Saturday, July 21, 2007

சார்லஸ் டவுனி லேன்டிங் - ஒரு வராலாற்று சிறப்பு மிக்க இடம்.

ஆங்கிலேயர்கள் அமெரிக்காவிற்கு எப்போது வந்தார்கள், எப்படி வந்தார்கள் என்பதற்கு பல கதைகள் உண்டு. இது எங்க ஊரு கதை. அமெரிக்காவுல எந்த ஊருக்கு போனாலும் மண் நிறத்தில்(Brown colour) ஒரு பலகை மாட்டி வைத்து இருப்பார்கள், இது வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரம் (Historic city) என்பதற்கான அடையாளம். எங்கள் ஊரிலும் ஒரு பலகை மாட்டி வைத்து இருக்கிறார்கள்,வரலாறு என்னவென்றால்?
1670 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொன்னு கிடைத்தாலும், கிடைக்காத புதன் கிழமை சுமார் 148 ஆங்கிலேயர்கள் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உட்பட சார்லஸ் டவுனி லேன்டிங்கில், அல்பி மாரேலல் (Albemarle pointe) என்னும் இடத்தில் வந்து இறங்கினார்கள் (இப்பொழுதும் இந்த இடத்தை காணலாம்). வந்தவர்கள் மிக விரைவிலேயே வீடு கட்டி அங்கேயே ஒரு சிறு சமூகத்தை (Colony) உருவாக்கினார்கள். தங்களுக்கு தேவையான உணவையும் அங்கேயே தயாரித்து கொண்டணர், பாதுகாப்பிற்காக தங்கள் வீடுகளைச் சுற்றிலும் மரத்தினாலான வேலியை அமைத்துக் கொண்டனர். இதுதான் வெள்ளைகாரர்கள் கரோலினாவந்த கதை, பிறகு இங்கிருந்து கரோலினாவின் மற்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
அகழ்வாராய்ச்சியாளர்கள் இன்னமும் இங்கு ஆங்கிலேயர், சிவப்பு இனத்தினர் மற்றும் கருப்பு இன மக்களைப்பற்றியும் அவர்கள் பண்பாடு, வியாபாரம் மற்றும் கலை ஆகியவற்றை பற்றியும் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.சரி இப்ப இங்க என்ன இருக்கின்றதுன்னா? குழந்தைகள் கண்டு மகிழ ஒரு சிறு மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்கு கரோலினா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது.
அழகான சிறு குளங்களும் அதில் பறக்கின்ற கொக்குகளும் மிக அழகான காட்சி (அமர்ந்து பார்க்க ஆங்காங்க இருக்கைகள் உள்ளது). நடந்து செல்லும் நடை பாதையின் இருபுறங்களில் பசுமையான மரங்கள் உள்ளன.
80 ஏக்கர் நிலப்பரப்பில், ஆயிரக்கனக்கான அசாலியஸ்(Azaleas), கெமிலியாஸ்(Chamellias) மற்றும் ஓக் (live oak) மரங்களும் உள்ளன. இங்குள்ள தகவல் தொடர்பு மையத்திலேயே ஒரு சிறு அருங்காட்சியகமும் உள்ளது.
இங்கு குழந்தைகள் கொண்டு செல்வதற்கான தள்ளு வண்டி இலவசம், ஆனால் நமக்கு $5 நுழைவுக் கட்டணம். இந்த இடத்தை பற்றி நான் மேலும் சொல்வதை விட நீங்களே மாயோனின் புகைப்படங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
முகவரி: 1500 Old Towne Rd, Charleston.

எழுதியவர்: இன்பம், இனியாழ்.
டம் : மாயோன், ராதை.

Wednesday, July 18, 2007

சார்லஸ்டன் கப்பல் திருவிழா

ஒரு நாள் எங்க ஊர்ல கப்பல் திருவிழா நடந்துச்சு. அப்படின்னா என்னவா? பெரிய பெரிய பாய்மரக் கப்பல்கள் எல்லாம் வரும். நிறைய நாடுகளிலிருந்தும் வரும். ஒரு நாள் நம்ம பருவாச்சியான் போய் ஒரு நாலஞ்சு கப்பலைப் பிடிச்சுக்கிட்டு வந்தாரு.



நல்லா உத்துப் பாருங்க. ஒன்னு இந்தியாவோடது. தரங்கிணி. தரங்கம் அப்படின்னா அலை. தரங்கம்பாடின்னு ஒரு ஊர் ஞாபகம் வருதா? அலை பாடும் ஊர்.



சார்லஸ்டன் துறைமுகம் இந்த நாட்டுக்கு ரொம்பப் பழசு. அந்தக் காலத்துல அமெரிக்காவுக்கு வாற கப்பல் எல்லாம் இங்கதான் வருமாம். இந்த பைரேட்ஸ் கதையெல்லாம் இங்க சொல்லிக்குவாங்க. நிறைய இடங்கள்ள அன்னாசிப் பழம் சிலை வச்சிருப்பாங்க. ஏன்னா அது நட்புக்கு அடையாளமாம். அந்தக் காலத்தில ஆப்பிரிக்காவிலேருந்து வாறவங்க நட்பைக் காட்டுறதுக்கு அன்னாசி கொண்டு வந்தாங்களாம். ஆமாங்க, நாங்க எல்லாரும் ரொம்ப நட்பானவங்க. எங்க ஊரு நிறைய தரம் நட்பான நகரம்னு பேர் வாங்கியிருக்கு. அட, சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேன். பருவாச்சியான் எடுத்த கப்பலைப் பாத்தீங்களா, அதுக்கப்புறம் இதெல்லாம் நம்ம ஊரு சின்னப் படகுகள். மெரினாவுல நிக்கும்.

இதான் சிடி மெரினாவுல சூரியன் மறையுறது. எங்க ஊருல சூரியன் நல்லாதான் இருக்கு!

படங்கள்: பருவாச்சியான்

எழுதியவர்: பனையேறி