Thursday, January 17, 2008
பனை நிலத்தில் பொங்கலோ பொங்கல்!
பனையேறிக்குத் தலைக்கு மேல வேல கெடக்கு. என்னன்னு கேக்குறீங்களா? நம்ம பனை நிலத்துல பொங்கல் கொண்டாடப் போறோமுங்க. சுத்துப்பட்டு கிராமங்கள்ல இருக்க எல்லா மக்களும் வந்து கலந்துக்கிடணும். உங்களுக்காகவே கோலாட்டம், ஒயிலாட்டம், நாடகம், சிறுவர் மாறுவேடம், சொற்பொழிவு, அறுசுவை உண்டி எல்லாம் தயாராகிக்கிட்டே இருக்கு.
உறுப்பினர்களுக்குக் கட்டணம் இல்ல. விருந்தினர்களுக்கு 7 டாலர். நீங்க வர்றதா இருந்தா இங்க ஒரு மறுமொழி குடுங்க, இல்லாட்டி panainilam@gmail.com க்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிடுங்க. மறக்காம, நீங்க எதாச்சும் நிகழ்ச்சி வழங்குறீங்களா (ஆட்டம், பாட்டு, கூத்து, கதை....) அப்படின்னும் சொல்லுங்க. எப்ப, எங்கென்னு சொன்னாத்தான வர்றதுன்னு கேக்குறீங்களா, அதுவும் சரிதான்,
45 Courtenay Drive, Charleston, SC 29401.
January 19th, Saturday, 5.00pm - 9.30pm
இன்னும் என்ன யோசனை, நாளாயிடுச்சு, கிளம்பி வந்து சேர்ற வழியப் பாருங்க. பனையேறிக்கு வேல நெறய கெடக்கு, வர்ட்டா!
பொங்கலோ பொங்கல்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment