்பினும் நிகழ்ச்சியில் யாரோ குறிப்பிட்டது போல, யார் வென்றாலும் வெற்றி தமிழுக்கே என்பது பொருத்தமாகத் தோன்றியது. குழந்தைகள் திருக்குறள் போட்டி, தமிழ்த் தேனீ வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் கூட்டத்தினை முனைவர் தண்டபானி அவர்கள் நிகழ்த்தினார்கள். நிறைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களைப் பார்க்க முடிந்தது. அடுத்த ஆண்டு இன்னும் பலரும் வருவார்கள் எனத் தோன்றுகிறது.
அடுத்த நாள் மதுரைவீரன் தெருக்கூத்து! நாங்கள் பறையை எப்போது எப்படி அடிக்க வேண்டும் என ஒத்திகை பார்க்க ஒத்திகைக் கூடத்துக்குச் சென்றோம். அங்கே குழந்தைகள், ஆடவர், பெண்டிர் என ஒரு பெரும் குழு ஊர்வலத்தில் ஆடிக் கொண்டு செல்லத் தம்மைத் தயாரித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்குப் பறையிசையினைக் கேட்டவுடனேயே துள்ளல். அனைவரும் ஆடிக் களித்தனர். நியூஜெர்சியிலிருந்து செல்வன் என்றொரு நண்பர் வந்திருந்து பறையினை எங்களோடு இணைந்துகொண்டு அடித்தார். அவர் ஒரு அருமையான இசைஞர். ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு ஒத்திகைக் கூடத்துக்கு வந்த இளையோர் சங்கத்தினர் ஒரு பதினைந்து பேர் பறையிசைக்கச் சொல்லிக் கேட்டு ஆடி மகிழ்ந்தனர். அவர்களில் சிலர் இசைக்கவும் ஆர்வம் காட்டினர். இளையோர்களிடத்தில் இவ்விசைக்கு இருக்கும் பெருமதிப்பையும், ஆர்வத்தையும் உணர முடிந்தது. அடுத்த ஆண்டு அவர்களுக்காகத் தனியாக ஒரு நடனத்துக்கு இசைப்போம் என்று கூறிவந்திருக்கிறோம்.
மதுரைவீரன் தெருக்கூத்து அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. நடிகர்களின் வேடமும், துள்ளலும், சுழற்சியும், வசனங்களும், பாடல்களும் காண்பவரை இழுத்தன. சிலருக்குப் புதுமை. சிலருக்கு அந்தக் கால நினைவுகள். குழந்தையாக இருந்த மதுரைவீரன் பெரியவனாகி மேடையிலே தோன்றவேண்டும். அப்போது மேடையின் பின்புறத்தே இருந்து தோன்றாமல், பார்வையாளர்களின் கடைசி வரிசையிருக்கும் வாசல் வழியாக வருவதாக ஏற்பாடு. அங்குதான் நம் பறையும் காத்திருக்கிறது. 'இதோ வருகிறார் மதுரைவீரன்' என்று மேடையிலே வசனம் வந்ததும், அதிர ஆரம்பித்தது பறை. மேடையைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் மொத்தமும் பின்னே திரும்பியது. மதுரைவீரன் வேடத்தோடு நின்று ஆட, முன்னே பறையும், தவிலும் ஒலிக்க, கூட்டம் ஆட அது ஒரு பெரும் ஊர்வலத்தைக் கண் முன் நிறுத்தியது. பார்வையாளர்களில் பலரும் ஆடுவதற்கு ஓடி வந்தனர். அவர்களைப் பிடித்துக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கிடையில் மேடையிலே ஒரு அம்மாவுக்குச் சாமி வந்துவிட்டது (அல்லது அப்படி ஆடினார்!). ஒருவாறாகக் கூட்டத்தைக் கடந்து மதுரைவீரனை மேடையில் ஏற்றிவிட்டோம் நாங்கள் இறங்கிக் கொள்ளக் கூத்து தொடர்ந்தது.
அதன் பிறகு இன்னிசை நிகழ்ச்சிக்கு நடுவே அடுத்த ஆண்டு பேரவை விழாவுக்கு நம் பனைநிலம் தமிழ்ச் சங்கத்துக்கு அனைவரையும் வரவேற்பதற்காக நம் சங்கத்தின் சார்பாகச் சென்றிருந்தவர்கள் மேடையேறினோம். பறையோடுதான். அடுத்த ஆண்டு பேரவை விழாவின் ஒருங்கிணைப்பாளரும், பேரவையின் புதிய துணைத்தலைவருமான முனைவர் தண்டபானி அவர்கள் சுருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் நமது அழைப்பிதழை விடுத்தார். வணக்கம் கூறி மேடையிலிருந்து அகல முயன்றோம். கூட்டம் விடவில்லை, மேளம், பறை என்று குரலெழுப்ப மறுபடியும் ஒரு முழக்குப் போட்டுவிட்டுத்தான் இறங்கினோம்!
பல சங்கங்களிலிருந்து வந்திருந்த நண்பர்களும், புதிதாய்க் கிடைத்த நண்பர்களும் நம்மூர்த் திருவிழாவுக்கு வரவும், நம்முடன் சேர்ந்து இவ்விழாவை ஒழுங்கு செய்யவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஒரு சிறந்த விழாவைக் கண்டு களித்த மனநிறைவோடும், நம் பனைநிலத்தின் முத்திரையை அவ்விழாவில் பதித்த பெருமிதத்தோடும், சீரும் சிறப்புமாக நம்மூர் விழா நடந்தேறும் என்ற உறுதியோடும் கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்துக்கும், பேரவைக்கும் நன்றி சொல்லிக் கிளம்பினோம்!
முக்கியமான பின் குறிப்பு: வரும் ஆகஸ்டு 8ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை பனைநிலத்தின் கோடை விழா நிகழ இருக்கிறது. அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். இவ்விழாவின்போது வரும் பேரவை விழாவினைச் சிறப்பாக நடத்துதற்குரிய திட்டக் கூட்டமும் நிகழும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். ========================================================================எழுதியவர்: பனையேறி (கண்ணன் வராததால் படங்கள் இல்லை :))
Labels:
charleston,
FeTNA 2010,
panainilam,
PNTS,
கோடை விழா,
சார்லஸ்டன்,
பறை,
பனைநிலம்,
பேரவை
Sunday, January 31, 2010
பனைநிலம் தமிழ்ச்சங்கப் பொங்கல் விழா 2010
வீட்டு முற்றத்தை சாணம் கொண்டு மெழுகி அலங்கரிக்க!
காளைகளின் மணிச்சத்தம் கிணுகிணுக்க !
ஜல்லிக்கட்டு ஊரையே கிடுகிடுக்க!
செவ்விதழில் செங்கரும்பு தித்திக்க !
பொலிவுடனே பொங்கியதே பொங்கல்
நம் மனப்பானை மகிழ்வுடனே பொங்கிடவே
சார்லஸ்டன் மக்கள் அனைவரும் ஆனந்தமாக கொண்டாடினோமே!
-பொறுங்க பொறுங்க!
இப்பிடியெல்லாம் சார்லச்டன்ல பொங்கல் விழா நடந்ததுன்னு சொல்லணும்னு ஒரு ஆசைதான். ஆனா அமெரிக்காவில இப்பிடியெல்லாம் காளைகளின் மணிச்சத்தம் கிணுகிணுக்க, ஜல்லிக்கட்டு ஊரையே கிடுகிடுக்க, பொங்கல்விழாவ நடத்துனா இந்தஊரு போலீஸ்காரங்க அவங்களோட வாகனங்களோட அலாரம் கிணுகிணுக்க, நம்ம இதயத்துடிப்பு படபடக்க, நாடி நரம்பெல்லாம் துடிதுடிக்க அப்பிடியே அள்ளிட்டு போயிருவாங்க! அதனால மகாசனங்களே இதெல்லாம் இல்லாமத்தான் நாம பொங்கல் விழாவை இங்க நடத்தியாகணும்.
சரி! அதுக்காக அப்பிடியே நாம விட்டுற முடியுமா...நம்ம ஆளுங்க எங்க போனாலும் நம்ம பண்பாட்டு அடையாளங்கள மறந்துற முடியுமா?கலாச்சாரத்தை கொஞ்சமாவது பிரதிபளிக்கணும் இல்லையா?...அதுவும் நம்ம சார்லஸ்டன் பனைநிலம் தமிழ்ச் சங்கம்னா சும்மாவா?
பொங்கல்விழா பரபரப்பு பலவாரங்களுக்கு முன்னாடியே ஆரம்பம் ஆயிடுச்சு! கலைநிகழ்ச்சிகள் அருமையாக வர திட்டம் போட்டாச்சு. அறுசுவை உணவுப் வகைகளாகட்டும், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளாகட்டும், பட்டிமன்றமாகட்டும், பாட்டுமன்றமாகட்டும், குழந்தைகளோட நிகழ்ச்சிகளாகட்டும், எல்லாம் அருமையா தயாராகிட்டு இருந்தது.
பொங்கல்விழா நடக்கிற சனிக்கிழமை வந்திடுச்சு.வருணபகவான் வழக்கம்போல கோவிச்சுட்டார். நம்மளுக்கு வார விடுமுறைன்னாலே அவருக்கு கொஞ்சம் பொறுக்காது - அப்பிடியே வானத்திலிருந்து இறங்கிவந்து குசலம் விசாரிச்சுட்டு போவார். இந்த மாதிரி விழான்னா கேட்கவா வேணும் - அவரும் ஒரு ஆட்டம் போட்டுட்டார். அதப்பாத்து நம்ம பயப்பட்டுருவோமா என்ன?...இடியா, புயலா, மழையா,பனியா நம்மை ஒன்றும் செய்யாதே.ன்னு! ஜோரா வேலைகளைப் பாக்க ஆரம்பிச்சுட்டோம்.
இந்த தடவையும் டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே வித்யா - கணேஷ் உதவியுடன் தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம். மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான வசதி, ஒலி, ஒளி அமைப்பு, மற்றும் உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம். அஞ்சு மணிக்கே ஆளுக அசத்தலா வேலைகள பாக்க ஆரம்பிச்சாச்சு. கொஞ்ச நேரத்தில பொங்கல் திருவிழாக்கூட்டம்.....எங்க பாத்தாலும் கலகலப்பா இருந்துச்சு.
இந்ததடவை அறுசுவை உணவு விருந்து விழா ஆரம்பமே அளிக்கப்பட்டது. மக்கள் தூதுகலத்தோட பதார்த்தங்களை ரசிச்சு ருசிச்சுட்டாங்க. வழக்கம் போல கணவன்மார்கள் பரிதாமாக பந்திக்காக காத்திருக்க, மனைவிமார்கள் பந்திக்கு முந்தி ஒரு கட்டு கட்டுனாங்க! ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க! அதுசரி ஆம்பிளைங்க? மிச்சம் சொச்சம் எதுவும் கிடைக்காம போயிருமா என்ன. நம்பிக்கை தான் வாழ்க்கை இல்லையா? அதுக்கு பிறகு வந்த சில கணவன்மார்களுக்கு மிச்சம் மீதி கூட கிடைக்கலேன்னு 'வருத்தப்படாத வாலிபர்கள்' பலபேரு பரவலா பேசிக்கிட்டாங்க.

அதைவிட அருமையான விருந்து கலைநிகழ்ச்சிகளோட வடிவில் விழா மேடையில காத்துகிட்டு இருந்தது. ஆனந்தி விழாவோட முன்னுரையை அளித்தார். விழாவை செந்தில் மற்றும் வானதி அருமையா தொகுத்து வழங்குனாங்க.



தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, குத்துவிளக்கு ஏற்றி விழாவ தொடங்கினாங்க. கடவுள் வாழ்த்தாக திருக்குறளை இனிமையா அஸ்ரிதா, அமிர்தா, மாசிலன், மற்றும் கோகுல் பாடினது செவிக்கு இசையா ஒலித்தது. திருக்குறள் உலகத்துக்கே பொதுமறை. நம்ம குழந்தைகளுக்கு அது ஒரு ஊக்கமறையா இருக்குதுன்னு அதிலிருந்தே தெரிஞ்சது. அதற்கடுத்தபடியாக அவர்களே நாட்டுபுறப் பாடலுக்கு நடனம் ஆடி நாட்டுப்புறத்தையே நம்ம கண்ணுக்கு முன்னாடி வந்து நிறுத்துனாங்க.

கின்னஞ்சிறு சிட்டுக்கள் குட்டி குட்டி பாடல்களை மெட்டு மெட்டில்லாமல் பாடினாலும் எட்ட எட்ட இருக்கும் சொர்க்கம்கூட நம்ம பக்கத்துல வந்திரும் இல்லையா? அதைத்தான் நம்ம சிட்டுக்கள் பூரணி, ஜனனி, மோகன், இனியன் மற்றும் ஷிவானி அவங்கெல்லாம் வண்ணத்துப்பூச்சி பாடலை அழகா பாடினாங்க.

அதற்கடுத்து அமிர்தா மற்றும் அதிதி மாறுவேட நிகழ்சியில, புலியாவும், கிராமியப்பெண்ணாகவும் வந்து அசத்துனாங்க.


குழல் இனிது யாழ் இனிது, அதனினும் இனிது நம் பிரணாப் மற்றும் கோகுலுடைய வயலின் இசை இனிது. அவங்க வயலினுடைய இசை கேட்டு நம்ம மக்கள் மயங்கிட்டாங்க.


அடுத்து சிறுமி நிவேதாவோட நடனம். அவங்களோட அருமையான ஆட்டத்தைப் பாத்துகிட்டு இருந்த நம்ம சின்னப்பசங்க சும்மா இருப்பங்களா; விழா அரங்கத்துல அவங்களும் ஒரு ஆட்டம் போட்டாங்க. இந்தக் குழந்தைகளோட நிகழ்ச்சிகளைப் பார்த்து நம்ம மனசும் குழந்தைகளாவே மாறிடுச்சு.

அதுசரி, ஆட்டம் பாத்தாச்சு பாட்டு? இப்போ பாருங்க...ஒண்ணா ரெண்டா - நாலு பாடல்கள். கார்த்திகா, செந்தில், யுவராஜ் மற்றும் பிரகாஷ் தனித்தனியா பாடல்களைப் பாடி பார்வையாளர்களை இசைவெள்ளத்தில மூழ்கடிச்சாங்க.

இசைவெள்ளத்தில மூழ்கி முத்தெடுக்க போன நம்மள அப்பிடியே மீட்டு வந்ததுதான் நாடகம். உழவர்களோட பிரச்சினைகளைப் பற்றிய இந்த நாடகத்தில் யுவராஜு, குமரன், பத்மநாபன், மற்றும் உதய் இணைந்து நடித்தது நம்முடைய கவனத்தை கவரும் வண்ணம் இருந்தது.

இந்த பொங்கல் நிகழ்ச்சிகளை சுவராசியப் படுத்துவதற்காகவே வினாடி விடை நிகழ்ச்சிகள் இடையே வழங்கப்பட்டது. வினாடி வினா பரிசு மழையில நனைவதற்காக குடைகளை வீசி எறிஞ்சுட்டு விடைகளை நிரப்பிகிட்டு இருந்தாங்க (எதுகை மோனையா இருக்குறதுக்காக, குடை, விடை அப்பிடின்னு இப்பிடின்னு இடையில வார்த்தைகள் வரும், அதெல்லாம் கண்டுக்காதீங்க மகா சனங்களே!). நிறைய வடைகளைச் சாப்பிட்டு மன்னிக்கவும் நிறைய விடைகளை சரியாகச் சொல்லி பரிசுகளை அள்ளிட்டு போனவங்க இளங்கோ மற்றும் பாட்ஷா.
நம்மூரு தொலைக்காட்சிகளில் அவ்வப்போது வந்து ஓரளவு சந்தோசமா இருக்கிற கணவன் மனைவிகளுக்கு இடையே குழப்பம் சச்சரவு உருவாக்குகிற நிகழ்ச்சி எது தெரியுமா?...கண்டுபிடுச்சுட்டீங்க....அதேதான் - ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சி. இதுவரை ஜோடிகளுக்கு குழப்பமே எதுவும் வரல்லயேன்னு, மூளையை கொஞ்சம் கசக்கி ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சிய தயாரிச்சிருந்தாங்க 'குழப்பப்படாத வாலிபர் சங்க' அன்பர்கள் . ஒவ்வொரு வீட்டுக்கும் வீடியோவோட படையெடுத்து கணவன் மனைவியை கேள்விக்கணைகளை தொடுத்து, பதிவு பண்ணி அதை சுவராசியமா குறுகிய காலத்துல ஸ்ரீநிவாசன், பிரியா, யுவராஜ், மற்றும் குமரன் குழுவினர் தயாரிச்சிருந்தாங்க.
அடுத்ததா வந்ததுதான் பட்டிமன்றம். பட்டிமன்றத்த பாட்டிமன்றமா மாத்திரக்கூடாதுன்னு கலகலப்பா இருக்கிற மாதிரி ஒரு தலைப்பு - "இல்வாழ்க்கையில் அதிகம் விட்டுக்கொடுப்பது ஆண்களா பெண்களா" ? தன் வாழ்க்கையே ஆன்மீகத்துக்காக விட்டுக்கொடுத்திருந்த சந்தோஷ்தான் நடுவர். ஆண்களே என்கிற அணியில செந்தில், ஹரி, மற்றும் யுவராஜு . பெண்களே அப்பிடின்ற அணியில உமா, வினு, மற்றும் சுபத்ரா. ஆரம்பம் முதலே அனல் பேச்சு. அதைகேட்டு பார்வையாளர்களோட மூச்சே நின்னு போச்சு.ன்னு சொல்ற அளவுக்கு இருந்தது இவர்களுடைய சொல்வீச்சு. இதப்பாத்தா சங்ககாலப் புலவர்கள் பலகூடி அருந்தமிழ்கவி ஆராய்ந்து, சொல்வித்தை விளையாடி பைந்தமிழ் வளர்த்த சான்றோர்கள் சபைபோல இருந்தது (சரி, சரி....ரெம்ப அதிகமா போயிடுச்சுன்னு நினைக்கிறீங்களா?! மிகைப்படுத்தாம சொல்லிர்றேன். உண்மையிலேயே ரசிக்கத்தக்க வண்ணம் இருந்தது!). முடிவில் நாட்டாமை சந்தோஷ், இல்லற வாழ்வில் ஆண் பெண் இருவருமே விட்டுக்கொடுப்பதால் இல்லற வாழ்வு வளம் பெரும் என தீர்ப்பு வழங்கினார்.

பிறகு குழந்தைகளுக்கான பரிசுச் சான்றிதல் வழங்குதல் - பரிசுகளை சண்முகராஜன் அய்யா வழங்கினார். நிறைவாக சேர்ந்து சிறுவர், சிறுமியர் அனைவரும் ஒரு கலக்கல் ஆட்டம் போட்டாங்க பாருங்க...அதைப்பார்த்த நம்ம மனசும் ஒரு ஆட்டமா, பாட்டமா பாடி மகிழ்ந்தது.


ஆக மொத்தத்தில பொங்கல் நிகழ்ச்சிகள் அத்தனையும் பார்த்து, ரசிச்சு, ருசிச்சு, கேட்டு, அறுசுவை உணவுகளை உண்டு, நம்ம மனசு செங்கரும்பக் காட்டிலும் சிறப்பா தித்திச்சது. பொங்கலைக்காட்டிலும் பலமடங்கு பொங்கி வழிஞ்சது. நம்ம உழவர்களோட பெருமிதமும், பூரிப்பும் நம்மோட இதயத்துல வந்து கலந்தது.
மக்களே, இன்னும் அருமையான ஒளிப்படங்களை நம்ம கண்ணன் எடுத்து கொடுத்திருக்காரு. அப்பிடியே நம்ம பனைநிலம் வலைத்தளத்திற்கு போயி எல்லாத்தையும் ஒரு பார்வை பாத்திருங்க!...(பனைநிலம் வலைத்தளம் செல்ல)
உங்க எல்லாருக்கும் மறுபடியும் உளங்கனிந்த இனிய பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் .
(மீண்டும் அடுத்த வலையேற்றத்தில் சந்திப்போம்)
என்றும் அன்புடன்
செந்தில்
(படங்கள்: கண்ணன்)
Sunday, August 2, 2009
பனைநிலத்தில் கோடை விழா!
கோடைக்காலம் என்றாலே மனதெல்லாம் பள்ளி நாட்களில் நாம் கழித்த கோடை விடுமுறைகளே நிறைந்திருக்கின்றன. தெருவிலே கூவி விற்கும் முந்திரிப் பழம், நாவற்பழம், இலந்தைப் பழம், பழைய இரும்பு தகரத்துக்குக் கிடைக்கும் பேரீச்சம்பழம், யார் வீட்டு மரத்திலேயோ கல்லெறிந்து விழுத்தும் மாங்காய், சாலையோரத்துப் புளியமரத்தின் செங்காய்...ம் நாவில் எச்சில் ஊறுகிறது! தெருப் பிள்ளைகள் போதாதென்று வேற்றூர்களிலிருந்து வந்து சேரும் விருந்தாளிப் பிள்ளைகளும் சேர்ந்து விளையாடித் திரியும் இனிய பொழுதுகள் அவை. வெய்யில் சுட்டெரிக்காத பருவம். தாகமெடுக்காத பருவம். ஓடித்திரிந்தால் களைத்துப் போகாத பருவம். கோயில் திருவிழாக்கள் வருவதும் இனிய கோடையில்தான். . குசலம் விசாரிக்கும் உறவுகள், யாரோ யாரையோ உரத்து அழைக்கும் ராகம், அழும் குழந்தைகள், மனதை அதிர்வித்து எழுப்பும் காவடிகளோடு போகும் மேளங்கள் எனப் பலவாகத் தெருக்களின் மூச்சில் திருவிழாவின் இசை ஒலிக்கும். மயக்கம் தரும் அந்தக் காற்றின் வாசம். அது மரிக்கொழுந்து சேர்த்துக் கட்டிய கதம்பப் பூக்களா, மாவிளக்கிலே கலந்திருக்கும் ஏலக்காயா, காற்றின் துகள்களில் அந்த வாசம் கோடையில் மட்டும்தான் வருகிறது. ஒவ்வொரு கோடையிலும் பிள்ளைகள் பள்ளிமுடித்துத் திரும்பும்போது பழைய கோடை விடுமுறைகளை எடுத்து மீண்டும் தடவிப் பார்த்துவிட்டுப் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொள்கிறது மனது. எல்லாம் ஒன்றாக இருக்க முடியாதல்லவா, அதைப் போலத்தான் அமெரிக்கக் கோடையும். இது சற்றே வேறுபட்டது. ஆனாலும் மனதுக்கு இதந்தருவது. அமெரிக்காவில் கோடையை அனுபவிக்கவேண்டுமென்றால், நீங்கள் வரவேண்டிய இடம் பனைநிலந்தான். அழகான சுத்தமான கடற்கரைகள், பசுஞ்சோலைகள், நீர்நிலைகள், எங்கெங்கிருந்தோ வந்துசேர்ந்து பறந்து திரியும் புள்ளினங்கள், சற்றே வலுப்பட்டிருக்கும் கழிமுகத்துவாரத்துச் சேற்று நாணல்வெளிகளின் வாசனை. பழங்களும், காய்கறிகளும் சாலையோரத்துக் கடைகளிலும், நகரத்து உழவர் சந்தைகளிலும் பொலியும். குழந்தைகள் எப்போதும்போல, எல்லாவிடங்களையும்போல விளையாடுகிறார்கள். உற்சாகம் பொங்க நண்பர்களோடு ஓடித் திரிகிறார்கள். உறவினர்களோடு ஒன்றுகிறார்கள். தங்களது புதிய பொம்மைகளைக் காட்டி மகிழ்கிறார்கள். கோடையென்றால் திருவிழா இருக்க வேண்டுமல்லவா? அதற்குத்தான் எங்கள் கோடைவிழா!
ஆகஸ்டு 9 ஆக இருந்தது ஜூலை 26க்கு வந்தது. சிலர் வேலைமாற்றத்தால் ஊரைவிட்டுக் கிளம்பியிருந்தார்கள். சிலர் விடுமுறைக்குத் தமிழகத்துக்குப் போய்விட்டிருந்தார்கள். சிலரால் வரமுடியாத சூழல். இருந்தாலும் ஒரு 75 பேர் வந்திருக்கக் கூடும். இதுவே நல்ல கூட்டந்தான். அன்றைய எல்லா நிகழ்வுகளையும் சொல்லிக் கொண்டிருக்கலாம். சென்றது முதல், ஒலிபெருக்கியைக் கட்டியது, அடுப்பு மூட்டிச் சோளம் சுட்டது என்று ஆரம்பித்து ஒவ்வொன்றாகச் சொல்லப் போனால் அது அடுத்த கோடை வரை நீளும் கதையாயிருக்கும். எனவே சுருங்க! கைப்பந்து ஒருபுறம் நடந்தது. சிறுவர்களுக்கோ பலூன்களில் தண்ணீரை நிரப்பி ஆளுக்காள் மாற்றி மாற்றி நனைத்துக் கொண்டிருந்தார்கள். அஷ்ரிதா என்றொரு குழந்தை பொறுப்பாக வந்தவர்களை வரவேற்று (அதாவது வழிமறித்து!) கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தது. சரி ஓடி விளையாடம்மா என்று பெரியவர்கள் கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது. உண்டிக்குக் குறைவில்லை. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது கூட்டம். அயலூரிலிருந்து சொந்தங்கள் வந்திருந்தன. அகஸ்டா நண்பர்கள் இவ்வாண்டும் வந்திருந்தார்கள், ஊர்த்திருவிழாவுக்கு வருவதைப் போல. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கு நிகராக நமது கந்தன்தான் விளையாட்டுக்களை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். (படங்களை முழுமையாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்!)

சிறுவர்களுக்கான ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி என்று கலகலத்துக் கொண்டிருந்தது கூட்டம். மின்னி மின்னி எல்லா வண்ணங்களையும் விழுங்கிக் கொண்டிருந்தது கண்ணனின் புகைப்படப் பெட்டி.

