Sunday, October 12, 2008

வெள்ளியும், விண்வெளி ஓட ஆட்டமும்.

திங்கள் முதல் வெள்ளி வரை ஆய்வகத்தில் அரிய பணிகள் பல முடித்துவிட்டு!!!! எப்போது வெள்ளி மாலை வரும் என்று என் நண்பர்கள் காத்திருப்பர், மாலை நாலரை மணியிலிருந்தே கைபேசி கதற ஆரம்பித்து விடும். தயாரா.. நான் தயார்.. நீங்கள் தயாரா.. சரி வந்துவிடுங்கள்.. இதற்குத்தனே ஒரு வாரமாய் காத்திருக்கிறேன் இதை விட வேறென்ன முக்கியமான வேலை... கிளம்புங்கள் உடனே என்று ஆர்பரித்து கிளம்பும் நண்பர்கள் கூட்டம். ஏன் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். மாலை ஆய்வக வேலையை முடித்தும் முடிக்காமலும் அவசரமாக இல்லம் வந்து ஆடுகள ஆடையை மாற்றி இனியன், கந்தன், வள்ளி (ஒரு முறை முதல் எழுத்தை மாற்றி வந்தன், கள்ளி என அழைத்துவிட்டேன்), வேலுடையான், அவரின் அண்ணன் விக்ன வினாயகன், கணபதி, மயோன், திருமலையான் மற்றும் பலரும் நாற்பது தேனி தெருவிலிருந்து மாலை சுமார் ஐந்தரை மணிக்கு சார்லஸ்டன் கல்லூரி கதவுள் மைதானம் நோக்கி பறந்து செல்வர். சில நாட்களில் பனையேரியும் வருவார்,

மகிழ்வுந்தே இதற்கென்றே உருவாக்கப் பட்டது போல் மிக மகிழ்ச்சியாய் சார்லஸ்டன் கல்கூன் சாலையில் பயணிக்கும் போது, வரும் காட்சிகளை விவரிக்க நான் ஒருவன் மட்டும் போதாது. வாரக் கடைசி என்பதால் சார்லஸ்டன் கல்லூரி மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் மற்றும் இளம் யுவதிகள் தட்பவெப்ப நிலைக்கு சற்றும் பொருந்தாத உடைகளை அணிந்து செல்வதைக் கண்டு மனம் வருந்தி, நண்பன் அழ ஆரம்பித்து விடுவான்.. மணிரத்தினம் படதிதில் வருவது போல் ஒரே வார்த்தையில் "ஏன்" என்பது போல் பார்ப்பான், நானும் "இங்க அப்படித்தான்" என்பது போல் சொல்லி ஒரு வழியாய் தேற்றி கூட்டிச்செல்வோம். மற்ற மகிழ்வுந்திகளுக்கு நடுவில் நம்முடயதை "இணை நிறுத்தும்" போதே... என்னால் இங்கே வெகு நேரம் நிற்க முடியாது சீக்கிரம் வந்து விடுங்கள் என்று சொல்வது போல் இருக்கும் அது எங்களுக்கு.. மனதிற்குள்ளே ....நீயுமா....என்று கேட்டுக் கொண்டே ஒருவழியாக மகிழ்வுந்துலிருந்து இறங்கியதும் அவரவர்தம் விண்வெளி ஓடத்தை தோளிலே சுமந்து இறகுப்பந்தை அடிக்க, ஒரு சிறிய ஓட்டப்பயிற்சி செய்து கதவுள் மைதானத்தை அடைவோம். இல்லையெனில் ஆடுகளம் கிடைப்பது அரிதாகி விடுமே.

இவ்வுலகம் போட்டிகள் நிறைந்தது என்பது நாம் தெரிந்ததே...நம் பக்கத்து நாட்டுக்காரனுக்கும் மைதானத்தை திறப்பவனுக்கும் வெள்ளி தோரும் சண்டை நடக்குமாம்.. மெதுவாக ஒருவனைக் கூப்பிட்டு என்ன சண்டை என்று கேட்டேன்... ஐயா... இவங்க ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..காலையில ஆறறை மணிக்கே கதவ திறக்கச் சொல்றாங்க....இவங்க தொல்லை தாங்க முடியலயா..என்றார்..

ஆடுகளம் நம்மூர் அளவிற்கு தரமில்லை என்பதையெல்லாம் சகித்துகொண்டு, வீரனுக்கு மைதானம் முக்கியமில்லை, வெற்றிதான் என்றெண்ணிக் கொண்டு ஒருவழியாக ஆடுகளத்தை பிடித்துவிட்டால் ஆட்சியை பிடித்தது போல் மனம் மகிழும். எனக்கு இளகிய மனது, இந்த இறகுப் பந்து படப் போகும் பாட்டை நினைத்தால் கண்ணீர் வரும், ஆனால் என் செய்வது விளையாட்டு என்று வந்தபின் எதையும் இலகுவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எங்கள் ஊரில் ஐந்து நட்ச்சத்திர விடுதியில் கீத் சேதியுடன் பில்லியர்சும், மரப் புலியுடன் (Tiger wood) கால்ஃப் விளையாட்டும் விளையாடி அவர்களையெல்லாம் விரட்டி அடித்தவன் என்றெல்லாம் நானே என்னைப் பற்றி சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை....

விளையாட்டின் மூலம் நல்ல கருத்துகளை, பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ளலாம், இந்த ஆட்டத்தின் ஆரம்பம் எனக்கு பிடிக்கும் ஏனென்றால் தொடக்கமே "எல்லோரையும் காதல் செய்" என சொல்லியபடி முதல் பந்தை வீசுவோம்...ஆனால் பிறகு, ஒருவரை காதல் செய், இருவரை செய் என் சொல்லும்... இதில் எனக்கு உடன்படில்லை.... நான் கனியன் பூங்குன்றனாரின் பக்கம்...அனைவரும் உறவே, எனவே அனவரையும் அன்பு செய் என்பதே.....

போட்டி என்று வந்தபின் ஒருகுழுவிற்கு வெற்றியும், மற்றொன்றுக்கு தோல்வியும் என்பது உலக நியதி..ஆனால் நாங்கள் விளையாடும் போட்டியில் வெற்றி தோல்வியை கணக்கில் வைப்பதில்லை..இதன் மூலம் விட்டுக்கொடுத்தலும், நட்பும் மட்டுமே விளைகிறது... போட்டி என்பது ஆரோக்கியமான போட்டியாக இருக்கவேண்டும், அதே சமயம் ஆரோகியத்தை வளர்ப்பதாகவும், காப்பதுவுமாக இருக்க வேண்டும் என நினைத்தே நாங்கள் இதை விளையாடுகின்றோம்..

பொதுவாக விளையட்டு தொடங்கும் முன், வீரர்கள் விளையாடுவதற்கேற்ப தங்கள் உடலை " மேலே மித சூடு" செய்து தயார்ப்படுதிக் கொள்வது வழக்கம், நாங்களும் அவ்வாறு செய்வதுண்டு, சில சமயம் ஆட்டம் தொடங்கியபின், ஒரு அணியினர் சரியாக விளையாட வில்லையெனில்,அவர்கள் இது "மெலே சூடு" என்று சமாளித்துவிடுவர், விளையாட்டுதானே என் கவனமில்லாமலிருந்தால், சில சமயம் புள்ளிகளை மாற்றிக் கூறி குழப்பிவிடுவர், உதாரணமாக எட்டு/பத்து என்பதை மாற்றி, குறைந்த புள்ளியை நமதாக்கி அதிக புள்ளிகளை அவர்கள் எடுத்தது போல் தோற்றத்தை ஏற்படுத்துவர்....எனவே விளையாட்டுதானே என விளையாட்டுத்தனமாக இருந்து ஏமாந்து விடக் கூடாது.... என்ன செய்வது உலகில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர்...வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் பாடலான ...ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே....பாடலை அடிக்கடி பாடி நினைவில் வைதுக்கொள்ளுங்கள்...

மாயோனுக்கு இந்த ஆட்டம் மிகவும் பிடிக்கும், ஒருவேளை "எல்லொரையும் காதல் செய்" என்று துவங்குவதாலோ என்னவோ...

ஆரம்பத்தில் கன ரக விண்வெளி ஓடத்தில் விளையாட கடினமாக இருந்தது,பின் மயோன் இலகுரகத்தின் சிறப்புகளைக் கூறினார், மேலும் மட்டமான மட்டையால் தான் நாங்கலெல்லாம் சரியாக ஆடவில்லை என நினைத்து மயோனிடம் நல்ல மட்டை வாங்கித்தருமாரு கேட்டோம், அவரும் கோட்டின் மேல் (on line) வர்த்தகம் மூலமாக இரண்டயிரம் ரூபாய் அளவிற்கு, நம்மூர் மதிப்ப்பில்....வாங்கிக் கொடுத்தார்..அதிலிருந்து சுமாராக ஆடிக்கொண்டிருந்த நான் மோசமாக ஆட ஆரம்பித்துவிட்டேன்....இதிலுருந்து நான் கற்றது உள்ளதும் போச்சுடா.... கண்ணா என்ற பழமொழி....பிறகு காலணிதான் சரியில்லை, அதனால்தான் சரியாக விளையாடவில்லை என்றார்..... அதுவும் சரிபட்டுவரவில்லை என்றால் ஆடுகளத்தை மாற்றலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

நாம் நன்றாக விளையட வேண்டுமென்பதற்காக நமக்கெல்லாம் விண் ஓடம் வாங்கிக் கொடுத்தாரே என்று அவரிடம் உடனே, மூன்று மாதம் கழித்து, காசோலையை கொடுத்தேன்..அவர் வாங்கவில்லயே...நானும் நட்பு வேறு, பணம் வேறு என்று அவரிடம் வாதாடினேன்...அந்த கசோலையை கடைசிவரை வாங்கவில்லை அவர், இந்த காலத்திலும் இப்படி ஒருவரா என எண்ணி மகிழ்ந்தேன்.... சரியென்று அதற்கு அடுத்த நாள், சிற்றுண்டி சலையில் இருக்கும் தனியங்கி இயந்திரத்தில் பணமாக எடுதுக் கொடுத்ததும் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்....

நம் இனியன் பேருக்கு ஏற்றபடி அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவதிலேயே வேலையாயிருப்பார், இனியாளிடம் விளையடி விட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு, பக்கத்தில் நடக்கும் பெண்கள் கைப்பந்து போட்டியை பார்க்க கிளம்பிவிடுவார். இளவரசரும் இவருக்குத்துணையாக கிளம்பிவிடுவார்....கேட்டால்..ஆளை பார்க்கவில்லை.. ஆட்டத்தைத்தான் பார்க்கின்றேன் என்பார்....

எங்கள் குழுவில் இருக்கும், வேலுடையானின் ஆர்வம் அளப்பிடதற்கரியது,ஒரு நாள் காலில் சிறிய காயம் பட்டுவிட்டது,ஆனால் அதன் வலியை காலணியோடு இருகக் கட்டிப் போட்டுவிட்டு, ஓடத்தை தோளில் சுமந்து நடந்து சென்று அன்று ஆடிய ஆட்டம், அப்பப்பா... இன்றெல்லாம் பார்த்துகொண்டே இருக்கலாம்..இது அவனின் தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்...

கந்தனும் வள்ளியும் ஒரே அணியில் இருந்தாலும் சரி அல்லது அவர்கள் தனியே இருந்தாலும் சரி, அவர்களை வெல்லவே முடியது.