அன்றைய சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள், சிலம்பம் புகழ் ஆசான் ஜோதி செந்தில் கண்ணன் அவர்களும், சிலம்பொலி செல்லப்பன் அவர்களும். கரயுத்தத்தில் (arm wrestling) ஈடுபட்டிருந்த மகளிரை சிலம்பொலியாரின் பேச்சைக் கேட்பதற்காகக் கிளப்ப வேண்டியிருந்தது.

அவரது உரை அன்றைக்கு தமிழ் இலக்கிய வரலாற்றினைக் குறித்தது. பனைநிலத்து மக்கள் வழக்கம்போலவே தமது அரசியல் மற்றும் இலக்கியக் கேள்விக் கணைகளைச் சிலம்பொலியார் மீது தொடுத்துத் தமக்கிருந்த ஐயப்பாடுகளைக் களையும் முயற்சிகளில் இறங்கினார்கள். சிலம்பொலியாரும் தமக்கே உரிய பாங்கில் அனைவருக்கும் பதிலளித்தார்.

உரையினை முடித்தபிறகு அவரே அன்றைக்குப் போட்டிகளில் கலந்துகொண்ட பிள்ளைகளுக்கும், தமிழ் வகுப்பில் இவ்வாண்டு படித்த பிள்ளைகளுக்கும் பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு வந்தது ஆசான் ஜோதியின் சிலம்பம்.

கடந்த ஒரு வாரமாக எங்களோடு இருந்து எங்களுக்குச் சிலம்பப் பயிற்சியினை அளித்து வந்தார்கள். காண்பதற்கரிய கலைஞர். இன்றைய சூழலில் சிலம்பத்தினைக் காத்து அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் ஒரு ஒப்பற்ற வீரர். அவரது கரம் சுழற்றும் சிலம்பத்தினைக் காண்பது அத்தனை அழகாக இருந்தது.

எமக்காக அன்று சுருளையும் சுழற்றிக் காட்டினார். அவரது நிகழ்ச்சிக்கு நடுவே இன்னொரு காளையர் கூட்டம் வந்து சிலம்ப வித்தையைக் காட்டியது.

நான்கு நாட்கள் பயிற்சியின் பின்னர் நம் சங்கத்து மக்கள் இவ்வளவு சுற்றியதே ஆச்சரியந்தான். ஆசானின் பயிற்சி மேலும் சில தினங்களுக்கு ஆஷ்லி ஆற்றின் கரையிலும், கடற்கரைகளிலும் நடந்தது. இந்தச் சிலம்ப வகுப்பினை, அதில் கலந்துகொண்ட யாராலும் வாழ்நாளில் மறக்கவியலாது என்பதுமட்டும் உறுதி.
கோடைவிழாவின் இன்னொரு முக்கியமான அம்சம், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல். எல்லா ஊர்களிலும் தேர்தல் என்றாலே போட்டியிருக்கும் என்று கேள்வி. ஆனால் எங்கள் ஊரில் எனக்கு வேண்டாம், நீங்கள் இருங்கள் என்ற பெருந்தன்மைதான் ஒவ்வொரு முறையும். எப்படியோ இந்த முறையும் ஒரு குழுவைக் கண்டுபிடித்தாயிற்று. அதன் சிறப்பு என்னவென்கிறீர்களா? இதுவரையில் அமெரிக்கத் தமிழர்களின் வரலாற்றில் நிகழ்ந்திராத அதிசயம்! இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அனைவரும் மகளிர்! போன குழு தமது இரண்டாண்டு சாதனைகளாக ஒரு பக்கப் பட்டியலைத்தான் வாசித்தார்கள், எங்களது பட்டியல் பல பக்கங்களுக்கு நீளும் என்ற சூளுரையோடு களமிறங்கியிருக்கிறது இப்புதிய அணி. அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!

பனைநிலத் தமிழர்களுக்கேயுரிய உயரிய பண்பு என்னவெனில், நிர்வாகக் குழுவில் யார் இருக்கிறார்கள் என்பது பெரிதில்லை, ஒரு திட்டத்தில் தாம் என்ன செய்கிறோம் என்பதில் முனைப்பாக இருப்பதுதான். இந்தத் தன்முனைப்பே எங்களது ஒற்றுமைக்கும், சங்கத்தின் அனைத்து வெற்றிகளுக்கும் காரணம்.
இவ்வாறாக எதிர்கால வெற்றிகளுக்குக் கட்டியம் கூறும் இன்னொரு நிகழ்வாக அமைந்தது எங்கள் கோடை விழா. வந்திருந்து சிறப்பித்த, வரவியலாது வாழ்த்திக் கொண்டிருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நமது அன்பும் நட்பும் என்றென்றும்!
எழுதியவர்: பனையேறி
படங்கள்: வேறு யார்? கண்ணனே!
ஆகஸ்டு 9 ஆக இருந்தது ஜூலை 26க்கு வந்தது. சிலர் வேலைமாற்றத்தால் ஊரைவிட்டுக் கிளம்பியிருந்தார்கள். சிலர் விடுமுறைக்குத் தமிழகத்துக்குப் போய்விட்டிருந்தார்கள். சிலரால் வரமுடியாத சூழல். இருந்தாலும் ஒரு 75 பேர் வந்திருக்கக் கூடும். இதுவே நல்ல கூட்டந்தான். அன்றைய எல்லா நிகழ்வுகளையும் சொல்லிக் கொண்டிருக்கலாம். சென்றது முதல், ஒலிபெருக்கியைக் கட்டியது, அடுப்பு மூட்டிச் சோளம் சுட்டது என்று ஆரம்பித்து ஒவ்வொன்றாகச் சொல்லப் போனால் அது அடுத்த கோடை வரை நீளும் கதையாயிருக்கும். எனவே சுருங்க! கைப்பந்து ஒருபுறம் நடந்தது. சிறுவர்களுக்கோ பலூன்களில் தண்ணீரை நிரப்பி ஆளுக்காள் மாற்றி மாற்றி நனைத்துக் கொண்டிருந்தார்கள். அஷ்ரிதா என்றொரு குழந்தை பொறுப்பாக வந்தவர்களை வரவேற்று (அதாவது வழிமறித்து!) கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தது. சரி ஓடி விளையாடம்மா என்று பெரியவர்கள் கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது. உண்டிக்குக் குறைவில்லை. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது கூட்டம். அயலூரிலிருந்து சொந்தங்கள் வந்திருந்தன. அகஸ்டா நண்பர்கள் இவ்வாண்டும் வந்திருந்தார்கள், ஊர்த்திருவிழாவுக்கு வருவதைப் போல. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கு நிகராக நமது கந்தன்தான் விளையாட்டுக்களை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். (படங்களை முழுமையாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்!)