ஆட்டத்தில் இறங்கிவிட்டால், உலகமே தெரியாது, சில சமயம் கைபேசி ஒலிக்கும், இடி இடிக்கும்,மழை பொழியும், நிலம் அதிரும் அப்போதுகூட ஆட்டம் தொடரும். ஒரு வழியாய் மைதானத்துக்காரன் கம்பை பிடுங்குவான்...அப்போதுதான் லேசாக நேரத்தை பார்ப்போம்..ஏதோ பூமிப் பந்தையே வெற்றிகொண்டது போல் மிடுக்கு நடைபோட்டு வேளியே மகிழ்வுந்தை நோக்கி வரும்வோம்...

சாலையில் சரியாக சிவப்பு விளக்கு எரிந்தவுடன் எங்களையெல்லாம் கை பிடித்து அழைதுச்செல்வார் இனியன், சாலையின் பக்கவட்டு வாகனங்கள் நாம் தான் தவறாக வந்து விட்டோமா என எங்களைக் கண்டு குழம்பிப்போய் நின்று வழிவிடும், மறுபடியும் சாலையில் வரும் போது கண்ட காட்சிகள்...அதே கண்ணீர், அதே ஆறுதல்..சிலவற்றை எத்தனை முறை பார்த்தாலும், முறைத்தாலும் சலிப்பதில்லை.

வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு வந்து, நீராடி, கணவன்மார்கள் கணினி முன் மீண்டும் அரிய பணி ஆற்றுவது போல், காய்கறி, குறிப்பாக வெஙகாயம் நறுக்க,பயந்து, பாவலா செய்து கொண்டு அமர்த்திருப்பர், மனைவியிடம் ஆராய்ச்சி பேப்பர் படிக்கிறேன் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் "கோட்டின் மேல்" மூலம் வரும் நாளிதழை பதினெட்டாவது முறை படித்துகொண்டிருப்பர்.. அடுத்து வெள்ளி உடனே வர வேண்டுமென்றெண்ணியபடியே

ஏறத்தாழ ஒன்றறை ஆண்டுகளாக ஆடியும், எதோ இன்றுதான் புதிதாய் விளையடுவதை போன்றே எஙகளுக்கு வெள்ளியன்று மாலையில் கிடைக்கும் ஆர்வதிற்க்காகவே பல வெள்ளிகள் தோன்ற வேண்டுகிறேன்..

விண்வெளி ஓட ஆட்டம் வெள்ளியில் மட்டும்தானா...

சிவ பாரதி...

7 comments:

Anonymous said...

இப்போது திங்கள் காலை 6 மணி. குழந்தைகள் எழுவதற்கு முன்னால் சிறிதுநேரம் கணினி முன் உட்கார்ந்து தினச்செய்திகள் படிக்க ஆரம்பித்தேன். அதற்குமுன், "ச்சே" இன்று திங்கள் தானா? வெள்ளிக்கிழமை கிடையாதா? என மனதில் நினைத்துக்கொண்டே பனைநிலத்தை திறந்தால் உங்கள் கட்டுரை. ஆகா! என்ன ஒற்றுமை! நம் அனைவருக்கும் ஒரேமாதிரியான நினைவுகள்.
- மாயோன்

Anonymous said...

எங்க ஊர் விகடகவிக்கு (கோழிக் கவிஞர் என்ற அடைமொழியுடனும் அழைக்கப்படுவார்) "சொர்க்கமே என்றாலும் அட நம்மூரப் போல வருமா" என்பது போல "மூச்சா குப்பத்து" (மூ. சா. குப்பம்) தெருக்களில் ஆடியவருக்கு சார்ல்ஸ்டன் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கு எப்படிப் பிடிக்கும்? என்ன செய்வது? எதோ போனால் போகிறதென்று நண்பர்களுக்காக ஆடுகுறார்.

Anonymous said...

சிவபாரதி....இறகுப் பந்து விளையாட்டினைப் பற்றிய தங்களின் இப்பதிவு ரசிக்கத்தக்க
பதிவு. ரசனை ஆட்டத்தில் மட்டுமல்ல அனைத்திலும்தான் என்பது உங்கள் பதிவில் தெரிகிறது.....

//திங்கள் முதல் வெள்ளி வரை ஆய்வகத்தில் அரிய பணிகள் பல முடித்துவிட்டு!!!! //

அரிய பணிகள்ன்னு எதை சொல்றீங்க? நம்பிட்டோம் நம்பிட்டோம்!!

// குறிப்பாக மாணவிகள் மற்றும் இளம் யுவதிகள் தட்பவெப்பனிலைக்கு சற்றும் பொருந்தாத உடைகளை அணிந்து செல்வதைக் கண்டு மணம் வருந்தி, நண்பன் அழ ஆரம்பித்து விடுவான்.. //

எனக்குத் தெரிந்து வெயில் காலத்திற்குப் பொருந்துகிற அடைகளை அணிவதைத்தான் பார்க்கிறோம்!! அதையே ஊக்குவிக்கிறோம்! வெயில் காலத்தில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது எங்களைப் போன்றவர்களுக்கு தெரியும்.

//ஆடுகளம் நம்மூர் அளவிற்கு தரமில்லை என்பதையெல்லாம் சகித்துகொண்டு//

உங்க சகிப்புத் தன்மைய நினச்சா ரொம்ப புல்லரிக்கிது. இதையெல்லாம் சகிச்சுகிட்டு விடாம ஆடுறீங்களே.... உங்கள பாராட்டியே ஆகணும்.

//எனக்கு இளகிய மனது//
தட்பவெப்பனிலைக்கு சற்றும் பொருந்தாத உடைகளைப் பற்றி தங்களின் ஆராய்ச்சிகளை படிக்கும் போதே தெரிந்து விட்டது எவ்வளவு இளகின மனதென்பது....

//மேல் வர்த்தகம் மூலமாக இரண்டயிரம் ரூபாய் அளவிற்கு, நம்மூர்
மதிப்ப்பில்....வாங்கிக் கொடுத்தார்..அதிலிருந்து சுமாராக ஆடிக்கொண்டிருந்த நான் மோசமாக ஆட ஆரம்பித்துவிட்டேன்..//

இறகுப் பந்து உலகத் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்த தங்களை முன்னூறாம் இடத்திற்கு தள்ளியது அந்த மாயோன் வாங்கித் தந்த மட்டையே என்பது ஊரறிந்த ரகசியம் அல்லவா. சூழ்ச்சி பண்ணிட்டாரு.

//வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு வந்து, நீராடி, கணவன்மார்கள் கணினி முன் மீண்டும் அரிய பணி ஆற்றுவது போல், காய்கறி, குறிப்பாக வெஙகாயம் நறுக்க,பயந்து ,பாவலா செய்து கொண்டு அமர்த்திருப்பர், மனைவியிடம் ஆராய்ச்சி பேப்பர் படிக்கிறேன் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் கோட்டின் மேல் மூலம் வரும் நாளிதழை பதினெட்டாவது முறை படித்துகொண்டிருப்பர்.. அடுத்து வெள்ளி உடனே வர வேண்டுமென்றெண்ணியபடியே//

வீட்டுக்கு வீட்டு வாசப்படி......


சிவபாரதி... பதிவே முத்தாக வந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி.

அன்பன்

கந்தன்

Anonymous said...

மாயோனுக்கு ஆடுகளத்தில் ஏதாவது காதல் கீதல் இருந்தால் சொல்லிடுங்க. வீட்டுக்கு வந்ததும் சுலுக்கெடுத்துடுறேன்.
-ராதை

Anonymous said...

சிவபாரதி கலக்கிட்டீங்க .... மிக அருமை .. ஆனால் ஏதோ ஒன்றை மறந்து விட்டதுபோல் தெரிகிறதே.. அங்கு வந்த இந்திய பெண்களை பார்த்ததைதான் சொல்கிறேன்.. ஆட்டத்தை எங்கு கவனித்தீர்கள் ??!!

ராதை, கவலை வேண்டாம் .. கந்தனையும் நான் நம்புவது இல்லை.. கூடவே செல்கின்றேன்.. மாயோன் பற்றியும் தவறாமல் உங்களுக்கு update செய்கின்றேன் ....

வள்ளி

Anonymous said...

சிவபாரதி,
உங்களுக்கு வாழ்க்கையே ஒரு விளையாட்டுதான்!

நான்கூட நீங்கள் ஏதோ இறகுப்பந்து விளையாடத்தான் போகிறீர்கள் என்று இத்தனை நாட்களாகத் தப்பாக நினைத்துக்கொண்டிருந்து விட்டேன்!
-பனையேறி

AMAL said...

தமிழ் மொழியை ஆய்வு செய்வோர், அதற்கான தரவுகளை பல்வேறு தளங்களிலும் தேடவேண்டியுள்ளது. திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் தமிழ் விளங்குகின்றது என்ற கொள்கை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.கி.பி பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகம் வந்த ஐரோப்பியர்கள்தாம், தமிழைக் கற்று தமிழின் சிறப்பைத் தமிழருக்கே உணர்த்தினர். தமிழர்கள், உலகின் மேற்குத் திசையை நோக்க, ஐரோப்பியர்களே, அவ்வாயிலைத் திறந்து விட்டனர். அதுவரையில் தமிழ் மொழியை மட்டுமே அறிந்திருந்த தமிழர், மேலை மொழிகளையும் கற்கத் தொடங்கினர்.
வீரமாமுனிவர், கால்டுவெல் கங்காணியார், போப்பையர் போன்றோர், உலக மொழிகளுக்கில்லாத தனிச் சிறப்பு, தமிழுக்கு உண்டென்பதை உலகிற்கு உணர்த்தினர். மேலும் ஐரோப்பிய மொழிகளில் பலவாறு தமிழ்ச்சொற்கள் விரவிக் கிடப்பதையும் கண்டறிந்து வெளிப்படுத்தினர். ஆனால் முறையான ஆய்வுகள் அவர்களால் மேற்கொள்ளப்படவில்லை. உலக மொழிகளில் தமிழின் தாக்கங்கள் உண்டென்ற உண்மை ஐரோப்பியர்களால் வெளிப்படுத்தப்பட்டது.
தமிழின் வரலாற்றை, தொல்காப்பியம் மற்றும் கடைக்கழக இலக்கியங்களைக் கொண்டே கணித்தனர். தொல்காப்பியத்துக்கு முந்திய தமிழ்மொழியின் வரலாறு அறியப்படவில்லை. அதற்கான முயற்சிகளிலும் அறிஞர்கள் ஈடுபடவில்லை. முதன் முதலில் வணக்கத்திற்குரிய ஈராஸ் பாதிரியார், தமிழைச் சிந்துவெளியில் கண்டார். தமிழின் எல்லை முதன்முதலில் அப்போதுதான் விரிவடைந்தது.
கடந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், மெசப்பொத்தோமியாவின் வரலாற்று நகரங்கள் பல அகழ்வாய்வு செய்யப்பட்டன. அதிலிருந்து கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்வேறு செய்திகள் வெளிப்பட்டன. அவைகளில் சிறப்பானவை அக்காலத்திய இலக்கியங்களே எனலாம். சிந்துவெளியில் தனிச் சொற்களாக அறியப்பட்ட நிலையில், மெசப்பொத்தோமியாவில் இலக்கியங்களாகவே கிடைத்தன. அவை முழுமையாகக் கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்தவை பலநூறு பக்க அளவில் அறியப்பட்டுள்ளன.
அவை யாவும் ஆப்பு எடுத்து எழுத்து வடிவில் ( ) உள்ளன. அவைகளை ஆய்வு செய்த மேற்கத்திய அறிஞர்கள், அவைகளை நூல் வடிவில் இன்று வெளிக்கொணர்ந்துள்ளனர். அவ்விலக்கியங்கள் கூறும் செய்திகளைப் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்து, தமது ஆய்வுகளையும் நூல் வடிவில் வெளியிட்டுள்ளனர். ஆனால் அச்செய்திகளின் ஆளத்தையும், மூலத்தையும் இன்றும்கூட அறிஞர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. குறிப்பாக அவ்விலக்கியங்களைத் தந்த மக்கள் யாவர்? அவர்களது முன்னோர்கள் யாவர்? அவர்கள் பேசிய மொழி யாது? அம்மொழியின் மூலம் எங்குள்ளது? என்ற வினாக்களுக்கு இதுவரை அவர்களால் விடை காண இயலவில்லை. அவ்விலக்கியங்களில் காணப்படும் பல நூறு சொற்களுக்கான பொருளையும் அவர்களால் தர இயலவில்லை.
சுமேரிய, அக்காடிய, எபிறேய, போனீசிய, எகிப்திய மொழிகளிலும் மேலும் பல மொழிகளிலும் அவ்விலக்கியங்கள் இன்று அறியப்பட்டுள்ளன. அவ்விலக்கியங்கள் பற்றிய எந்த ஆய்வையும் இதுவரையில் எந்தத் தமிழ் அறிஞரும் மேற்கொள்ளவில்லை. இவ்விலக்கியங்கள் பற்றிய எந்தச் சிந்தனையும் தமிழறிஞர்களிடம் காணப்படவில்லை.
1. தொல் தமிழரின் வரலாறு
2. தொல் தமிழரின் பண்பாடு, நாகரிகம்
3. தொல் தமிழரின் அறிவியல், வானியல்
4. தொல் தமிழரின் சமயம்
5. குமரிக் கண்டம், அதன் அழிவு
6. தமிழரின் மேலைநாட்டுப் பரவல்
ஆகியவை குறித்த வரலாற்றுப் பதிவுகளை, தமிழ் இலக்கியங்களில் முழுமையாகக் காண இயலவில்லை. மேற்கண்ட செய்திகள் யாவும், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவை தமிழையும் தமிழ் இனத்தையும், தமிழ்நாட்டு வரலாற்றையுமே குறிப்பிடுகின்றன என்பதை மேலை நாட்டு அறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இனி, தமிழரின் வரலாற்றை மீட்டெடுக்கவேண்டிய குறிப்புகளை, மேலை நாட்டு இலக்கியங்களில் தேடினால், அங்கு அவை கிடைக்கும். இதுவரையில் வெளிவராத புதிய செய்திகளைத் தமிழ் வரலாறு பெறும். அம்முயற்சியின் முதல் படியாக எபிறேய மொழியும், அம்மொழி பேசிய மக்களும் ஆய்வுக் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் வெளிப்பாடுகள், வியக்கத்தக்க வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் உள்ளன.
எபிறேய மொழிக்களத்திலேயே ஏராளமான தரவுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் உருவானவைகளே ஆசிரியரின் பல்வேறு ஆய்வு நூல்களாகும். தொடர்ந்து மற்ற இலக்கியங்களையும் ஆய்வு செய்யும் பணியில், நூலாசிரியர் முனைப்புடன் உள்ளார். அதற்கான காலம் விரைவில் கனியும் என நம்பலாம் KUMARIK KANDAM (LEMORIA CONTINENT)
http://sitebuilder.yola.com/ide/index.jsp?flow=first
Many a book has been written under the kname kumarik kandam or The Lemoria Continent anchored in the notes of Iraiyanar Ahapporul (A Thamil Literary work), and the quotes from Silappadhiharam, the oldest Thamizh epic existing. The in