சிறுவர்களுக்கான ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி என்று கலகலத்துக் கொண்டிருந்தது கூட்டம். மின்னி மின்னி எல்லா வண்ணங்களையும் விழுங்கிக் கொண்டிருந்தது கண்ணனின் புகைப்படப் பெட்டி.

அன்றைய சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள், சிலம்பம் புகழ் ஆசான் ஜோதி செந்தில் கண்ணன் அவர்களும், சிலம்பொலி செல்லப்பன் அவர்களும். கரயுத்தத்தில் (arm wrestling) ஈடுபட்டிருந்த மகளிரை சிலம்பொலியாரின் பேச்சைக் கேட்பதற்காகக் கிளப்ப வேண்டியிருந்தது.

அவரது உரை அன்றைக்கு தமிழ் இலக்கிய வரலாற்றினைக் குறித்தது. பனைநிலத்து மக்கள் வழக்கம்போலவே தமது அரசியல் மற்றும் இலக்கியக் கேள்விக் கணைகளைச் சிலம்பொலியார் மீது தொடுத்துத் தமக்கிருந்த ஐயப்பாடுகளைக் களையும் முயற்சிகளில் இறங்கினார்கள். சிலம்பொலியாரும் தமக்கே உரிய பாங்கில் அனைவருக்கும் பதிலளித்தார்.

உரையினை முடித்தபிறகு அவரே அன்றைக்குப் போட்டிகளில் கலந்துகொண்ட பிள்ளைகளுக்கும், தமிழ் வகுப்பில் இவ்வாண்டு படித்த பிள்ளைகளுக்கும் பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு வந்தது ஆசான் ஜோதியின் சிலம்பம்.

கடந்த ஒரு வாரமாக எங்களோடு இருந்து எங்களுக்குச் சிலம்பப் பயிற்சியினை அளித்து வந்தார்கள். காண்பதற்கரிய கலைஞர். இன்றைய சூழலில் சிலம்பத்தினைக் காத்து அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் ஒரு ஒப்பற்ற வீரர். அவரது கரம் சுழற்றும் சிலம்பத்தினைக் காண்பது அத்தனை அழகாக இருந்தது.

எமக்காக அன்று சுருளையும் சுழற்றிக் காட்டினார். அவரது நிகழ்ச்சிக்கு நடுவே இன்னொரு காளையர் கூட்டம் வந்து சிலம்ப வித்தையைக் காட்டியது.

நான்கு நாட்கள் பயிற்சியின் பின்னர் நம் சங்கத்து மக்கள் இவ்வளவு சுற்றியதே ஆச்சரியந்தான். ஆசானின் பயிற்சி மேலும் சில தினங்களுக்கு ஆஷ்லி ஆற்றின் கரையிலும், கடற்கரைகளிலும் நடந்தது. இந்தச் சிலம்ப வகுப்பினை, அதில் கலந்துகொண்ட யாராலும் வாழ்நாளில் மறக்கவியலாது என்பதுமட்டும் உறுதி.
கோடைவிழாவின் இன்னொரு முக்கியமான அம்சம், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல். எல்லா ஊர்களிலும் தேர்தல் என்றாலே போட்டியிருக்கும் என்று கேள்வி. ஆனால் எங்கள் ஊரில் எனக்கு வேண்டாம், நீங்கள் இருங்கள் என்ற பெருந்தன்மைதான் ஒவ்வொரு முறையும். எப்படியோ இந்த முறையும் ஒரு குழுவைக் கண்டுபிடித்தாயிற்று. அதன் சிறப்பு என்னவென்கிறீர்களா? இதுவரையில் அமெரிக்கத் தமிழர்களின் வரலாற்றில் நிகழ்ந்திராத அதிசயம்! இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அனைவரும் மகளிர்! போன குழு தமது இரண்டாண்டு சாதனைகளாக ஒரு பக்கப் பட்டியலைத்தான் வாசித்தார்கள், எங்களது பட்டியல் பல பக்கங்களுக்கு நீளும் என்ற சூளுரையோடு களமிறங்கியிருக்கிறது இப்புதிய அணி. அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!

பனைநிலத் தமிழர்களுக்கேயுரிய உயரிய பண்பு என்னவெனில், நிர்வாகக் குழுவில் யார் இருக்கிறார்கள் என்பது பெரிதில்லை, ஒரு திட்டத்தில் தாம் என்ன செய்கிறோம் என்பதில் முனைப்பாக இருப்பதுதான். இந்தத் தன்முனைப்பே எங்களது ஒற்றுமைக்கும், சங்கத்தின் அனைத்து வெற்றிகளுக்கும் காரணம்.
இவ்வாறாக எதிர்கால வெற்றிகளுக்குக் கட்டியம் கூறும் இன்னொரு நிகழ்வாக அமைந்தது எங்கள் கோடை விழா. வந்திருந்து சிறப்பித்த, வரவியலாது வாழ்த்திக் கொண்டிருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நமது அன்பும் நட்பும் என்றென்றும்!
எழுதியவர்: பனையேறி
படங்கள்: வேறு யார்? கண்ணனே!
Labels:
charleston,
kodai vizha 2009,
panainilam,
silambam,
sports day,
summer,
tamil class,
கோடை விழா,
சிலம்பம்,
பனைநிலம்
Saturday, July 18, 2009
FeTNA 2009ல் நாங்கள் கட்டிய கூத்து
பேரவை விழான்னாலே எங்க ஊருலேருந்து ஒரு பதினஞ்சு, இருபது பேரு போறது வழக்கமுங்க. போன வருசம், அதுக்கு முந்தின வருசமெல்லாம் ஏதோ இந்தச் சின்னப் பிள்ளைகளைப் பாட வச்சு, ஆட வச்சு தமிழை வளத்தோமுங்க. சின்ன சங்கமுன்னாலும் எதையாச்சும் வித்தியாசமா செஞ்சுகிட்டே இருக்க கொணம் எங்க சங்கத்து ஆளுகளுக்கு இருக்குங்க. அதான் இந்த வருசம் எதையாச்சும் வித்தியாசமாச் செய்யணுமுன்னு நெனச்சமுங்க. அந்த நேரத்துலத்துலதான் ஒலகத் தமிழினத்துக்கு இடி விழுந்த மாதிரியான நேரம். ஈழத்துத் தாக்கத்தையே நடிக்கிறதுன்னு முடிவெடுத்தோம். ஒரு இருபது பேரு கூடுனோம். விழா மலர்ல 'தேவகி செல்வன், பரணி இடைக்காடர், பெரியண்ணன் சந்திரசேகரன்' எல்லாரும் தொகுத்திருந்த கேள்வி பதிலையே கதையோட கருவா வச்சிக்கிட்டோமுங்க. அதே வசனம் கூத்துல வருமுங்க. பாத்தீங்கன்னா தெரியும். வெளங்காத ஒருத்தரு கேள்வி கேப்பாரு, இன்னொருத்தரு பதில் குடுப்பாரு. பதில் சொல்லுறப்பவே அதப் பத்திப் பின்னாடி அந்தக் காட்சி விரியும். இதான் கூத்தோட வடிவமுங்க.
ரெண்டு வாரம் பயிற்சி எடுத்திருப்போம். அந்த ரெண்டு வாரமும் பாத்தீங்கன்னா, தினமும் கதையோட வசனம் மாறும். காட்சி மாறும். கடைசி நாள் வரைக்கும் மாறிக்கிட்டே இருந்துச்சுன்னா பாத்துக்கங்க. ஆனா சும்மா சொல்லக்கூடாது. நடிச்ச ஒவ்வொருத்தரும் தன் பங்குக்கு "யோசனை யோகராசா"வாக மாறி எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதுவும் நல்லதுக்குத்தான். எல்லாம் சேர்ந்துதான் கூத்தை நல்லா இருக்கும்படி வச்சிச்சு. தம்பி இளவரசன் அற்புதமாப் பேசுனதை நீங்களே பாத்துக்கங்க. அப்புறம் மணி ஐயாவோட குரலும் நடிப்பும் அருமை. யாருமே 'நடிக்கலை'ங்கறதுதான் இன்னொரு சிறப்பு. கூத்து முடிஞ்சு வெளியில வரும்போது மேக்கப் ரூமுல இருந்து அடுத்த நிகழ்ச்சிக்காகத் தயார் செஞ்சுக்கிட்டிருந்தவங்க கட்டிப் புடிச்சு அழ ஆரம்பிச்சுட்டாங்க. எத்தனை பேரு கலங்கின கண்ணோட எங்களைப் பாத்து நன்றி சொன்னாங்கன்னு நெனப்பில்ல. பேரவை விழா நடந்த அந்த மூன்று நாட்களும், யாராவது ஒருத்தர் எங்கக் குழு ஆள் யார்கிட்டயாச்சும் கூத்தைப் பத்திப் பேசிக்கிட்டே இருந்தாங்க.
இலங்கை இனப்பிரச்சினையின் அத்தனை அம்சங்களையும் சொல்லிவிட இருபது நிமிடங்கள் போதாது. ஆனால் ஓரளவுக்கு ஒரு அறிமுகத்தை, அறியாதவங்களுக்கு ஒரு செய்தியைச் சொன்னோம்ங்கற திருப்தி எங்களுக்கு இருந்திச்சு. தமிழங்களோட துக்கத்துல தமிழங்களே பங்கெடுக்கலைன்னா எப்படிங்க. நம்ம மேல திணிக்கப்பட்டிருக்க அடக்குமுறையை நாமளே மறைக்கலாமா? அதான் அந்தத் தெருக்கூத்து. ஏற்கெனவே பனைநிலத்தோட ஒளிப்படத்தைப் பார்த்திருப்பீங்க. அப்படி இல்லன்னா, பாத்துட்டுப் போங்க. பாத்துட்டு நண்பர்களுக்கும் அனுப்புங்க. யாரோ சொன்னாங்க, ஜூனியர் விகடன் பத்திரிகையில இதப் பத்தி வந்திருக்குன்னு. போயிப் பார்த்தா, படம் போட்டு "மகிந்தவைக் கிண்டலடித்து நாடகம்" அப்படின்னு படத்துக்குள்ள ஒரு வரி. பகீர்னு இருந்துச்சு. என்னடா அந்தப் பத்திரிகைக் காரங்க, நாடகத்தைப் பார்த்தபிறகுதான் எழுதினாங்களா, இல்ல நியூயார்க் அப்பார்ட்மெண்டு கதவைப் பூட்டிக்கிட்டு கனவு எதுனா கண்டு எழுதினாங்களான்னு தெரியல. ஏங்க, கிண்டலடிக்கப்படுறதுக்கும் ஒரு தகுதி வேணாமா? படத்தைப் பாத்த பிறகு நீங்களே சொல்லுங்க, இது மகிந்தவைக் கிண்டலடிக்கிற நாடகமா இல்ல, மக்களோட போராட்டத்தைப் பத்தின நாடகமான்னு. எந்த ஊடக தர்மத்தைக் கேள்வி கேட்டோமோ, அந்த ஊடக தர்மம் கேலிக்கூத்தானது ஜூனியர் விகடன் கட்டுரையில தெரியுமுங்க.
பெருமைக்காகச் சொல்லலீங்க. இதுல நடிச்ச அம்புட்டு பேரும் முனைவருங்க. அதான் டாக்டருங்க. இவுங்க ரெண்டு வாரம் பாடுபட்டாலே இப்படி ஒரு அருமையான கூத்தைக் கட்ட முடியுதுங்க. நீங்களும் ஏனுங்க முயற்சி செய்யக் கூடாது? எவ்வளவோ சொத்தை, கடி நாடகமெல்லாம் பார்க்கிறோமுங்க. அதை எல்லாம் பாத்துட்டு வயித்துலயும், வாயிலயும் அடிச்சுக்குறோம். ஏன் மாறமாட்டேங்குறாங்கன்னு கேக்குறோம். ஆனா, மாற்றம் அப்படிங்கறது நம்மகிட்டேயிருந்துதானுங்க பொறக்கணும். நீங்களே நாடகம் போடுங்க. கூத்து கட்டுங்க. கைதட்ட ஆளுங்க இருப்பாங்க. உணர்வு இருக்கவங்க இன்னும் உயிரோடதான் இருக்காங்க. உங்களுக்குப் பிடிச்ச கதையை, நீங்க மக்களுக்குச் சொல்ல நினைச்ச கதையை நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. முயற்சி செய்யுங்க. வாழ்த்துக்கள்!
கூத்துக் கட்டின அன்புக் கலைஞர்கள்: இன்பன், மணி ஐயா, இளவரசன், யசோதை, சுபத்திரை, இளையோன், அரிநாதர், பத்து, உதயன், பகலவன், சிபிச்சக்கரவர்த்தி, மாசிலாமணி, பனையேறி, திருமதி பனையேறி, நெல்லி, யாழிசை, பிரியம் மற்றும் உதவிய, ஆலோசனைகளை வழங்கிய வளர் அக்கா, தண்டபானி ஐயா ஆகியோர். இப்படத்தை எடுத்தவர் அன்பிற்குரிய நண்பர் அண்ணாதுரை.
ஒளிப்படம்:
எழுதியவர்: பனையேறி
ரெண்டு வாரம் பயிற்சி எடுத்திருப்போம். அந்த ரெண்டு வாரமும் பாத்தீங்கன்னா, தினமும் கதையோட வசனம் மாறும். காட்சி மாறும். கடைசி நாள் வரைக்கும் மாறிக்கிட்டே இருந்துச்சுன்னா பாத்துக்கங்க. ஆனா சும்மா சொல்லக்கூடாது. நடிச்ச ஒவ்வொருத்தரும் தன் பங்குக்கு "யோசனை யோகராசா"வாக மாறி எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதுவும் நல்லதுக்குத்தான். எல்லாம் சேர்ந்துதான் கூத்தை நல்லா இருக்கும்படி வச்சிச்சு. தம்பி இளவரசன் அற்புதமாப் பேசுனதை நீங்களே பாத்துக்கங்க. அப்புறம் மணி ஐயாவோட குரலும் நடிப்பும் அருமை. யாருமே 'நடிக்கலை'ங்கறதுதான் இன்னொரு சிறப்பு. கூத்து முடிஞ்சு வெளியில வரும்போது மேக்கப் ரூமுல இருந்து அடுத்த நிகழ்ச்சிக்காகத் தயார் செஞ்சுக்கிட்டிருந்தவங்க கட்டிப் புடிச்சு அழ ஆரம்பிச்சுட்டாங்க. எத்தனை பேரு கலங்கின கண்ணோட எங்களைப் பாத்து நன்றி சொன்னாங்கன்னு நெனப்பில்ல. பேரவை விழா நடந்த அந்த மூன்று நாட்களும், யாராவது ஒருத்தர் எங்கக் குழு ஆள் யார்கிட்டயாச்சும் கூத்தைப் பத்திப் பேசிக்கிட்டே இருந்தாங்க.
இலங்கை இனப்பிரச்சினையின் அத்தனை அம்சங்களையும் சொல்லிவிட இருபது நிமிடங்கள் போதாது. ஆனால் ஓரளவுக்கு ஒரு அறிமுகத்தை, அறியாதவங்களுக்கு ஒரு செய்தியைச் சொன்னோம்ங்கற திருப்தி எங்களுக்கு இருந்திச்சு. தமிழங்களோட துக்கத்துல தமிழங்களே பங்கெடுக்கலைன்னா எப்படிங்க. நம்ம மேல திணிக்கப்பட்டிருக்க அடக்குமுறையை நாமளே மறைக்கலாமா? அதான் அந்தத் தெருக்கூத்து. ஏற்கெனவே பனைநிலத்தோட ஒளிப்படத்தைப் பார்த்திருப்பீங்க. அப்படி இல்லன்னா, பாத்துட்டுப் போங்க. பாத்துட்டு நண்பர்களுக்கும் அனுப்புங்க. யாரோ சொன்னாங்க, ஜூனியர் விகடன் பத்திரிகையில இதப் பத்தி வந்திருக்குன்னு. போயிப் பார்த்தா, படம் போட்டு "மகிந்தவைக் கிண்டலடித்து நாடகம்" அப்படின்னு படத்துக்குள்ள ஒரு வரி. பகீர்னு இருந்துச்சு. என்னடா அந்தப் பத்திரிகைக் காரங்க, நாடகத்தைப் பார்த்தபிறகுதான் எழுதினாங்களா, இல்ல நியூயார்க் அப்பார்ட்மெண்டு கதவைப் பூட்டிக்கிட்டு கனவு எதுனா கண்டு எழுதினாங்களான்னு தெரியல. ஏங்க, கிண்டலடிக்கப்படுறதுக்கும் ஒரு தகுதி வேணாமா? படத்தைப் பாத்த பிறகு நீங்களே சொல்லுங்க, இது மகிந்தவைக் கிண்டலடிக்கிற நாடகமா இல்ல, மக்களோட போராட்டத்தைப் பத்தின நாடகமான்னு. எந்த ஊடக தர்மத்தைக் கேள்வி கேட்டோமோ, அந்த ஊடக தர்மம் கேலிக்கூத்தானது ஜூனியர் விகடன் கட்டுரையில தெரியுமுங்க.
பெருமைக்காகச் சொல்லலீங்க. இதுல நடிச்ச அம்புட்டு பேரும் முனைவருங்க. அதான் டாக்டருங்க. இவுங்க ரெண்டு வாரம் பாடுபட்டாலே இப்படி ஒரு அருமையான கூத்தைக் கட்ட முடியுதுங்க. நீங்களும் ஏனுங்க முயற்சி செய்யக் கூடாது? எவ்வளவோ சொத்தை, கடி நாடகமெல்லாம் பார்க்கிறோமுங்க. அதை எல்லாம் பாத்துட்டு வயித்துலயும், வாயிலயும் அடிச்சுக்குறோம். ஏன் மாறமாட்டேங்குறாங்கன்னு கேக்குறோம். ஆனா, மாற்றம் அப்படிங்கறது நம்மகிட்டேயிருந்துதானுங்க பொறக்கணும். நீங்களே நாடகம் போடுங்க. கூத்து கட்டுங்க. கைதட்ட ஆளுங்க இருப்பாங்க. உணர்வு இருக்கவங்க இன்னும் உயிரோடதான் இருக்காங்க. உங்களுக்குப் பிடிச்ச கதையை, நீங்க மக்களுக்குச் சொல்ல நினைச்ச கதையை நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. முயற்சி செய்யுங்க. வாழ்த்துக்கள்!
கூத்துக் கட்டின அன்புக் கலைஞர்கள்: இன்பன், மணி ஐயா, இளவரசன், யசோதை, சுபத்திரை, இளையோன், அரிநாதர், பத்து, உதயன், பகலவன், சிபிச்சக்கரவர்த்தி, மாசிலாமணி, பனையேறி, திருமதி பனையேறி, நெல்லி, யாழிசை, பிரியம் மற்றும் உதவிய, ஆலோசனைகளை வழங்கிய வளர் அக்கா, தண்டபானி ஐயா ஆகியோர். இப்படத்தை எடுத்தவர் அன்பிற்குரிய நண்பர் அண்ணாதுரை.
ஒளிப்படம்:
எழுதியவர்: பனையேறி
Labels:
eelam,
FeTNA 2009,
panainilam,
tamil media,
Tamil street play,
Tamils,
therukkoothu,
ஈழம்,
தெருக்கூத்து,
பெட்னா,
பேரவை
Subscribe to:
Posts (Atom)

